- Joined
- Jun 14, 2022
- Messages
- 1,897
- Points
- 133
உறக்கம் தந்திடும் உறவுகள் வேண்டும்,
உண்மைகள் அடங்கிய உலகொன்று வேண்டும்.
உதிரத்தில் ஒன்றாய் ஒற்றுமை வேண்டும்,
உதிரி பூவிற்கும் உணர்ச்சி இங்கு வேண்டும்,
தன்னிலும் மறந்திட தடை ஒன்று வேண்டும்,
தவறினை அறிந்திட மனம் ஒன்று வேண்டும்,
தகுதிகள் என்றல் நீத்தல் வேண்டும்,
தவிடாய் தகாதவை அழிந்திட வேண்டும்..
குறைவின்றி குணங்கள் உயர்த்திட வேண்டும்,
குறை சொல்லும் குரலுக்கு கும்பிட வேண்டும்,
குழந்தையாய் நான் திரும்பிட வேண்டும்.
குளத்து தவளையின் குரலும் இனித்திட வேண்டும்.
சகிதம் ஏற்கும் சமத்துவம் வேண்டும்..
சகவம் என்றும் சமூகத்தில் வேண்டும்.
சலனங்கள் எல்லாம் தொலைந்திட வேண்டும்.
சம்மதம் என்றால் ஏற்றிடவேண்டும்.
காரணமின்றி காரணங்கள் தவிர்த்திட வேண்டும்..
காணும் உலகில் காதல் இங்கு வேண்டும்,
காற்றின் மாசினை கழித்திட வேண்டும்.
கார்மேகம் கருமழை பொழிந்திட வேண்டும்.
ஊமையும் உணர்ச்சியாய் பேசிட வேண்டும்.
ஊனம் குறையல்ல என உணர்ந்திட வேண்டும்.
ஊக்கங்கள் நெஞ்சினில் ஊடுருவ வேண்டும்.
ஊன்றுக்கோள் உதவியின்றி நடந்திடவேண்டும்
இரக்கம் காட்டும் இருதயம் வேண்டும்,
இழைந்து உறங்கிட மடி ஒன்று வேண்டும்.
இறுதி அழைப்பில் இனிமைகள் வேண்டும்.
இமைக்கும் நொடியில் இனிதாய் அது அமைந்திட வேண்டும்.
உண்மைகள் அடங்கிய உலகொன்று வேண்டும்.
உதிரத்தில் ஒன்றாய் ஒற்றுமை வேண்டும்,
உதிரி பூவிற்கும் உணர்ச்சி இங்கு வேண்டும்,
தன்னிலும் மறந்திட தடை ஒன்று வேண்டும்,
தவறினை அறிந்திட மனம் ஒன்று வேண்டும்,
தகுதிகள் என்றல் நீத்தல் வேண்டும்,
தவிடாய் தகாதவை அழிந்திட வேண்டும்..
குறைவின்றி குணங்கள் உயர்த்திட வேண்டும்,
குறை சொல்லும் குரலுக்கு கும்பிட வேண்டும்,
குழந்தையாய் நான் திரும்பிட வேண்டும்.
குளத்து தவளையின் குரலும் இனித்திட வேண்டும்.
சகிதம் ஏற்கும் சமத்துவம் வேண்டும்..
சகவம் என்றும் சமூகத்தில் வேண்டும்.
சலனங்கள் எல்லாம் தொலைந்திட வேண்டும்.
சம்மதம் என்றால் ஏற்றிடவேண்டும்.
காரணமின்றி காரணங்கள் தவிர்த்திட வேண்டும்..
காணும் உலகில் காதல் இங்கு வேண்டும்,
காற்றின் மாசினை கழித்திட வேண்டும்.
கார்மேகம் கருமழை பொழிந்திட வேண்டும்.
ஊமையும் உணர்ச்சியாய் பேசிட வேண்டும்.
ஊனம் குறையல்ல என உணர்ந்திட வேண்டும்.
ஊக்கங்கள் நெஞ்சினில் ஊடுருவ வேண்டும்.
ஊன்றுக்கோள் உதவியின்றி நடந்திடவேண்டும்
இரக்கம் காட்டும் இருதயம் வேண்டும்,
இழைந்து உறங்கிட மடி ஒன்று வேண்டும்.
இறுதி அழைப்பில் இனிமைகள் வேண்டும்.
இமைக்கும் நொடியில் இனிதாய் அது அமைந்திட வேண்டும்.
Last edited: