M
Mathangi
Guest
என் அன்பு தாயே,
அகிலம் போற்றும் அன்னையே !
பாரம் என தெரிந்தும்
வரமாய் நினைத்து
பத்து மாதம் சுமந்தாயே !
தன் வலி பாராமல்
தரணியை காண
தங்கமென பெற்று எடுத்தாயே !
அல்லும் பகலும் தூங்காம
தாலாட்டி, சீராட்டி
அரவணைப்பை தந்தாயே !
பட்டினியா கிடந்தாலும்
பச்சை மண்ணு நானுன்னு
தன் பசிய மறந்து
என் பசிய தீர்க்க பாலூட்டி வளர்த்தாயே !
பச்சிளம் குழந்தையில்
எட்டி எட்டி உதைத்தாலும்
என் பிள்ளை நீயின்னு
முத்தத்தாலே கொஞ்சிடுவாயே !
வறுமையில் நீ இருந்தாலும்
பண்டிகையின்னு வந்தா
புது பட்டுடுத்தி அழகு பார்ப்பாயே !
பக்குவமாய் நான் வளர
அம்மா உன் அன்பு வளர்ப்பில்
உன் வாழ்வை எனக்காய் அர்பணித்தாயே !
அம்மா.......உன்னை போல் ஓர் உறவும்
இவ்வுலகில் ஒப்பிட இயலாதே.....
என் அன்பு தாயே.....
ஏழேழு பிறப்பிற்க்கும் நீயே என் தாயே......
அகிலம் போற்றும் அன்னையே !
பாரம் என தெரிந்தும்
வரமாய் நினைத்து
பத்து மாதம் சுமந்தாயே !
தன் வலி பாராமல்
தரணியை காண
தங்கமென பெற்று எடுத்தாயே !
அல்லும் பகலும் தூங்காம
தாலாட்டி, சீராட்டி
அரவணைப்பை தந்தாயே !
பட்டினியா கிடந்தாலும்
பச்சை மண்ணு நானுன்னு
தன் பசிய மறந்து
என் பசிய தீர்க்க பாலூட்டி வளர்த்தாயே !
பச்சிளம் குழந்தையில்
எட்டி எட்டி உதைத்தாலும்
என் பிள்ளை நீயின்னு
முத்தத்தாலே கொஞ்சிடுவாயே !
வறுமையில் நீ இருந்தாலும்
பண்டிகையின்னு வந்தா
புது பட்டுடுத்தி அழகு பார்ப்பாயே !
பக்குவமாய் நான் வளர
அம்மா உன் அன்பு வளர்ப்பில்
உன் வாழ்வை எனக்காய் அர்பணித்தாயே !
அம்மா.......உன்னை போல் ஓர் உறவும்
இவ்வுலகில் ஒப்பிட இயலாதே.....
என் அன்பு தாயே.....
ஏழேழு பிறப்பிற்க்கும் நீயே என் தாயே......