Mathangi
Well-known member
- Joined
- Aug 31, 2023
- Messages
- 242
- Points
- 83
சித்திரம் தீட்டுதடி
எந்தன் சிந்தனையில்
உந்தன் அழகு,
சித்திரம் தீட்டுதடி....
இது கர்வமா? இல்லை காந்தமா?
உந்தன் விழி காட்டும் விந்தை என்னடியோ?....
மலர் கொண்ட பூவையே!
மலரும் ஏங்கிய பாவையே!
இம்மலரும் வெட்கம் கொண்ட
கருவிதான் என்னடியோ?
உந்தன் கரு நிற கூந்தல்
கலைந்திருதலிலும்,
தென்றல் தீண்டலிலும்,
புது கவி ஒன்று தீட்ட
தூண்டுவது என்னடியோ?
பிரம்மன் படைத்தானா?
படைத்து,
பிரம்மிப்பில் வீழ்ந்தானா?
அந்த ரகசிய செய்தியை
கொஞ்சம் எந்தன் செவிக்குள்ளும் கூறடி
எந்தன் அழகு தேவதையே !
Last edited: