- Joined
- Jun 14, 2022
- Messages
- 1,902
- Points
- 133
கனவே கனவே..
அவள் பெயர் மேகா, அவள் அதிகம் யாரிடமும் பேசமாட்டாள். அன்னை இல்லை, தந்தை மட்டுமே உலகம் என வளர்கிறாள்.
அவளுக்கு நெருங்கிய தோழி/ தோழன் என்றால் அவள் எழுதும் "டைரி " மட்டும்தான். தன்னிலமை, தவிப்பு, தனிமை என்று எதையும் ஒன்றும் மறைக்காமல் மறக்காமல் தன் " டைரி" இடம் சொல்லி விடுவாள். யாரையும் நம்பாதவள் தன்னுடைய "டைரி" தவிர.. டைரி மட்டும்தான் அவள் வாழ்வின் அங்கம்..
இப்படி நகர்ந்து கொண்டே சென்ற அவள் நாட்களில் ஒரு புது வித நாட்கள் அவளிடம் வந்து சேர்ந்தது.
அதே ஊரில் மலை அடிவாரத்தில் ஒரு கல்லூரி..அந்த கல்லூரியில் முதலாம் ஆண்டுஅவள் சேர்ந்தாள்..
பெண்கள் விடுதியில் தங்கி படித்தாள்.
கல்லூரி விட்டு நடந்து செல்ல வேண்டும் விடுதிக்கு. நடந்து செல்லும் பாதையில் இரு பாதை பிரியும் . ஒன்று ஆண்கள் விடுதி செல்லும் பாதை .. இன்னொன்று பெண்கள் விடுதி செல்லும் பாதை..
அங்குதான் அவனும் வேறு ஊரில் பள்ளி படிப்பை முடித்து விட்டு சேர்ந்தான். இந்த இரு பாதைக்கு இடையில் ஒரு பெரிய மரம் இருக்கும்..அந்த மரத்தடியில் ஒரு Bench போன்ற இருக்கை இருக்கும்..
அங்குதான் மேகா அதிகம் உட்கார்ந்து தனிமையை எழுதுவாள்.
அதே கல்லூரியில் வேறு ஒரு ஊரில் இருந்து பள்ளி படிப்பை முடித்து வந்து சேர்ந்தான் வினோத்.
புது இடம் , புது கல்லூரி என அவனுக்கு தயக்கம். யாரிடமும் பேசுவதிலும் அவனுக்கு தயக்கம்..
கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டால் திக்குவாய் பேச்சுதான் அவனுக்கு வரும். அதை நண்பர்கள் கேளி செய்வார்கள் என்று அதிகம் யாரிடமும் இவன் பேசுவதில்லை..
இருபாலர் படிக்கும் கல்லூரி.. வெவ்வேறு கோணங்களில் வாழும் மாணவர்கள்.. என்றுமே தனிமையை விரும்பும் மேகா. எதையுமே சேர்த்துக்கொள்ளமால் விலகி இருக்கும் வினோத்..
மாதம் ஒருமுறை மேகா தந்தை வந்து பார்த்துவிட்டு மகளுக்கு தேவையானதை வாங்கிக்கொடுத்து விட்டு செல்வார். அவர்கள் இருவரின் சிறிய உரையாடலும் அந்த மரத்தின் அடியில் உள்ள இருக்கையில்தான்.
வினோத் படிப்பில் படுச்சுட்டி. ஆனால் அதை காட்டிக்கொள்வதில்லை. அலட்டிக்கொள்ளவதுமில்லை.
தான் உண்டு தன் வேலை உண்டு என்றே நகரும் அவன் நாட்கள்..
சில மாதங்கள் செல்ல மற்ற மாணவர்கள்போல் அல்லாமல் வினோத் தனியே இருப்பதை மேகா கவனித்தாள். ஒருவேளை இவனும் நம் போல் தனிமையை விரும்புபவனா? என அவளுக்குள் ஒரு கேள்வி. ஆனால் கேட்கமாட்டாள்..
ஒருநாள் கல்வி நேரம் முடிந்து இருவரும் விடுதிக்கு நடந்து செல்லும் வேலையில் வினோத் மேகாவை கடந்து சென்றான்..
மேகா -"வினோத்"
வினோத் திரும்பினான்..
மேகா- " உங்கள் புத்தகத்தில் இருந்து இந்த காகிதங்கள் கீழே விழுந்தது" , என கீழே கிடந்த காகிதங்களை எடுத்துக் கொடுத்தாள்.
வினோத் - " Thanks " என நடந்தான்.
மேகா இதையும் அவளுடைய "டைரியில்" குறிப்பிட்டு இருந்தாள்.
மலை அடிவாரத்தில் மரத்தடியில் அழகிய தென்றல் காற்றுடன் மனம் விட்டு பேச டைரியை விரும்புவதே அவளின் தனிப்பட்ட விருப்பம்..
டைரியில் ஆங்காங்கே சிறு சிறு கவிதைகள் என நிரம்பி டைரியும் வண்ணக் கோலத்தில் இருக்கும்..
முதலாமாண்டு முடிந்தும் வினோத்திற்கும் மேகாவிற்கும் எந்த வித மாற்றங்களும் இல்லை.
இரண்டாம் ஆண்டு நடந்து கொண்டிருந்த வேளையில் ஒரு பேச்சு போட்டி தேர்வுக்காக பெயர்கள் தரவேண்டும்..8 பேர் குழுவாக, 6 பெயர்கள் வந்தாலும் 7 வதாக மேகா வேண்டா வெறுப்பாக தன் பெயராக இணைத்துக்கொண்டாள். 8 வதாக யார் என எதிர்பார்க்கும் நேரத்தில் யாரும் பெயர் அறிவிக்கவில்லை..
ஏமாற்றத்துடன் சற்று திரும்பும் நேரத்தில் " வினோத்" என்ற பெயர் அறிவிக்கப்பட்டதும் அவளுக்கு தெரியாமல் ஒரு சிறு புன்னகை அவள் முகத்தில்..
இந்த போட்டிகள் வேறு கல்லூரியில் நடைபெறும்.ஜோடி ஜோடியாக தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.. 3 ஜோடிகள் தேர்வு ஆகிய பின் நான்காம் ஜோடி வேறு வழி இல்லாமல் " வினோத் - மேகா"
வினோத் - " மேகா "
மேகா - " சொல்லுங்க வினோத்"
வினோத் - " எனக்கு கொஞ்சம் திக்குவாய், சரியா பேசவராது. "Emotional ஆகிட்டா ஓவரா திக்கும். நான் பேச ஆசைப்படுறேன். அதுக்குதான் என் பேர் கடைசியா கொடுத்தேன். உனக்கு ஜெயிக்கணும் இந்த போட்டியில நினைச்சா வேற ஆள Choose பண்ணிக்கோ "
மேகா- " நான் ஜெயிக்கணும் ஆசைல இல்ல வினோத். வெளி உலகத்தை பார்க்கணும் பேர் கொடுத்தேன்."
வினோத் - "அப்போ உனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லையே"
மேகா- " நமக்கு தெரிஞ்சது பேசுவோம்..எதுவா இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்"
வினோத் -" நீ சொல்லு, நான் அதையே பண்ணிக்கிறேன்"
இந்த நிகழ்வு எல்லாம் அவள் டைரியில் எழுதி வைத்துக் கொண்டு இருந்தாள்..
போட்டிகள் ஆரம்பம் ஆகின.
அனைத்து கல்லூரிகளின் பங்களிப்பு வந்துக்கொண்டிருந்த நேரத்தில் " தாய்மை வெல்லும்- இதை பேச வந்திருக்கும் மாணவர்கள் வினோத்- மேகா" என்று மைக் உச்சரித்தது..
முதல் பாதி மேகா சிறப்பான கைத்தட்டல் உடன் பேசிக்கொண்டு முடித்தவுடன் வினோத் பிற்பாதியை பேச ஆரம்பித்தான்..
பேசிக்கொண்டே இருந்த சமயம், வினோத் தன் தாயை நினைத்து உணர்ச்சியால் பேச தடுமாறி திக்குவாய் ஆனான்.இதை மேடையின் கீழே இருந்து கவனித்த மேகா வேகமாக மேலே சென்று தண்ணீர் கொடுத்துவிட்டு மீதமுள்ளதை அவள் பேச ஆரம்பித்தாள்.. மனதில் எதும் இல்லாமல் சிறப்பாக பேசி முடித்து வைத்தாள்..
கீழே இறங்கி மேடையின் பின்புறம்,
மேகா- " வினோத், ஏன் என்ன ஆச்சு..நல்லாத்தானே Practice பண்ணீங்க, ?
வினோத் - " ம், கொஞ்சம் Emotional ஆயிட்டேன். அம்மா நியாபகம்"
மேகா - " அம்மாகிட்ட பேச வேண்டியதுதானே "
வினோத் -" இருந்தா பேசி இருக்க மாட்டேனா" என்று சொல்லி அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான்
மேகா தன் போல் தாய் இல்லாதவன் என்பதை உணர்ந்தாள்..
பரிசளிப்பு விழா நடந்தது..வினோத் - மேகா ஜோடிக்கு ஆறுதல் பரிசு கிடைத்தாலும் அதுவே அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது.
அந்த நாள் மேகா தன் "டைரியில்" தன் தாயை நினைத்து ஒரு பக்கமும் வினோத்திற்காக ஒரு பக்கமும் நிறைவு செய்தாள்..
அங்கிருந்து இருவருக்கும் ஒரு சிறுதுளி நட்பு துளிர்விட்டது..அதன் தூரம் வகுப்பறையில் நுழையும் போது ஒரு பார்வை சிறு புன்னகையுடன் பயணிக்கும் தூரம் ஆகும்..
மதிய உணவு இடைவேளை..
இருவரும் தனித்தனியே அந்த மலை அடிவார பாதையில் நடந்து செல்லும் பொழுது மேகா மரத்தின் அடியில் உள்ள இருக்கையில் அமர்ந்தாள்..
தூரமாக வந்துக்கொண்டிருந்த வினோத் கவனித்தான்..அவன் கால் பாதை மரத்தை நோக்கி நகர்ந்து சென்றது..
வினோத் -" சாப்பிட போகலயா"
மேகா - " போகனும்"
வினோத் - " அப்புறம் இங்க உட்கார்ந்திருக்க"
மேகா-" எப்பயும் இங்க உட்கார்ந்துட்டுதான் போவேன். பழகிடுச்சு"
வினோத் -" சரி, சாப்பிட்டு வந்து உட்காரலாமே"
மேகா-" இல்ல இருக்கட்டும்..நீ போய் சாப்பிடு " என்றாள்..
வினோத் -"ம் சரி. "
வினோத் நடந்து ஆண் விடுதிக்கு செல்வதை கவனித்துக்கொண்டு இருந்தாள்.
தன் கையில் இருந்த புத்தகத்தை இருக்கையில் வைத்துவிட்டு வினோத் உடன் பழகுவது சரியா? என கேட்டுக்கொண்டாள்..
தினசரி அவள் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு இருப்பதை வினோத் கவனித்தாலும் கடந்து சென்று விடுவான்..
மாத இறுதி மேகா தந்தை மகளை காண வந்தார்..
மேகா - " அப்பா நான் வீட்டுக்கு வந்துடட்டும்மா"
அப்பா- " ஏம்மா ஏதாச்சும் பிரச்சினையா"
மேகா - " அதெல்லாம் இல்லப்பா..எப்போ மாச கடைசி வரும், உங்கள எப்போ பார்ப்பேன் , அப்படினு Daily தோணுதுபா"
அப்பா-" இன்னும் ஒரு வருஷம் தான்டா கண்ணு. அப்புறம் அப்பா கூட இருக்கலாம்..இப்போ நல்லா படிடா"
மேகா - " ம் . சரிப்பா , வாப்பா சாப்பிடலாம்"என்று விடுதிக்கு அழைத்து சாப்பாடு பரிமாறினாள்.
எதிரே மேகா வர
வினோத்-" அப்பா வந்தார் போல"
மேகா - " ஹே உனக்கெப்படி தெரியும்.
வினோத் - " இல்ல நீங்க பேசுறது பார்த்துட்டு இருந்தேன்" என்ன சொன்னாங்க அப்பா"
மேகா -" இங்க இருக்க பிடிக்கல சொன்னேன். "
வினோத் - " ஏன் என்னாச்சு"
மேகா-" தெரியல , ஆனால் பிடிக்கல"
வினோத் - " சொல்லுறேன் தப்பா நினைச்சுக்காதே. இங்க நான் பேசுற ஒரே ஆள் நீதான். அந்த போட்டிக்கு அப்புறம்தான் நீ எனக்கு தெரியும். அதிகம் பேசுனதில்லை. ஆனா உன்கிட்ட பேசுறது கூட நான் வேற யார்கிட்டயும் பேசுறது இல்லை. என்ன நீ போயிட்டா இந்த இடத்தை நான் புடிச்சிப்பேன். இன்னும் ஒரு வருஷம் தான், சீக்கிரம் போய்டும். கவலைபடாதே"
மேகா- "இதான் அப்பாவும் சொன்னார்.
வினோத் - " தைரியமா இரு , பார்த்துக்கலாம்"
நாட்கள் நகர வினோத் மற்றும் மேகா பேச ஆரம்பித்தனர். அவர்களுக்கு நட்பு உருவானது. இருவரும் தனிமை மறந்து சிரிக்க கற்றுக்கொண்டனர்..
அவளின் டைரி பக்கங்கள் அழகிய நினைவுகளுடன் நிரம்பிக்கொண்டிருந்தன.
மேகா மெல்ல மெல்ல வினோத்தை ரசிக்க ஆரம்பித்தாள்..
அவனின் பேச்சு, தனிமை, தவிப்பு எல்லாம் அவன் பக்கம் ஈர்த்தன..
வினோத்திற்கும் அந்த துணையில் ஒரு நிழல் துணை வருவது பிடித்திருந்தது..
அவள் பெயர் மேகா, அவள் அதிகம் யாரிடமும் பேசமாட்டாள். அன்னை இல்லை, தந்தை மட்டுமே உலகம் என வளர்கிறாள்.
அவளுக்கு நெருங்கிய தோழி/ தோழன் என்றால் அவள் எழுதும் "டைரி " மட்டும்தான். தன்னிலமை, தவிப்பு, தனிமை என்று எதையும் ஒன்றும் மறைக்காமல் மறக்காமல் தன் " டைரி" இடம் சொல்லி விடுவாள். யாரையும் நம்பாதவள் தன்னுடைய "டைரி" தவிர.. டைரி மட்டும்தான் அவள் வாழ்வின் அங்கம்..
இப்படி நகர்ந்து கொண்டே சென்ற அவள் நாட்களில் ஒரு புது வித நாட்கள் அவளிடம் வந்து சேர்ந்தது.
அதே ஊரில் மலை அடிவாரத்தில் ஒரு கல்லூரி..அந்த கல்லூரியில் முதலாம் ஆண்டுஅவள் சேர்ந்தாள்..
பெண்கள் விடுதியில் தங்கி படித்தாள்.
கல்லூரி விட்டு நடந்து செல்ல வேண்டும் விடுதிக்கு. நடந்து செல்லும் பாதையில் இரு பாதை பிரியும் . ஒன்று ஆண்கள் விடுதி செல்லும் பாதை .. இன்னொன்று பெண்கள் விடுதி செல்லும் பாதை..
அங்குதான் அவனும் வேறு ஊரில் பள்ளி படிப்பை முடித்து விட்டு சேர்ந்தான். இந்த இரு பாதைக்கு இடையில் ஒரு பெரிய மரம் இருக்கும்..அந்த மரத்தடியில் ஒரு Bench போன்ற இருக்கை இருக்கும்..
அங்குதான் மேகா அதிகம் உட்கார்ந்து தனிமையை எழுதுவாள்.
அதே கல்லூரியில் வேறு ஒரு ஊரில் இருந்து பள்ளி படிப்பை முடித்து வந்து சேர்ந்தான் வினோத்.
புது இடம் , புது கல்லூரி என அவனுக்கு தயக்கம். யாரிடமும் பேசுவதிலும் அவனுக்கு தயக்கம்..
கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டால் திக்குவாய் பேச்சுதான் அவனுக்கு வரும். அதை நண்பர்கள் கேளி செய்வார்கள் என்று அதிகம் யாரிடமும் இவன் பேசுவதில்லை..
இருபாலர் படிக்கும் கல்லூரி.. வெவ்வேறு கோணங்களில் வாழும் மாணவர்கள்.. என்றுமே தனிமையை விரும்பும் மேகா. எதையுமே சேர்த்துக்கொள்ளமால் விலகி இருக்கும் வினோத்..
மாதம் ஒருமுறை மேகா தந்தை வந்து பார்த்துவிட்டு மகளுக்கு தேவையானதை வாங்கிக்கொடுத்து விட்டு செல்வார். அவர்கள் இருவரின் சிறிய உரையாடலும் அந்த மரத்தின் அடியில் உள்ள இருக்கையில்தான்.
வினோத் படிப்பில் படுச்சுட்டி. ஆனால் அதை காட்டிக்கொள்வதில்லை. அலட்டிக்கொள்ளவதுமில்லை.
தான் உண்டு தன் வேலை உண்டு என்றே நகரும் அவன் நாட்கள்..
சில மாதங்கள் செல்ல மற்ற மாணவர்கள்போல் அல்லாமல் வினோத் தனியே இருப்பதை மேகா கவனித்தாள். ஒருவேளை இவனும் நம் போல் தனிமையை விரும்புபவனா? என அவளுக்குள் ஒரு கேள்வி. ஆனால் கேட்கமாட்டாள்..
ஒருநாள் கல்வி நேரம் முடிந்து இருவரும் விடுதிக்கு நடந்து செல்லும் வேலையில் வினோத் மேகாவை கடந்து சென்றான்..
மேகா -"வினோத்"
வினோத் திரும்பினான்..
மேகா- " உங்கள் புத்தகத்தில் இருந்து இந்த காகிதங்கள் கீழே விழுந்தது" , என கீழே கிடந்த காகிதங்களை எடுத்துக் கொடுத்தாள்.
வினோத் - " Thanks " என நடந்தான்.
மேகா இதையும் அவளுடைய "டைரியில்" குறிப்பிட்டு இருந்தாள்.
மலை அடிவாரத்தில் மரத்தடியில் அழகிய தென்றல் காற்றுடன் மனம் விட்டு பேச டைரியை விரும்புவதே அவளின் தனிப்பட்ட விருப்பம்..
டைரியில் ஆங்காங்கே சிறு சிறு கவிதைகள் என நிரம்பி டைரியும் வண்ணக் கோலத்தில் இருக்கும்..
முதலாமாண்டு முடிந்தும் வினோத்திற்கும் மேகாவிற்கும் எந்த வித மாற்றங்களும் இல்லை.
இரண்டாம் ஆண்டு நடந்து கொண்டிருந்த வேளையில் ஒரு பேச்சு போட்டி தேர்வுக்காக பெயர்கள் தரவேண்டும்..8 பேர் குழுவாக, 6 பெயர்கள் வந்தாலும் 7 வதாக மேகா வேண்டா வெறுப்பாக தன் பெயராக இணைத்துக்கொண்டாள். 8 வதாக யார் என எதிர்பார்க்கும் நேரத்தில் யாரும் பெயர் அறிவிக்கவில்லை..
ஏமாற்றத்துடன் சற்று திரும்பும் நேரத்தில் " வினோத்" என்ற பெயர் அறிவிக்கப்பட்டதும் அவளுக்கு தெரியாமல் ஒரு சிறு புன்னகை அவள் முகத்தில்..
இந்த போட்டிகள் வேறு கல்லூரியில் நடைபெறும்.ஜோடி ஜோடியாக தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.. 3 ஜோடிகள் தேர்வு ஆகிய பின் நான்காம் ஜோடி வேறு வழி இல்லாமல் " வினோத் - மேகா"
வினோத் - " மேகா "
மேகா - " சொல்லுங்க வினோத்"
வினோத் - " எனக்கு கொஞ்சம் திக்குவாய், சரியா பேசவராது. "Emotional ஆகிட்டா ஓவரா திக்கும். நான் பேச ஆசைப்படுறேன். அதுக்குதான் என் பேர் கடைசியா கொடுத்தேன். உனக்கு ஜெயிக்கணும் இந்த போட்டியில நினைச்சா வேற ஆள Choose பண்ணிக்கோ "
மேகா- " நான் ஜெயிக்கணும் ஆசைல இல்ல வினோத். வெளி உலகத்தை பார்க்கணும் பேர் கொடுத்தேன்."
வினோத் - "அப்போ உனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லையே"
மேகா- " நமக்கு தெரிஞ்சது பேசுவோம்..எதுவா இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்"
வினோத் -" நீ சொல்லு, நான் அதையே பண்ணிக்கிறேன்"
இந்த நிகழ்வு எல்லாம் அவள் டைரியில் எழுதி வைத்துக் கொண்டு இருந்தாள்..
போட்டிகள் ஆரம்பம் ஆகின.
அனைத்து கல்லூரிகளின் பங்களிப்பு வந்துக்கொண்டிருந்த நேரத்தில் " தாய்மை வெல்லும்- இதை பேச வந்திருக்கும் மாணவர்கள் வினோத்- மேகா" என்று மைக் உச்சரித்தது..
முதல் பாதி மேகா சிறப்பான கைத்தட்டல் உடன் பேசிக்கொண்டு முடித்தவுடன் வினோத் பிற்பாதியை பேச ஆரம்பித்தான்..
பேசிக்கொண்டே இருந்த சமயம், வினோத் தன் தாயை நினைத்து உணர்ச்சியால் பேச தடுமாறி திக்குவாய் ஆனான்.இதை மேடையின் கீழே இருந்து கவனித்த மேகா வேகமாக மேலே சென்று தண்ணீர் கொடுத்துவிட்டு மீதமுள்ளதை அவள் பேச ஆரம்பித்தாள்.. மனதில் எதும் இல்லாமல் சிறப்பாக பேசி முடித்து வைத்தாள்..
கீழே இறங்கி மேடையின் பின்புறம்,
மேகா- " வினோத், ஏன் என்ன ஆச்சு..நல்லாத்தானே Practice பண்ணீங்க, ?
வினோத் - " ம், கொஞ்சம் Emotional ஆயிட்டேன். அம்மா நியாபகம்"
மேகா - " அம்மாகிட்ட பேச வேண்டியதுதானே "
வினோத் -" இருந்தா பேசி இருக்க மாட்டேனா" என்று சொல்லி அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான்
மேகா தன் போல் தாய் இல்லாதவன் என்பதை உணர்ந்தாள்..
பரிசளிப்பு விழா நடந்தது..வினோத் - மேகா ஜோடிக்கு ஆறுதல் பரிசு கிடைத்தாலும் அதுவே அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது.
அந்த நாள் மேகா தன் "டைரியில்" தன் தாயை நினைத்து ஒரு பக்கமும் வினோத்திற்காக ஒரு பக்கமும் நிறைவு செய்தாள்..
அங்கிருந்து இருவருக்கும் ஒரு சிறுதுளி நட்பு துளிர்விட்டது..அதன் தூரம் வகுப்பறையில் நுழையும் போது ஒரு பார்வை சிறு புன்னகையுடன் பயணிக்கும் தூரம் ஆகும்..
மதிய உணவு இடைவேளை..
இருவரும் தனித்தனியே அந்த மலை அடிவார பாதையில் நடந்து செல்லும் பொழுது மேகா மரத்தின் அடியில் உள்ள இருக்கையில் அமர்ந்தாள்..
தூரமாக வந்துக்கொண்டிருந்த வினோத் கவனித்தான்..அவன் கால் பாதை மரத்தை நோக்கி நகர்ந்து சென்றது..
வினோத் -" சாப்பிட போகலயா"
மேகா - " போகனும்"
வினோத் - " அப்புறம் இங்க உட்கார்ந்திருக்க"
மேகா-" எப்பயும் இங்க உட்கார்ந்துட்டுதான் போவேன். பழகிடுச்சு"
வினோத் -" சரி, சாப்பிட்டு வந்து உட்காரலாமே"
மேகா-" இல்ல இருக்கட்டும்..நீ போய் சாப்பிடு " என்றாள்..
வினோத் -"ம் சரி. "
வினோத் நடந்து ஆண் விடுதிக்கு செல்வதை கவனித்துக்கொண்டு இருந்தாள்.
தன் கையில் இருந்த புத்தகத்தை இருக்கையில் வைத்துவிட்டு வினோத் உடன் பழகுவது சரியா? என கேட்டுக்கொண்டாள்..
தினசரி அவள் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு இருப்பதை வினோத் கவனித்தாலும் கடந்து சென்று விடுவான்..
மாத இறுதி மேகா தந்தை மகளை காண வந்தார்..
மேகா - " அப்பா நான் வீட்டுக்கு வந்துடட்டும்மா"
அப்பா- " ஏம்மா ஏதாச்சும் பிரச்சினையா"
மேகா - " அதெல்லாம் இல்லப்பா..எப்போ மாச கடைசி வரும், உங்கள எப்போ பார்ப்பேன் , அப்படினு Daily தோணுதுபா"
அப்பா-" இன்னும் ஒரு வருஷம் தான்டா கண்ணு. அப்புறம் அப்பா கூட இருக்கலாம்..இப்போ நல்லா படிடா"
மேகா - " ம் . சரிப்பா , வாப்பா சாப்பிடலாம்"என்று விடுதிக்கு அழைத்து சாப்பாடு பரிமாறினாள்.
எதிரே மேகா வர
வினோத்-" அப்பா வந்தார் போல"
மேகா - " ஹே உனக்கெப்படி தெரியும்.
வினோத் - " இல்ல நீங்க பேசுறது பார்த்துட்டு இருந்தேன்" என்ன சொன்னாங்க அப்பா"
மேகா -" இங்க இருக்க பிடிக்கல சொன்னேன். "
வினோத் - " ஏன் என்னாச்சு"
மேகா-" தெரியல , ஆனால் பிடிக்கல"
வினோத் - " சொல்லுறேன் தப்பா நினைச்சுக்காதே. இங்க நான் பேசுற ஒரே ஆள் நீதான். அந்த போட்டிக்கு அப்புறம்தான் நீ எனக்கு தெரியும். அதிகம் பேசுனதில்லை. ஆனா உன்கிட்ட பேசுறது கூட நான் வேற யார்கிட்டயும் பேசுறது இல்லை. என்ன நீ போயிட்டா இந்த இடத்தை நான் புடிச்சிப்பேன். இன்னும் ஒரு வருஷம் தான், சீக்கிரம் போய்டும். கவலைபடாதே"
மேகா- "இதான் அப்பாவும் சொன்னார்.
வினோத் - " தைரியமா இரு , பார்த்துக்கலாம்"
நாட்கள் நகர வினோத் மற்றும் மேகா பேச ஆரம்பித்தனர். அவர்களுக்கு நட்பு உருவானது. இருவரும் தனிமை மறந்து சிரிக்க கற்றுக்கொண்டனர்..
அவளின் டைரி பக்கங்கள் அழகிய நினைவுகளுடன் நிரம்பிக்கொண்டிருந்தன.
மேகா மெல்ல மெல்ல வினோத்தை ரசிக்க ஆரம்பித்தாள்..
அவனின் பேச்சு, தனிமை, தவிப்பு எல்லாம் அவன் பக்கம் ஈர்த்தன..
வினோத்திற்கும் அந்த துணையில் ஒரு நிழல் துணை வருவது பிடித்திருந்தது..
Last edited: