What's new

என்ன செய்வாய் நீ

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
நம்மிரு குடும்பங்களுக்கிடையே
பத்தும் பொருந்தி வருகிறதாம்

வாங்கிய பட்டங்களும்
சேர்ந்து கொண்டது

எட்டுக்கு ஒரு உறவுள்ளதாம்
தடுக்கி விழுந்தால் மடி ஏந்திக்கொள்ள

என்னைப் போல் தெரிகிறாள்
உன் அத்தை
அன்பொழுகப் பேசுகிறார்
அவன் தந்தை
உனக்குப் பிடித்த
பிச்சிப் பூவிற்குப் பஞ்சமில்லை அங்கே

பிணக்குகளுக்கும் வழியில்லை
நீ வாழப் போவதோ வெளிநாட்டில் என்று
ஆளாளுக்கு அவரவருக்கு பிடித்தமானதை
என்னில் ஏற்ற முயல
சேர்ந்து வாழப் போகும்
நம்மிருவரைப் பற்றி
சிந்திக்க நேரமில்லை அவர்களுக்கு

வெளி சாயங்கள்
தொலைந்து போன
வெள்ளொளிப் பொழுதொன்றில்
நீ வினவலாம்
ஏன் தோற்றுப் போனாய் என்று
இல்லை, நான் மருகலாம்
எதற்காக என்னை இழந்தேனென

அன்று ,
இதே அனைவரும்
பேசிக்கொண்டிருப்பர்
அவரவர்க்கு பிடித்ததை
வேறிடத்திலிருந்து கடன் வாங்கியாவது
நிச்சயமாய் நம்மைப் பற்றி அல்ல !

உன் பெற்றோர் உன்னுடன்
உறவுகள் தொடர்ந்திடும் வீடு
உனக்குப் பிடித்த அதே வேலை
எல்லாம் அதே..
புதிதாய் நான் மட்டுமே
எனக்கு உன்னையும் சேர்த்து
எல்லாமே புதிதாய் ...
எனக்காக உன்னை
மாறச் சொல்லவில்லை
எங்கிருந்தாலும் நான் மட்டும்
நானாக இருக்க வேண்டுவதில்
தவறேதும் இல்லையே

கருங்கல்லில்
செதுக்கவில்லை இதயத்தை
களிமண் பாவையுமல்ல
இவள் !

பெண் மனம் புரிந்தால்
காதல் செய்
இல்லையேல் கைவிட்டுவிடு
இந்நாடகத்தை !!

உயிரை உருவி
பந்தம் கட்டும்
கண்காட்சிகளில் ஒன்றாவது
குறையட்டும்!!!
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
கருங்கல்லில்
செதுக்கவில்லை இதயத்தை
களிமண் பாவையுமல்ல
இவள் !
புரிய வச்சுட்டீங்க
உயிரை உருவி
பந்தம் கட்டும்
கண்காட்சிகளில் ஒன்றாவது
குறையட்டும்!!!
கொடுமை தொடராம இருக்க பெண்ணை சமுதாயத்துக்கு முன்னால் விருப்பத்தை கேட்டு பெறுவது முறைமையாக்கப் படவேண்டும்.
 
Top