What's new

என் மகளே..

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
என் மகளே.....
பசுமை மாறாத முகமும்.,
அதில் பளிங்கு போல் ஒளிரும் சிரிப்பும்.,
மலர்ந்த ரோஜாவின் மென்மை .,
உன்னோடு இருப்பதுதான் உண்மை!

குதித்து ஓடிடும் மானும்.,
தோகை விரித்து ஆடிடும் மயிலும்.,
நீர் அள்ளி தெளித்திடும் மீனும்.,
குரல் கொண்டு கவி பாடும் குயிலும்.,
யாவும் அழகென சொன்னேன்.,
உனை காணும் முன்னர் நானே!!


அமிழ்து தன்னோடு கொண்டு.,
அதை இயல்பாய் நமக்கள்ளி தந்து.,
தவழ்ந்து விளையாடும் பிள்ளை.,
அகிலத்தில் உனக்கிணை இல்லை!
மழலை பேசிடும் மொழிகள்.,
அதில் தோற்றிடும் பல கவிகள்!!!

கொஞ்சி விளையாடும் மழலை.,
அதைக்கண்ட எனக்கில்லை கவலை!
உனை நெஞ்சில் சுமப்பது ஓர் வரமே!
அது பொங்கும் இன்பத்தை-என்றும் எனக்கு தருமே!!!

என்னில் பிறந்த இக்கவியை .,எனக்காய் பிறந்த என் கவிக்கு என் மகள் ரியானாவிற்கு சமர்பிக்கிறேன்.

பாசமிகு தந்தை The popeye.....
 
Top