மூலச்சொல்: மனோன்மணீயம்
*கவிதை நாடக நூல்
* நம் தமிழ் தாய் வாழ்த்து ‘நீராரும் கடலுடுத்த' இந்நூலின் தமிழ்த் தெய்வ வணக்கம் எனும் தலைப்பிலுள்ள ஒரு பகுதி.
இந்த கவியைப்பற்றி ஒரு விஷயம் தெரியும். இப்போ நாம் பாடும் தமிழ்த்தாய் வாழ்த்து எடிட் செய்யப்பட்டது. பெரும்பாலும் மக்கள் கவணிச்சிருப்பாங்களான்னு தெரியல. இந்த கவி கண்ணி வகையை சேர்ந்தது. எப்படின்னா ஒரே எதுகையில ரெண்டு ரெண்டு அடியாக வரும். பாருங்களேன்..
நீராரும் .. சீராரும்
தெக்கணமும் .. தக்கசிறு
அத்திலக .... எத்திசையும்
அப்படி ஜோடியா வரும் வரிகள் நடுவிலே திடீர்ன்னு " நின் சீரிளமைத் திறம் வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே.. வாழ்த்துதுமே.ந்னு
தனியா ஒரு வரி எப்படி வரும்? மணோன்மணீயம் சுந்தரனாரோட ஒரிஜினல் வரிகள் வேறு. சோ . அன் எடிட்டட் வெர்ஷன் இதான். தாய்த்தமிழின் செம்மைக்கும் இளமைக்கும் காட்டிய உவமை செம்ம்ம அழகு.
பல்லுயிரும் பலஉலகும் படைத்தளித்து துடைக்கினும் ஓர்
எல்லையறு பரம்பொருள் முன்னிருந்தபடி இருப்பது போல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத்தே உதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையா உன்
சீரிளமைத் திறம் வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே.
இந்த ஒரிஜினக் வெர்ஷன்ல இருந்து பல்லுயிரும் ல இருந்து சிதையா வரைக்கும் வெட்டிட்டாங்க. ஏதோ அரசியல். அது போகட்டும் அந்த உவமைய பாருங்க எவ்ளோ அழகுன்னு.
எப்படி எல்லா உயிர்களையும் உலகங்களையும் படைத்து காத்து அழிக்கும் அந்த எல்லையில்லாத பரம்பொருள் தான் மாறாமல் அப்படியே இருக்கிறதே அது போலவே..
கன்னடம் தெலுங்கு மலையாளம் துளு ஆகியமொழிகள் உன் வயிற்றிலிருந்து உதித்திருந்தாலும் நீயும் அந்த பரம்பொருளைப் போலவே அப்படியே முன் இருந்த படியே மாறாமல் இருக்கிறாய். உன் இளமையை என்னவென்று போற்றுவது?