What's new

ஏன் என்றால் ..?

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
ரசித்து பார்த்திட கண் ஒன்றை கொடுத்திட,
ரசனைகள் படித்திட மற்றொன்றை கொடுத்திட..
துணைக்கு துணையாய் இரு கண்கள் கொடுத்தாய் இறைவா....

இகழ்ந்தவை எல்லாம் இசைத்திட கேட்க,
இனிமைகள் எல்லாம் இல்லறம் கேட்க,
துணைக்கு துணையாய் காதிரெண்டாய் கொடுத்தாய் இறைவா..


அள்ளிக்கொடுக்க கை ஒன்றை கொடுக்க,
அதற்கு துணையாய் மற்றொன்றை கொடுக்க,
துணைக்கு துணையாய்
கைகள் படைத்தாய் இறைவா...

கரடு முரடில் கால் ஒன்று நடந்திட,
கடந்து நடக்க மற்றொன்று உதவிட,
துணைக்கு துணையாய்
கால்களை படைத்தாய் இறைவா..

சுவாசிக்க இரண்டு துருவங்கள் இருந்திட,
அதற்கு கருவியாய் இரு நுரையீரல் செயல்பட..
ஒன்று அடைத்தால் மற்றொன்றில் வாழ்ந்திட,
துணைக்கு துணையாய் ஒன்றினை படைத்தாய் இறைவா..

சிந்தையில் வந்திடும் சிறந்தவை பதித்திட,
சின்ன சின்ன கனவுகள் உதித்திட,
ஒன்றுக்கு துணையாய் மூளையை படைத்தாய் இறைவா...

இத்தனையும் நம் வாழ்வில் வாழ்ந்திட,
இன்னல்கள் வந்தால் ஏற்று சுமந்திட,
துணைக்கு துணையின்றி தவிக்க,
ஒரு இதயம் மட்
டும்
ஏன் இங்கு படைத்தாய் இறைவா?
boy-3914551_1280.jpg
 
Last edited:
Top