What's new

கலங்கிய கட்டில்

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
ஐப்பசி மாதம் வந்தாலே,
ஐம்புலனும் கதறிடுதே..
ஐந்து வயது பிள்ளை முதல்
ஐயா தியாகங்கள் வந்திடுதே..


திட்டிய வார்த்தை எல்லாம்
தீர்த்தமாய் இன்று தெரிகிறதே..
அடித்த அடிகள் எல்லாம்
அன்பின் வலியை தேடுகிறதே..


அன்பின் பிள்ளை பட்டினி என்றால்,
அடுத்த நொடி பசி போக்குவாயே..
அயல் நாட்டில் இருந்துக்கொண்டு
அனுபவத்தை நீ பகிர்வாயே..


புற்றிலே நீ படுத்தாய்.
காற்றினிலே கரைந்துவிட்டாய்..
பட்ட மரம் பூ பூக்குமா?
பூத்து விட்டு உதிர்ந்துடுமா?


உன்னை சுமந்து சென்ற நொடிகள்.,
மழைத்துளிகளும் கதறியதே..
கண்ணீரும்தான் கலந்து சென்று
கலங்கரை தேடி ஓடியதே..


காணாத கண்கள் கோடி
கவலையில் அன்று கருகியதே..
கட்டிலுக்கும் காதல் உண்டு..
கட்டி அணைத்து உன்னை தாங்கியதே..


தகப்பனின் தவிப்பு என்ன?
தத்தளிக்கும் பிள்ளை சொல்லிடுமே..
தாயின் தவிப்பு என்ன?
தாலிக்கொடிதான் சொல்லிடுமா?


நீ தந்த அனுபவமே,
நிலையாய் நானும் நிற்பேனே..
நீ இங்கு இல்லை என்று
பல நொடிகள் தவிப்பேனே
..

சொல்ல சொல்ல வலிக்கிறதே..
சோர்வாகி போகிறதே..
சொர்க்கத்தில் சேர்ந்துவிட்டு
சொப்பனத்தில் வந்து சொல்வாயா?


எல்லாருக்கும் வரும் என்று,
ஏற்றுக்கொள்ளும் மனமும் உண்டு..
அருகிலே நிகழும் போது,

அரைமனமும் ஏதோ தேடுகிறதே..
 
Top