- Joined
- Apr 8, 2022
- Messages
- 845
- Points
- 133
நேற்று போல் இன்று இல்லை
என்றுதான் நொந்து கொண்டு
காற்றையே பெரு மூச்சாக்கி
கவலையில் வாடுகின்றோம்
ஏற்ற இறக்கம் என்று
எல்லாமே மாறி மாறி
வாழ்விலே தோன்றும் ஆனால்
இறக்கததில் கவலை கொள்வோம்
தேற்றிட யாருமில்லை
என்று நாம் எண்ணிக்கொண்டே
மனதுமே ஆறிடாமல்
கவலையில் துவண்டு போவோம்
நாளையை எண்ணி நாமே
நமக்குள்ளே குழம்பிக்கொண்டு
இன்றைய நாளை நாமும்
கவலையில் கடத்திச் செல்வோம்
சொந்தமோ நட்போ நம்மை
சொற்களில் வாட்டினாலும்
நிந்தனை செய்வோர் பற்றி
எண்ணியே கவலை தோன்றும்
இப்படி நம்மில் என்றும்
எத்தனை கவலை உண்டு
எப்படி தீர்ப்போம் என்றே
சிந்தனை நம்மில் தோன்றும்
ஒன்றினை என்றும் நாமே
மனதிலே ஏற்றி கொள்வோம்
கவலையால் மட்டும் நம்மில்
எதுவுமே மாறிடாது
இடுக்கண் வருங்கால் நகுக
வள்ளுவன் வாக்கிற்க்கிணங்க
துன்பத்தை நாமும் கண்டே
என்றுமே துவளாதிருப்போம்
கலங்கிடும் கவலை நீக்க
பிறரிடம் வழிகள் தேடும்
மன நிலை நீக்கி நாமே
கவலையை நீக்குவோமே!!
.
என்றுதான் நொந்து கொண்டு
காற்றையே பெரு மூச்சாக்கி
கவலையில் வாடுகின்றோம்
ஏற்ற இறக்கம் என்று
எல்லாமே மாறி மாறி
வாழ்விலே தோன்றும் ஆனால்
இறக்கததில் கவலை கொள்வோம்
தேற்றிட யாருமில்லை
என்று நாம் எண்ணிக்கொண்டே
மனதுமே ஆறிடாமல்
கவலையில் துவண்டு போவோம்
நாளையை எண்ணி நாமே
நமக்குள்ளே குழம்பிக்கொண்டு
இன்றைய நாளை நாமும்
கவலையில் கடத்திச் செல்வோம்
சொந்தமோ நட்போ நம்மை
சொற்களில் வாட்டினாலும்
நிந்தனை செய்வோர் பற்றி
எண்ணியே கவலை தோன்றும்
இப்படி நம்மில் என்றும்
எத்தனை கவலை உண்டு
எப்படி தீர்ப்போம் என்றே
சிந்தனை நம்மில் தோன்றும்
ஒன்றினை என்றும் நாமே
மனதிலே ஏற்றி கொள்வோம்
கவலையால் மட்டும் நம்மில்
எதுவுமே மாறிடாது
இடுக்கண் வருங்கால் நகுக
வள்ளுவன் வாக்கிற்க்கிணங்க
துன்பத்தை நாமும் கண்டே
என்றுமே துவளாதிருப்போம்
கலங்கிடும் கவலை நீக்க
பிறரிடம் வழிகள் தேடும்
மன நிலை நீக்கி நாமே
கவலையை நீக்குவோமே!!
.