What's new
  • If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

காதல் கவிதை

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,843
Points
133
Location
Chennai
பார்த்தநொடியே
கண்களுக்குள்
ஓவியமானாய்
காத்திருக்கு
விழிகளும்
உன்னுடன் சேர்ந்து
காவியம் பாட
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,843
Points
133
Location
Chennai
என் இதயத்தை
வெல்ல உன்
விழியால் போர்
தொடுத்தால்
அடங்கிவிடுகிறது
என் ராஜாங்கம்...

ஆரோக்கியமான
போர் முறைதான்
உன் விழியால்
தாக்குதல் நடத்துவது..

தந்திரக்காரி தான்
என்னை
வீழ்த்தும் திறன்
கற்றவளாச்சே ...

காதலும் காமமும்
வெவ்வேறு
சூழ்நிலையில் வெளிப்படுத்தும்
பார்வை
எழுதப்படாத சிறந்த புது கவிதை...

எத்தனையோ நூல்கள்.
வாசித்துயிருக்கேன்
ஆனால்
உன் பார்வை எழுதிய
கவிதை புரிந்து
படிக்கவே
உன் விழி நூலகத்தில்
தேடி படிக்கிறேன்
பார்வையின் அர்த்தத்தை...

❤️❤️
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,843
Points
133
Location
Chennai
நிலவொளி இல்லாத
இருளை போன்றது
உன் குரல்ஒலி கேட்காத
நாட்களை நான்கடப்பது..........

உயிர்ப்பிக்க
காத்துகொண்டிருக்கின்றன
உயிரின் மூலக்கூறுகள்

உன் இதழின்
ஈரமுத்தத்திற்க்கென

❤️❤️
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,843
Points
133
Location
Chennai
இன்னும் புரியவில்லை எனக்கு ..
எங்கு தோற்றுப்போனேன் என்று...
கால ஓட்டத்தில் எனக்கு நானே காயம் ஆறி விட்டதாக நம்பிக்கொண்டு மனதை நம்ப வைத்துக்கொண்டு நகர்கிறேன்...
நடு நிசியில் உன் துரோகங்களின் நினைவு எரிச்சலை தூண்டுகிறது..
மேலாப்பாக காய்ந்திருந்த காயம் உள்ளே சிதைந்திருப்பது நான் மட்டும் அறிந்த ஒன்று...
நிம்மதியா தூங்கி நாளாகிறது..
தூங்கிட ஆசை அதற்கு
ஒன்றை மட்டும் கூறி போ..
எங்கு தோற்றுப்போனேன் நான்.??
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,843
Points
133
Location
Chennai
🖤•••••••••••••••••••••••••••••••••••🖤

பிறப்பில கருப்புணு
காக்கை சங்கடப்படல...

ஏறி மிதிக்கிறாங்கணு
எருமை கவலப்படல....

மழையில வையுறாங்கணு
ஞாயிறு வருத்தப்படல...

#நாளை_நமதே
என்ற நம்பிக்கையுடன்...
நடை போட்டு எழுது.....

இமயத்தில் உன் பெயரை
எட்டுத் திக்கும் முழங்க....

எவரெஸ்டும் ஏங்கட்டும்
உன் உயரத்தை எட்ட....!

🖤••••••••••••••••••••••••••••••••••🖤
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,843
Points
133
Location
Chennai
ஒரு தலை தான் என் காதல்..
ஒரு உயிர் தான் என் ராகம்..
உன் மனம் தான் என் உறுதி..
உன்னிடம் தான் என் இறுதி..!
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,843
Points
133
Location
Chennai
காதலால் கவிதை எழுத தொடங்கிய கவி அரசர்கள் உண்டு ஆனால் அதற்கு காரணமும் அவள் தான் .....

அவளுக்காக ஒரு கவிதை...
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,843
Points
133
Location
Chennai
ஒவ்வொருமனிதனுக்கும்
மூன்று வாழ்க்கைகள்
உண்டு. தனிப்பட்ட சொந்த
வாழ்க்கை,
பொது வாழ்க்கை,
மற்றும் அவரே அறியும்
ரகசியமான வாழ்க்கை.

மூன்றாவது சொல்லப்பட்ட இந்த ரகசியமான வாழ்க்கையின் சந்தோஷங்கள், துயரங்கள், கொண்டாட்டங்கள், அச்சங்கள், அளவற்ற மகிழ்ச்சி போன்ற அனைத்துமே, அவரவருக்கு மட்டுமே சொந்தமானது.

எதுவொன்றின் பொருட்டும் அவைகளை பிறரிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை..

அவரவரின் மன உலகுக்குள் மட்டுமே எப்போதும் பயணிக்கிறது,
நினைத்துச் சிரிக்கிறது,
பரிதவித்து அழுகிறது,

ஒரு மனிதனுக்கு பொறுமையும் மௌனமும் மிகவும் சக்தி வாய்ந்த ஆற்றல்கள். பொறுமை மனதளவில் வலிமையாக்கும்.மௌனம் உணர்வு ரீதியாக வலிமையாக்கும்.

மனம் பக்குவப்பட்டால், பாதை தெளிவாகும். பாதை தெளிவானால், பயணம் எளிதாகும், பயணம் எளிதானால் வாழ்க்கை இனிதாகும்.

நம் மனம் எப்போதும் நம்மைவிட அடுத்தவர்களுக்காகதான் அதிக நேரம் செலவிடுகிறது.

மனம் தன் செயல்பாட்டைப் புரிந்து கொள்ளாதவரை, அது மேலும் மேலும் துன்பத்தை உருவாக்கும். மனதைப் புரிந்துகொள்வதுதான் அமைதியின் தொடக்கம்.

வயது என்பது உடலுக்கு தான். மனதுக்கு அல்ல. மனதை இளமையாக வைத்து கொண்டால் மகிழ்ச்சியாக வாழலாம்.

#வாழ்த்துகள்.
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,843
Points
133
Location
Chennai
ஓர் மழை இரவின்
நிலா நிழலில்,
ஒரு நாள் வாழ்வின்
கடைசித் துளியில் கிடந்து
ஈசல் பூச்சியொன்று அழக் கண்டேன்.
இன்னும் கொஞ்சம்.

நீள வேண்டும் இரவே....
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,843
Points
133
Location
Chennai
உன் நிழலை
தான்..

என்னால்

தொடர
முடியவில்லை..

ஆனால்

உன்
நினைவுகளை..

எப்போதும்
தொடருவேன்...💚🦋
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,843
Points
133
Location
Chennai
நிலவாக காத்திருப்பேன் நீ வரும் நாளை எதிர்பார்த்திருப்பேன் ...

வருவாயா இதம் தருவாயா ...

கனவுகளில் காத்திருப்பேன் கண்களில் நீ வருவாயா !!

நினைவுகளில் நிறைந்திருப்பேன்
நித்தம் நீ வருவாயா !!

இதயத்தில் இணைந்திருப்பேன்
இனிமையாக வருவாயா !!

நெகழ்ச்சியுடன் காத்திருக்கிறேன் நெஞ்சத்தில் நீ அமர்வாயா!!

மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறேன் மனதை நீ தருவாயா !!

சந்திக்கும் சந்தோஷத்தை தருவாயா !!

தித்திக்கும் தேனிசையை
இசைப்பாயா !!

கணப்போதும் பிரியாதே!

காத்திருக்க வைக்காதே!

கண்ணீரை வரவழைக்காதே!!

கனிவாகப் பேசிடு
கண்ணியம் காத்திடு!!

என் அன்புக்குரியவளே
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,843
Points
133
Location
Chennai
இமைக்குள் நீ இருக்க உன்னை

கலங்காம பார்க்கதான்

கரையாம நான் இருக்கேன்!!

எனது பார்வைக்குள்

அடங்கிட மட்டும்

ஒரு சேர திரண்ட அழகுக்கடல் நீ.

பேசாத பொழுதும் பேசிக் கொண்டே

இருக்கிறது பேசிய நினைவுகள்

அனைத்தும் ❤
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,843
Points
133
Location
Chennai
ஒன்றிருந்தால் ஒன்றில்லை
**********************************

உணவிருக்குப் பசியில்லை
பசியிருந்தால் உணவில்லை
சீருண்டு சிறப்பில்லை
தேருண்டு திருவிழாதான் இல்லை

துஞ்சிடத் துணையில்லை
துணையிருந்தால் தூக்கமில்லை
தோளிருக்குத் தோழனில்லை
தோழனிருந்தால் துணிவுதானில்லை

நெஞ்சிருக்கு நீதியில்லை
வஞ்சகருக்கு நெஞ்சில் லை
தனமிருக்கு வாரிசில்லை
மனமிருந்தால் நேயந்தானில்லை

சாவுக்கோர் சாவில்லை
மனநோவுக்கோர் மருந்தில்லை
தேர்வுக்குப் பஞ்சமில்லை
தெளிந்தார்தான் யாருமில்லை
அத்திகுளத்தான்
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,843
Points
133
Location
Chennai
எதுவும் நிரந்தரம் இல்லாதபோது .....
எதை நினைத்து புலம்புகிறாய்...
எதை இழந்து விட்டாய் என தவிக்கிறாய்....
எது உன்னுடையது என்கிறாய்...
எதற்கு உரிமை கொண்டாடுகிறாய்....
வழிப்போக்கில் எல்லா வந்து போவதுதான்.....
எதுவும் நமக்கானது அல்ல...
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,843
Points
133
Location
Chennai
அன்பின் இனிய இரவு வணக்கம் 🌹 ❤️ 🌹

அன்பை வெளிப்படுத்த ஆறறிவு தேவையில்லை...

அன்பு இருந்தால் போதும்...

அருகில் வந்து போலியாக நடிப்பவர்களைவிட,

தூரத்திலேயே உன்னை பார்த்துவிட்டு

கண்டுகொள்ளாமல் செல்பவர்கள்
எவ்வளவோ மேல்...!!!
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,843
Points
133
Location
Chennai
முதுமை தோள்களில்தான்
துரத்திக் கொண்டிருக்கிறதே தவிர
அவர்களது அன்பில் அல்ல...!

இளமைக்கும்,வயதிற்கும் பொருட்படுத்தாமல்
வாழ்க்கை நடத்த நல்ல புரிதலும்
அன்பும் போதுமே..!!
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,843
Points
133
Location
Chennai
முன்னமொரு யுகத்தில்
சூழ்சிச் சிலந்தியின் வலையில்
காலம் சிக்கிய இரவொன்றில்...

முறையற்று கலவிக்
கொண்டாளென மங்கையொருவள் ...
அகலிகையென்றவள் ....
சாபம் பெற்றுக் கல்லானாள்
புராணங்களில்...!!

தன்னவன் உருவில் தன்னுடல்
தீண்டியது
தேவர்களுக்கரசனென்று
அறியாப் பத்தினி ...

பழிக்கப்பட்டு
பின் புவியிலேக் கிடந்தாள்
கற்சிலையென காலமேறே ....!!

முக்காலமறிந்த முனிவரும்
முற்றிலும் மறந்தான்
மனையாளவள் கொண்ட
மணாள பக்தியை..!!

காலம் கடந்த பின்
திரேதா யுகத்தின் தருணமொன்றில் மோட்சம் பெறும் பொருட்டென்று மிதிபட்டாள் மீண்டுமவள் ...!!

மோட்சமளித்த தேவனும் சந்தேகங்கொண்டானவன் மனை மீது
நெருப்பும் தலை கவிழ்த்து கீழ் நோக்கி எரியப்
புவியும் பிளந்தது...!!

யாரோ செய்யும் பிழைகள் யாவுமேதுந்தெரியாப் பிறவிகள் மீது
ஏதுவின்றி ஏவி எக்காளமிடும் எத்தனம் எக்காலமும் இருக்கும் போல்...!!

துகிலுரிந்து பார்க்குமெல்லோர்க்கும்
தெரிந்ததவள் தேகமொன்றே...

மாய வேடங்கொண்ட இந்திரனும் முக்கால ஞானமு(ம)ற்ற முனிவனும்
நெருப்பையூட்டிப் பிழை செய்த தேவனும்
இன்னமும் போற்றப்படுமுலகில்
இயற்றப் பட்ட
வாசிக்கபடா வேதம்...பெண்..!
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,843
Points
133
Location
Chennai
♥கடமைக்கு திருமணம் முடித்து வைக்கும் பெற்றோர்களுக்கு!!!!!.....

♥கடமை முடிந்தது என ஒதுங்க வேண்டாம்...... சிறு வயதில் கை பிடித்து நடை பழக்கும் போது கீழே விழாமல் இருக்க பிள்ளைகளை தாங்கி கொண்ட நீங்கள்.....

♥வாழ்க்கை துணையுடன் வாழ்க்கையின்அடி எடுத்து வைக்கும் ஆரம்ப காலங்களில் மட்டுமாவது ஆதரவாக கை கொடுங்கள்.......

♥இங்கு எல்லா ஆண்களும் மனைவியை சந்தேகிக்காமலும்.....
மதுபோதைக்கு அடிமையாகமலும்......
விலைமகளை நாடாமலும் இருக்கும்
உத்தமர்களாக திருமண சந்தையில் கிடைப்பதில்லை எல்லா பெண்களுக்கும்......

♥திருமணம் முடித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்ற தப்பு கணக்கில் ஆடம்பரமாய் அரங்கேறிய திருமணங்களில் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் விவாகம் விவாகரத்து வரை செல்கிறது......

♥எப்படி திருத்த என்பது தான் கேள்வியாகவே இருக்கிறது....
விடை தான் கிடைப்பதில்லை...
அன்பால் திருத்திவிடலாம் என இங்கே விவாதிக்க வருபவர்களுக்கு நானும் கேட்கிறேன் ஆணை பெற்று வளர்த்த பெற்றோர்கள் அன்பை பொழிய முடியாதா???? அதில் திருந்த தான் முடியாதா!!!!!.....

♥குடி போதையில் கேட்கும் ஒவ்வொரு சந்தேக கேள்விகளுக்கும் வாழ விருப்பம் இன்றி பெற்றோரிடம் சொல்லவும் முடியாமல் தனிமையில் அழும் பெண்களும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் வாழவெட்டியாய் தந்தை வீட்டிற்க்கு தலைகுனிவு வந்து விடாமல் கணவனுடனான விருப்பமற்ற வாழ்க்கையை.....

♥கொஞ்சம் அக்கறை.... கொஞ்சம் ஆதரவாய் நானிருக்கிறேன் என பெற்றோர்கள் நீங்கள் இருப்பதாக உண்மையாக இல்லாவிட்டாலும்...
பொய்யாகவாவது காட்டி விடுங்கள.....

♥ஊரு ரெண்டு பட்ட நிலையில் வாழ்பவளுக்கு வேறு பிரச்சனைகளும் காத்திருக்கிறது சமூகத்தில்......

♥ஆம்... கணவன் சரியில்லை..... பெற்றோரின் ஆதரவும் இல்லை..... நான் இருக்கிறேன் உனக்கு கடைசி வரை என எவனோ ஒருவனின் இடைஞ்சல் அவனின் காம இச்சைகளை தீர்த்துக்கொள்ள வம்பிழுக்கும் கயவனையும் சமாளிக்க வேண்டியுள்ளது சில பெண்களுக்கு......
இவை அனைத்திலும் குறை சொல்லபடுவது பெண்களை தானே தவிர.... ஆண்மீதான தவறுகள் சுட்டி காட்ட படுவதில்லை.....

♥இங்கு ஆரோக்கியமான குடும்ப சூழல் தேவையே தவிர...... அலைகழிக்கும் விவாகரத்து குடும்பம் இல்லை.....

♥பெற்றேன் .....
வளர்த்தேன்.....
கட்டிக்கொடுத்தேன்.....
கடமை முடிந்தது என எண்ணுபவர் நீங்கள் எனில் சற்று கடின மனதுடன் எழுதுகிறேன்
கடைசி வரை உங்கள் மகளாகவே வளர்த்துவிடுங்கள் ஒரு கன்னியாகவே......

♥இவை அனைத்தும் நான் வளர்ந்த கிராமத்தில் நடந்தவைகளின் பின்னால் இருக்கும் நிஜமுகங்கள் தான்.....

♥கற்பனை என ஏளமாய் பேச வருபவர்களுக்கு ஒன்று மட்டுமே......
சற்று உற்று நோக்குங்கள் உன் உறவை சுற்றி இருக்கும் பெண்களின் வாழ்வில் இது ஒருவருக்கு கூட நிகழவில்லை எனில்
விவாதிக்க வரலாம் கீழே......

இது எதோ பெற்றோருக்கான பதிவு தானே என எண்ணம் கொள்ளும் நாம் நாளை பெற்றோர் தானே???.....
நம் உடன் பிறந்த சகோதரிக்கு கூட நேரலாம் எவர் கண்டார்??????.......
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,843
Points
133
Location
Chennai
மழைக்காலதேநீர்
மடியில் அவன் கவிதைநூல்

இழைத்துவிட்டதான
முத்தத்தின் மொத்தத்தையும்

அழைத்து அவனும்
தமிழில் நனைத்திருக்கிறான்

நிழலைப் போலவே
நின்றவன்தோள்பற்றுகிறான்

சந்தித்த வேளைகளும்
சகாவரம் பெற்றாகி விட்டது

சிந்தித்த கவிதைகளில்
சிறந்ததுவும் விளைகின்றது

சந்திரநுதல் சக்கரபொட்டு
செந்நிறத்தில் மிளிர்கின்றது

மந்திரத்தின் மொழியாய்
மனதிலே அதுவும் ஒலிக்கிறது

மௌனமாக நிற்கின்றாள்
மாமனெனையும் நினையாது

தேனாகவந்து தித்திப்பை
தானாக தருவாளோ அவளும்

கானமிசைத்து காத்திருக்க
என்கருவண்டு கண்ணழகே

அன்பை மறைக்காது அழகு
காதலும்ஏற்பாளோ என்ராணி
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,843
Points
133
Location
Chennai
மகாகவி பாரதியார் பிறந்த நாள்......

நீ விட்டுச் சென்ற மூச்சுக் காற்றில் தான் இன்னமும் சுவாசித்து கொண்டு இருக்கிறேன்
கவிதை வரிகளாக உன் பெயரைக் சொல்லி....

அன்புடன் மைக்கிள்
 
Top