vidya_vidya
Active member
- Joined
- Apr 11, 2023
- Messages
- 23
- Points
- 33
எங்கு போனாய்? என்ன ஆனாய்?
காற்று உன்னை கானகம் கடத்திச் சென்றதா?
அது அவ்விடம் அலைக்கற்றைகளை அனுப்பவில்லையா?
கை ஒடிந்த வேளையிலே, கால் நோக காட்டினை கடந்தாயா?
தவித்தாயா? வலியிலே துடித்தாயா?
ஏன் வரவில்லை இங்கே?
புற வலி போதாது என்று,
அக வலியும் சேர்த்து அணைத்து துடிக்கிறாயா?
மருந்தில்லா உன் அகப்புண்ணை மீண்டும் மீண்டும் தீண்டாமல்,
மீண்டு வருவதே உன்னை தேற்றும் வழி
என்பதை என்றாவது உணர்வாயா?
கடந்து செல்ல வலிகள் வழி பாதை அல்ல
என்பதை நன்கறிவேன்! ஆனால்,
காலமெல்லாம் மனதிலே அதை சுமக்க
நீ சுமை தாங்கியும் அல்லவே? !
விஞ்ஞானம் வளர்ந்து என்ன பயன்?
ஒரு வலிகடத்தியை உருவாக்கவில்லையே யாரும்!
உன் வலி போக்க, ஒரு வழி போக்கியாய் சில மணித்துளிகளை கவி பரிமாரி
ஆனந்தமாய் கழிக்க விழைந்தேன்!
காணவில்லை உன்னை!
கேட்ட போதெல்லாம் பொய்யுரைத்தேன்,
உண்மை நீ அறிவாய் என்றெண்ணி!!!
உணரவே இல்லையா உனக்கான என் தேடலை?
காற்றை கட்டுக்குள் வைத்து, உறைவிடம் தேடி,
அலைக்கற்றையை இணைத்து, இவ்விடம் வந்தால்,
இதை வாசிப்பிப்பாய் என்ற நம்பிக்கையில் உனக்கொரு சேதி!
மாயவியாகி போகும் முன் சொல்லச் சொன்னாய்,
செல்கிறேன்! மீண்டும் உன்னோடு சேர்ந்து கான மழையில்
நனைவேன் என்ற நம்பிக்கையில்!
காற்று உன்னை கானகம் கடத்திச் சென்றதா?
அது அவ்விடம் அலைக்கற்றைகளை அனுப்பவில்லையா?
கை ஒடிந்த வேளையிலே, கால் நோக காட்டினை கடந்தாயா?
தவித்தாயா? வலியிலே துடித்தாயா?
ஏன் வரவில்லை இங்கே?
புற வலி போதாது என்று,
அக வலியும் சேர்த்து அணைத்து துடிக்கிறாயா?
மருந்தில்லா உன் அகப்புண்ணை மீண்டும் மீண்டும் தீண்டாமல்,
மீண்டு வருவதே உன்னை தேற்றும் வழி
என்பதை என்றாவது உணர்வாயா?
கடந்து செல்ல வலிகள் வழி பாதை அல்ல
என்பதை நன்கறிவேன்! ஆனால்,
காலமெல்லாம் மனதிலே அதை சுமக்க
நீ சுமை தாங்கியும் அல்லவே? !
விஞ்ஞானம் வளர்ந்து என்ன பயன்?
ஒரு வலிகடத்தியை உருவாக்கவில்லையே யாரும்!
உன் வலி போக்க, ஒரு வழி போக்கியாய் சில மணித்துளிகளை கவி பரிமாரி
ஆனந்தமாய் கழிக்க விழைந்தேன்!
காணவில்லை உன்னை!
கேட்ட போதெல்லாம் பொய்யுரைத்தேன்,
உண்மை நீ அறிவாய் என்றெண்ணி!!!
உணரவே இல்லையா உனக்கான என் தேடலை?
காற்றை கட்டுக்குள் வைத்து, உறைவிடம் தேடி,
அலைக்கற்றையை இணைத்து, இவ்விடம் வந்தால்,
இதை வாசிப்பிப்பாய் என்ற நம்பிக்கையில் உனக்கொரு சேதி!
மாயவியாகி போகும் முன் சொல்லச் சொன்னாய்,
செல்கிறேன்! மீண்டும் உன்னோடு சேர்ந்து கான மழையில்
நனைவேன் என்ற நம்பிக்கையில்!
Last edited: