M
Mathangi
Guest
மனதினில் மலர்ந்த காதல்
மனத்தினுள் பதியும் முன்னே
மறைந்து போனது ஏனோ ?
சொல்லிய வார்த்தைகள் யாவும்
சொல்லோடு மட்டும்
மடிந்து போனது ஏனோ ?
கண்ணில் தோன்றி
கனவுகளில் வாழும் முன்னே
கலைந்து போனது ஏனோ ?
தித்திப்பாய் திகழ்ந்த உறவு
மனம் தத்தளிப்பில்
தவிப்பாய் போனது ஏனோ ?
உன் ஒத்த சொல்லில்
சித்தம் கலங்கி,
என் மனம் திகைப்பில்
சிதைந்து போனதும் ஏனோ ?
மனத்தினுள் பதியும் முன்னே
மறைந்து போனது ஏனோ ?
சொல்லிய வார்த்தைகள் யாவும்
சொல்லோடு மட்டும்
மடிந்து போனது ஏனோ ?
கண்ணில் தோன்றி
கனவுகளில் வாழும் முன்னே
கலைந்து போனது ஏனோ ?
தித்திப்பாய் திகழ்ந்த உறவு
மனம் தத்தளிப்பில்
தவிப்பாய் போனது ஏனோ ?
உன் ஒத்த சொல்லில்
சித்தம் கலங்கி,
என் மனம் திகைப்பில்
சிதைந்து போனதும் ஏனோ ?