What's new

செத்தான்டா சேகரு!.. நகைச்சுவை கதை!.

IceCube

Well-known member
Joined
Apr 2, 2022
Messages
21
Points
53
✍️ஒரு குடும்பத்தில் கணவன்-மனைவி மற்றும் அவர்களுடைய மகன் மூவரும் இருந்தனர். மகன் பள்ளியில் படிக்கிறான்.மாலை 4 ணிக்கு வீட்டிற்கு வந்து விடுவான்..கணவன் 5 மணிக்கு பணி முடிந்து வீட்டிற்கு வந்துவிடுவார். மனைவி 7 மணிக்கு பணி முடிந்து வீடு திரும்புவார்..

மனைவிக்கு ஒரு சந்தேகம், 5 மணிக்கே வீட்டிற்கு வந்து விடும் கணவன், வீட்டில் தான் இருக்கிறாரா? இல்லை வீட்டில் இருக்காமல் ஊர் சுற்ற போயி விடுகிறாரா? என்று!.

6 மணிக்கு Phone செய்து கேட்டாள் எங்கே இருக்கிறீர்கள்?..அதற்கு கணவன் பதில்: வீட்டில் தான் இருக்கிறேன்..அதற்கு மனைவி: சரி, அப்படி என்றல் நம் வீட்டு மிக்ஸியை ON செய்யிங்கள் என்றாள் !. கணவனும் ON செய்தார், சத்தம் கேட்டு ஓ சரி என்று மனைவி Phone ஐ வைத்து விட்டார்!. மீண்டும் அடுத்த சில நாட்களாக அதே போல போன் செய்தாள், மிக்ஸி சத்தம் கேட்டு சரி, வீட்டில் தான் இருக்கிறார் என்று நம்பினாள்,

ஒரு வாரம் கழித்து ஒருநாள், ஆஹா., நம்ம கணவர் ரொம்ப நல்லவர், வீணாக நாம் அவரை சந்தேகப்பட்டு விட்டோமே என்று வருந்தி, சரி ன்று 6 மணிக்கு பெர்மிஷன் போட்டுவிட்டு ஸ்வீட்ஸ் வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றாள் கணவனை
சந்தோசப்படுத்த..

வீட்டில் போயி பார்த்தால் கணவன் இல்லை..
மகனிடம் கேட்டாள், அப்பா எங்கடா என்று,

அதற்கு மகனின் பதில்:

தெரில மா தினமும் சாயங்காலம் மிக்ஸிய தூக்கி கட்ட பைல போட்டுட்டு போறார், நீ வரதுக்கு முன்னாடி வீட்டுக்கு வந்துடுறார்.. ஏம்மா மிக்ஸி ஏதும் ரிப்பேரா?
இன்னுமா சரி ஆகல என்றான்!.

😎இன்னும் கொஞ்ச நேரத்துல கட்ட பையோட திரும்பி வரப்போற நம்ம சேகரு செத்தான்டா இன்னிக்கி!.. 🤪

:LOL:
 
Top