- Joined
- Oct 8, 2022
- Messages
- 2,928
- Points
- 133
`சொல்லுங்க மாமாக்குட்டி' -
Break up-க்குப் பிறகு எக்ஸ் உடன் நண்பராகப் பழகலாமா?
காதல் முறிவுக்குப் பிறகு நண்பர்களாக இருக்கிறோம் என்றால், அவர்கள் பழைய உறவுக்குள் நிகழ்ந்த தவறுகளை மீண்டும் பேசி கிளறக்கூடாது. நெருக்கமான உரையாடல்களைத் தவிர்க்க வேண்டும். இப்படியான எல்லைகளை வகுத்து, தெளிவாக இருக்க முடியும் என்றால் காதலித்து பிரிந்தவர்கள் நண்பர்களாகப் பழக முடியும்.காதல் ஏற்படுவது எப்படி இயல்பானதோ அதேபோல் அந்த உறவு முறிவதும் இயல்பானதே. காதல் உறவு முறிகையில் தன் இணையருடனான உணர்வுபூர்வமான அணுக்கம் தகர்ந்து போவதாலும், தங்களது எதிர்காலத்தில் அவர்களுக்கு எள்ளளவும் இடம் இல்லை என்கிற உண்மை உரைப்பதாலும் அது வலிமிக்கதாக இருக்கிறது. அதையெல்லாம் கடந்து வந்து, நாம் இன்னொருவருடன் காதல் அல்லது திருமண உறவுக்குச் சென்று விட்டாலும், எந்த உறவிலும் இல்லாமல் இருந்தாலும் தன் முந்தைய காதலருடன் நண்பராகப் பழகலாமா என்பது குறித்து பார்க்கலாம்.
`காதலில் பிரேக்அப் ஆனதற்குப் பிறகு நட்பாகப் பழகுவதில் தவறில்லை. ஆனால், இந்தக் காதல் முறிவு நிரந்தரமா என்பதில் தெளிவு இருக்க வேண்டும். ஒரு முடிவு எடுக்க முடியாமல் இருக்கும்போது நட்பாகப் பழக முடியாது என்பதே நிதர்சனம். ஏனெனில், மீண்டும் காதலைத் தொடர முடியுமா என்ற எண்ணம் ஏற்படலாம். முதலில் ஏன் காதல் அல்லது திருமண உறவில் முறிவு ஏற்படுகிறது என்பதை ஆராய வேண்டும். ஆண், பெண் இருவருக்கும் ஒத்துப்போகாமல் இருக்கும் போதும், மனதளவிலும் உடலளவிலும் காயப்பட்டுமே அந்த உறவில் நீடிக்க முடியாமல் பிரிந்து செல்கின்றனர். ஓர் உறவைத் தொடர முடியாது என்ற நிலையிலேயே பிரியும் முடிவை எடுக்கும்போது ஏன் நட்பாகத் தொடர வேண்டும்?
இருவரது உறவையும் நினைவுபடுத்துவது போன்ற சம்பவங்கள், இடங்கள் என நிறைய இருக்கலாம். அதனால், நட்பாகப் பழக வேண்டும் என்றால், எது இருவருக்குமான எல்லை என்பதை வகுக்க வேண்டும். அதை இருவரும் மீறக்கூடாது என்பதைத் தெளிவுப்படுத்திக்கொள்ளவதோடு, தங்கள் காதல் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை இருவரும் முழுமையாக உணர்ந்திருக்க வேண்டும்.
இவை எல்லாவற்றையும் மீறி காதல் முறிவுக்குப் பிறகு, நட்பாகப் பழகும் இருவருக்கும் தங்கள் முடிவின் மீது குழப்பங்கள் ஏற்படலாம். அதனால், இருவரும் சந்திக்கும்போது நண்பர்களுடன் சந்திக்கலாம், புதிய வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்டோம் என்பதையும், ஒருவர் மீது ஒருவருக்கு எந்த உரிமையும், அக்கறையும் இல்லை என்பதையும் உணர வேண்டும். காதல் முறிவுக்குப் பிறகு நண்பர்களாக இருக்கிறோம் என்றால், அவர்களது பழைய உறவுக்குள் நிகழ்ந்த தவறுகளை மீண்டும் பேசிக் கிளறக்கூடாது. நெருக்கமான உரையாடல்களைத் தவிர்க்க வேண்டும். இப்படியான எல்லைகளை வகுத்துத் தெளிவாக இருக்க முடியும் என்றால் காதலித்துப் பிரிந்தவர்கள் நண்பர்களாகப் பழக முடியும். அப்படி இல்லை எனில் அந்த உறவு மீண்டும், மீண்டும் சிக்கல்களையே ஏற்படுத்தும்”.