- Joined
- Apr 8, 2022
- Messages
- 845
- Points
- 133
தனிமை என்னும் கொடுமை
தலை விரித்தாட
இனிமை இன்றி வாழ்வும்
அனுதினமும் வாட
கொடுமையென இருக்கும் நிலையினிலே நானும்
கடந்து வந்தேனே நீண்ட நெடுங்காலம்
சில நாட்கள் முன்னர் உன்னை நான் கண்டேன்
நிகழ்ந்ததுவே எனக்கும் உன்னால் ஒரு மாற்றம்
மனக்கவலை தீர மருந்தாய் நீ வந்தாய்
மங்கை உன் பேச்சும் ஆனதே விருந்தாய்
புன்னகையில் நீயும் தெரிந்தாயே
பூவாய்
அன்பு அதை கொட்ட ஆனாயே தாயாய்
நித்தம் நீ பேச எனக்குள்ளும் ஆசை
கேட்குதடி காதில் நீங்கா உன் ஓசை
ஊருக்குள்ள எவன் எவனோ
எதை எதையோ கண்டறிஞ்சான்
நீ தானே என் பெயரின்
காரணத்தை கண்டறிஞ்ச
அதை நீயும் என்கிட்ட சொல்லிட்டு சிரிக்கிறப்போ
என் சோகம் எல்லாமே அந்த நொடி மறக்குதடி
ஆழ்கடலில் போய் எடுத்த முத்து போல நீ கிடைச்ச
காலமெல்லாம் சொத்தாக உனை தானே நான் காப்பேன்
நீ கூட இருகுறப்போ என் மனசும் நோகாதே
என்ன நடந்தாலும் நீ எனை விட்டு போகாதே
தலை விரித்தாட
இனிமை இன்றி வாழ்வும்
அனுதினமும் வாட
கொடுமையென இருக்கும் நிலையினிலே நானும்
கடந்து வந்தேனே நீண்ட நெடுங்காலம்
சில நாட்கள் முன்னர் உன்னை நான் கண்டேன்
நிகழ்ந்ததுவே எனக்கும் உன்னால் ஒரு மாற்றம்
மனக்கவலை தீர மருந்தாய் நீ வந்தாய்
மங்கை உன் பேச்சும் ஆனதே விருந்தாய்
புன்னகையில் நீயும் தெரிந்தாயே
பூவாய்
அன்பு அதை கொட்ட ஆனாயே தாயாய்
நித்தம் நீ பேச எனக்குள்ளும் ஆசை
கேட்குதடி காதில் நீங்கா உன் ஓசை
ஊருக்குள்ள எவன் எவனோ
எதை எதையோ கண்டறிஞ்சான்
நீ தானே என் பெயரின்
காரணத்தை கண்டறிஞ்ச
அதை நீயும் என்கிட்ட சொல்லிட்டு சிரிக்கிறப்போ
என் சோகம் எல்லாமே அந்த நொடி மறக்குதடி
ஆழ்கடலில் போய் எடுத்த முத்து போல நீ கிடைச்ச
காலமெல்லாம் சொத்தாக உனை தானே நான் காப்பேன்
நீ கூட இருகுறப்போ என் மனசும் நோகாதே
என்ன நடந்தாலும் நீ எனை விட்டு போகாதே