- Joined
- Apr 8, 2022
- Messages
- 845
- Points
- 133
அந்தி சாயும் அந்த நேரம்
கண்கள் உன்னை கண்ட போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் ஒன்று
வந்தது போல் நானும் கண்டேன்
மெல்ல உந்தன் கண்ணை பார்த்து
சின்னதாக புன்னகையும்
எந்தன் முகத்தில் எட்டி பார்க்க
சிந்தை யாவும் நீயும் ஆனாய்
பின்னர் உன்னை நெஞ்சில் நிறுத்தி
நித்தம் நித்தம் நானும் துரத்தி
உன்னை எந்தன் நண்பியாக்க
அந்த நொடியே என்னம் கொண்டேன்
காதல் கொண்ட நெஞ்சை மறைத்து
கவிதை பல உனக்காய் உரைத்து
உந்தன் அன்பை பெற்றே நாளும்
எந்தன் நாளை கழித்திருந்த்தேன்
ஓர் நாள் நீயும் என்னை பார்த்து
கவிதை பற்றி பேச்செடுக்க
நானோ எந்த கவிதை எல்லாம்
உனக்காய் அன்றே சொல்லி சென்றேன்
ஓரெழுத்து கவிதை ஒன்றை நீ கேட்டாய்
யோசிக்காமல் நான் நீ என்றேன்
சிரித்துக்கொண்டே ஈரெழுத்தென்றாய்
புன்னகையுடன் நாமே என்றேன்
அக்கணம் எந்தன் மனம்தான் புரிந்து காதல் சொல்வாய் என நான்
எண்ணித்தானே காத்திருந்தேன்
உந்தன் பதிலை பார்த்திருந்தேன்
பக்கமாய் இருந்த நீயும்
எங்கே என்னை நீங்கி சென்றாய்
சொர்க்கமே நீயும் இன்றி
நரகமாய் வாழ்கிறேனே
கண்கள் உன்னை கண்ட போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் ஒன்று
வந்தது போல் நானும் கண்டேன்
மெல்ல உந்தன் கண்ணை பார்த்து
சின்னதாக புன்னகையும்
எந்தன் முகத்தில் எட்டி பார்க்க
சிந்தை யாவும் நீயும் ஆனாய்
பின்னர் உன்னை நெஞ்சில் நிறுத்தி
நித்தம் நித்தம் நானும் துரத்தி
உன்னை எந்தன் நண்பியாக்க
அந்த நொடியே என்னம் கொண்டேன்
காதல் கொண்ட நெஞ்சை மறைத்து
கவிதை பல உனக்காய் உரைத்து
உந்தன் அன்பை பெற்றே நாளும்
எந்தன் நாளை கழித்திருந்த்தேன்
ஓர் நாள் நீயும் என்னை பார்த்து
கவிதை பற்றி பேச்செடுக்க
நானோ எந்த கவிதை எல்லாம்
உனக்காய் அன்றே சொல்லி சென்றேன்
ஓரெழுத்து கவிதை ஒன்றை நீ கேட்டாய்
யோசிக்காமல் நான் நீ என்றேன்
சிரித்துக்கொண்டே ஈரெழுத்தென்றாய்
புன்னகையுடன் நாமே என்றேன்
அக்கணம் எந்தன் மனம்தான் புரிந்து காதல் சொல்வாய் என நான்
எண்ணித்தானே காத்திருந்தேன்
உந்தன் பதிலை பார்த்திருந்தேன்
பக்கமாய் இருந்த நீயும்
எங்கே என்னை நீங்கி சென்றாய்
சொர்க்கமே நீயும் இன்றி
நரகமாய் வாழ்கிறேனே