What's new

படித்ததில் பிடித்தவை - ( தாய்பாசம் - பிரியன் )

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 1
M

Mathangi

Guest
{ மனைவியின் பேச்சை கேட்டு தன் தாயை முதியோர் இல்லத்திற்கு அனுப்பி விடும் மகன். அந்த இல்லத்தில் மற்ற முதியவர்களிடம் அந்த தாய் புலம்பும் சோக வரிகள் }

பட்டு சட்ட போட்டுக்கிட்டு
துட்டு கொஞ்சம் வாங்கிகிட்டு
சிட்டு போல பொம்பளைய
கட்டிக்கிட்டு வந்தானே!

பெத்தமனம் படபடக்க
வளத்தமனம் துடிதுடிக்க
கல்யாணம் கட்டி வந்து
கண்கலங்க வச்சானே!

என்னடான்னு கேட்டாக்கா
"நடந்தது நடந்திருச்சு
நடக்குறத பாரு"ன்னு
நாசூக்கா சொன்னானே!

நாவச்ச பூச்செடிதான்
நாளபின்ன பூக்குமின்னு
கண்ணுறக்கம் கெட்டு போயி
காத்துதான் கெடந்தேனே!

நேத்து வந்த புயல் காத்து
பூச்செடிய தின்னுபுட்டு
எம்முன்னே ஏப்பம்விட்டு
போகுதறக் கண்டேனே!

பொண்டாட்டி பேச்சையே
பொன்னு போல நினைச்சு
சொத்தெல்லாம் எழுதி வாங்கி
சோகத்துல விட்டானே!

ஏ ஆத்தா ஏ ஆத்தான்னு
தலைமேல வச்ச மகன்
போ ஆத்தா போ ஆத்தான்னு
சொல்லாம சொன்னானே!

ரெண்டு மூன பெத்திருந்தா
வண்டுபோல வாழ்ந்திருப்பேன்
சாகபோற காலத்திலாவது
சந்தோசமா இருந்திருப்பேன்!

பொத்திவச்ச பத்திரமா
ஒத்தமகன பெத்ததால
போக்கிடமே இல்லாம
புகழுகேட்டு நிக்கிறேனே!

மத்தியான நேரத்துல
காலக்கஞ்சி கேட்டதுக்கு
எப்பவுமே சோறான்னு
எடுத்தெறிஞ்சு சொன்னானே!

பத்து முழம் மல்லி வாங்கி
பக்குவமா வச்சுவிட்டு
பக்கத்துல வாடின்னு
பொஞ்சாதிய கொஞ்சினானே!

பட்டணப் பொடி வாங்க
பைசான்னு கேட்டாக்கா
வெட்டி செலவு எதுக்குன்னு
வெறுங்கைய விரிச்சானே!

அவளோட பேச்ச கேட்டு
உறவெல்லாம் அத்துக்கிட்டு
ஆத்தான்னு பாக்காம
அனாதிபோல வச்சானே!

நடக்கவும் தெம்பில்ல
பார்க்கவும் கண்ணில்ல
தலையில மயிரில்ல
ஒடம்புல முழுசா உயிரில்லா

அரளிகொட்ட அரச்சு வச்சு
கஞ்சிகூட கலந்து வச்சு
வம்படியா சாகவக்கல
வக்கணையான எம்புள்ள!

காசு கொஞ்சம் செலவழிச்சு
ஆசிரமம் அனுப்பி விட்ட
எம்புள்ள ராசாதான்!

நாவளத்த ரோசாதான்!:confused::confused:
 
Last edited by a moderator:

ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
அரளிகொட்ட அரச்சு வச்சு
கஞ்சிகூட கலந்து வச்சு
வம்படியா சாகவக்கல
வக்கணையான எம்புள்ள!

காசு கொஞ்சம் செலவழிச்சு
ஆசிரமம் அனுப்பி விட்ட
எம்புள்ள ராசாதான்!
நாவளத்த ரோசாதான்!

Romba touching aana lines thozhi..
 
M

Mathangi

Guest
அரளிகொட்ட அரச்சு வச்சு
கஞ்சிகூட கலந்து வச்சு
வம்படியா சாகவக்கல
வக்கணையான எம்புள்ள!

காசு கொஞ்சம் செலவழிச்சு
ஆசிரமம் அனுப்பி விட்ட
எம்புள்ள ராசாதான்!
நாவளத்த ரோசாதான்!

Romba touching aana lines thozhi..
aamanga thozhi ivaroda kavithai ellaam nalla irukkum athum enakku ithu rompa pidicha kavithai manasai urukkura kavithai:love::)
 
Top