What's new

பெண்ணுரிமை..

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
காணுகின்ற யாவையுமே
கண்ணியம் தான் செய்திடுவான்
கண்ணினிக்கும் இயற்கையுமே
பெண்ணெனவே தொழுதிடுவான்

அத்தனையும் சக்தியென
சத்தமிட்டு பெண்மையினை
தொன்றுதொட்டு கூறி வரும்
ஒரு இனமே தமிழினமாம்

சித்திரமும் கை பழக்கம் செந்தமிழும் நா பழக்கம்
என்றுறைக்கும் தமிழனுக்கு
உள்ளதொரு நல்லொழுக்கம்

இன்று அது கொஞ்சமென
மாறியது நஞ்செனவே
பெண்ணடிமை பேசுகிறார்
தமிழினிக்கும் நாவினிலே

தனை ஈன்ற தாயுமொரு
பெண்னெனவே புரியாமல்
பெண்ணுரிமை பேசிடுவோர்
மீது பகை வீசுகிறார்

அடுப்பூதும் பெண்களுக்கு
படிப்பெதற்கு என்று சொல்லி
அகம்பாவம் கொண்டே பெண்
உரிமைகளை முடக்குகிறார்

அச்சம் மடம் என்றெல்லாம்
அடுக்கடுக்காய் வார்த்தை சொல்லி
அடக்கிடவே முயலுகிறோம்
அற்புத பெண்ணினத்தை

கற்பெண்ணும்மொரு சொல்லை
காரணமாய் கொண்டேதான்
கலிகால தமிழர்களும்
பெண்ணுரிமை மீறுகிரார்

கற்பெண்ணும் ஒரு உணர்வு
பெண்மைக்கு மட்டுமல்ல
அர்ப்பமாய் பிறந்திட்ட
ஆணுக்கும் உள்ளதடா

கற்பிங்கு யாவருக்கும்
உடலிலே இல்லையடா
கண்ணியத்தை பேணுகிற
உள்ளத்தில் தான் உள்ளதடா

சொற்பமாய் நாம் வாழும்
சில காலம் எல்லாமே
கர்ப்பத்தில் நமை காத்த
பெண்ணை நாம் காப்போமே

பெண்ணடிமை எண்ணமதை
அகத்திலுலே ஏற்றாமல்
மண் மீது எந்நாளும்
பெண்ணுரிமை காத்திடுவோம்!!


கண்ணென பெண்ணை காக்க
ஆணுமே தேவை இல்லை
மண்ணிலே பெண்ணை போன்ற
மகத்துவம் ஏதுமில்லை

என்பதை உணர்ந்து ஆண்கள் பெண்ணடிமை என்னத்தை நீக்கினாலே பெண்ணினம் தானாய்
முன்னேறும்

அன்புடன் The Popeye
 
Top