- Joined
- Oct 19, 2022
- Messages
- 701
- Points
- 113
என்ன ஆனதோ இன்று எனக்கு?
இதயம் குழம்பியதே எதற்கு?
பூ மாலை போல ஜொலிக்கும் மேகம்,
பனித்துளி போல மழை பொழியும்,
என்னவள் அழகை பார்க்கும் போது,
ஏன் நானும் வேர்க்கிறேன் அப்போது?
எவரின் கை வண்ணத்தில் உருவான சிற்பம்,
அவளின் எழில் எனக்கு புதிய சாபம்,
அவளின் அழகு கண்களை மறைக்கும்,
புது வினோத உற்சாகம் எனை சூழும்,
மறக்க முடியாத இன்ப மாயம்,
கொட்டும் மழையில் எடுக்கிறதே தாகம்...
தொடரும்...