- Joined
- Jun 14, 2022
- Messages
- 1,902
- Points
- 133
மாலை நேர சாலையில்
மான் ஒன்று வந்தது தூரலில்..
மாலை நேரத்து மயக்கமா?
இல்லை என் காதல் சொல்ல தயக்கமா?
சாரல் காற்று வீசுதே..
மடி சாய்ந்திட மனம் ஒன்று ஏங்குதே..
மேகம் எல்லாம் பார்க்குதே..
மேலும் மேலும் ஏங்குதே!!!
நீரில் மிதக்கும் நிலா போல..
நீயும் வந்தால் நித்தமே..
சத்தம் போடும் இடி எல்லாம்
சங்கீதம் வாசிக்க செல்லுமே...
காற்றில் பறந்த மழைத்துளிகள்..
காகிதம் போல் உன் கன்னத்தில் ஒட்டியதே
காதில் மிதக்கும் கம்மல்கள்..
காற்றின் இசையில் ஆடியதே...
பின்னால் செல்லும் மேகங்களே..
பிறை ஒன்று வருவது தெரிகிறதா?
பிழைகள் இல்லை என் காதலில்...
பிறந்தேன் உனக்காக புரிகிறதா?
இறைவா இன்றே ஆணை இடு..
இதழ்களால் சொல்ல வேண்டும் என்று..
இத்தனை வலிகள் இருந்தாலும்
இன்பத்தை தேடி அலைகின்றது ..
இதயம் ஒன்று இருக்கின்றது..
இறுதிநாள் வரை காத்திருக்கின்றது..
இன்னிசை பாடிடும் இசை ஒன்று..
இல்லை என்றால் உயிர் துறக்கின்றது..
மான் ஒன்று வந்தது தூரலில்..
மாலை நேரத்து மயக்கமா?
இல்லை என் காதல் சொல்ல தயக்கமா?
சாரல் காற்று வீசுதே..
மடி சாய்ந்திட மனம் ஒன்று ஏங்குதே..
மேகம் எல்லாம் பார்க்குதே..
மேலும் மேலும் ஏங்குதே!!!
நீரில் மிதக்கும் நிலா போல..
நீயும் வந்தால் நித்தமே..
சத்தம் போடும் இடி எல்லாம்
சங்கீதம் வாசிக்க செல்லுமே...
காற்றில் பறந்த மழைத்துளிகள்..
காகிதம் போல் உன் கன்னத்தில் ஒட்டியதே
காதில் மிதக்கும் கம்மல்கள்..
காற்றின் இசையில் ஆடியதே...
பின்னால் செல்லும் மேகங்களே..
பிறை ஒன்று வருவது தெரிகிறதா?
பிழைகள் இல்லை என் காதலில்...
பிறந்தேன் உனக்காக புரிகிறதா?
இறைவா இன்றே ஆணை இடு..
இதழ்களால் சொல்ல வேண்டும் என்று..
இத்தனை வலிகள் இருந்தாலும்
இன்பத்தை தேடி அலைகின்றது ..
இதயம் ஒன்று இருக்கின்றது..
இறுதிநாள் வரை காத்திருக்கின்றது..
இன்னிசை பாடிடும் இசை ஒன்று..
இல்லை என்றால் உயிர் துறக்கின்றது..