What's new

யாரோ நீ ..

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
அத்தை மகளோ மாமன் மகளோ
எத்தகையவளோ என்ன உறவோ

இத்தனை நாளாய் எங்கிருந்தாளோ
எந்தன் மனதை கொய்ய வந்தாளோ

சித்தனை போலே இருந்தவன் என்னை
பித்தனை போல ஆக்க வந்தாளோ

கத்தி போல பார்வையில் நெஞ்சை
குத்தி கிழிக்க வந்தவள் அவளோ

மென்மை எனும் பெண்மையை கொண்டு
வன்மையை அவளின் சொல்தனில் கொண்டு

துச்சமாய் எந்தன் காதலை என்னி
எச்சமாய் என்னை வீசிய கன்னி


காதலின் உணர்விலே நானும் பணிந்து
புத்தியில் உன்னை ஏற்றிட துணிந்து

சக்தியெல்லாம் திரட்டி காதலை சொல்ல
காத்திருப்பேன் நான் உன் மனம் வெல்ல..
 
Top