What's new

வாய்ப்பு...

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,550
Points
133
Location
Universe
கிடைக்கும் வாய்ப்பை.

*♻️எல்லோருக்கும் எல்லாம் அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது. ஆனால்!, அவர்கள் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னுக்கு வந்தவர்கள்...*

*♻️ஒபாமா தனது நாற்பத்து நான்காவது வயதில் அமெரிக்காவின் அதிபர் ஆனார். ஆனால்!, டொனால்ட் டிரம்ப் தனது எழுபதாவது வயதில்தான் அதிபர் ஆகிறார்...*

*♻️பில்கேட்ஸ் தனது முப்பதுகளிலேயே உலகின் பெரிய செல்வந்தரானார். ஆனால்!, நிறுவனத்தை தனது ஐம்பதாவது வயதில்தான் தொடங்கி அமான்சியோ ஓர்டேகா எண்பது வயதில்தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தரானார்...*

*♻️ஒருவருக்கு அவர் விரும்பிய வேலை வாய்ப்பு தானாகவே தேடி வருகிறது. இன்னொருவருக்கோ எல்லா திறமைகள் இருந்தும் சரியான வேலையோ அல்லது தொழிலோ அமைவது இல்லை...*

*♻️இருபத்தி இரண்டு வயதில் தனது வியாபாரம் தொழிலில் செல்வந்தரான ஒருவர் நாற்பது வயதில் எல்லாம் இழந்து ஏழ்மை ஆகிறார். ஒருவர் நாற்பது வயது வரை தன் தொழில் வியாபாரத்தில் அனைத்து விரயங்களை அனுபவித்து ஐம்பதாவது வயதில் செல்வந்தராகிறார்...*

*♻️சர்ச்சில் தனது எண்பத்து இரண்டாவது வயதில் 'History of English Speaking People' என்ற புத்தகத்தை எழுதினார். பெர்னாட்ஷா தனது தொண்ணுற்று மூன்றாவது வயதில் 'Pertouched Pepler' என்ற நாவலை எழுதினார். டால்ஸ்டாய் தனது எண்பத்து இரண்டாவது வயதில் ''I Cannot Be Silent'' என்றார். வில்லியம் ஷேக்ஸ்பியர் தனது ஐம்பதாவது வயதை தாண்டிய பிறகே முப்பத்து ஏழு நாடகங்களை இயற்றினார்...*

*😎ஆம் நண்பர்களே...!*

🏵️ *உங்களுக்கு ஒன்று கிடைத்துவிட்டால் அது கிடைக்காமல் போராடும் மற்றவரை ஏளனம் செய்யாதீர்கள். உங்களை மற்றவரோடு ஒப்பிட்டு உங்களிடம் இல்லாததை நினைத்து புலம்பாதீர்கள். யார் கண்டது...?அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்று,..!*

⚽ *இந்த உலகமே ஒரு பெரிய விபத்தால் உருவானது தான். எனவே எதிர்காலத்தில் நடக்க விருப்பதை எல்லாம் கட்டுப்படுத்த நினைப்பது இயலாது. இங்கே இப்போது இந்த நொடியில் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ!, அதை முழுமையாக விழிப்புணர்வுடன் செய்யுங்கள்...!!*

🏵️ *அடுத்த நொடி உறுதியாக அழகாய் மலரும். தேவைகளை உறுதியாக நிறைவு செய்துகொள்ள முடியும். வாழ்க்கை என்பது வாய்ப்புகளால் நிரம்பியது, நாம் பயன்படுத்தும் வாய்ப்பை பொறுத்தே நம் வாழ்க்கை அமையும், இதைப் புரிந்து கொண்டவர்கள் மட்டுமே மகிழ்வாக வாழ்கிறார்கள்...!
 
Top