Ennaium kati veetaium kati andha veetuku katunaa en per vacha.. Athu epdi avar veedu ahum
பெண் இல்லாத இடம்
வீடு என்று பெயர் படாது
செந்தமிழிலே "அகம்" என்ற சொல்லினை இரண்டு பொருளிலே பயன்படுத்தப்படுவதை காண்கிறோம். ஒன்று "வசிப்பிடம்" என்னும் பொருளில் மற்றொன்று "உள்ளம்" என்னும் பொருளில்.
அதைக்கொண்டே கணவனை "அகமுடையான்" என்றும் மனைவியை "அகமுடையாள்" என்றும் விளிக்கும் சொல்லாட்சியை பார்க்க முடிகிறது. தற்போது பேச்சு வழக்கில் "ஆம்டையான்" என்றும் "ஆம்படையா(ள்)" என்றும் அந்தணர்கள் அன்பொழுக செந்தமிழில் சொல்வதைக் காணலாம்.
வீடு வெறும் கட்டிடமில்லை. அது உள்ளங்களால் ஆனது. மிகப்பெரிய அரண்மனையை எழுப்பினாலும் அதிலே ஆயனுக்கு அய்ச்சியென ஒரு பெண் இல்லாது போனால் அது உயிரற்ற கட்டிடமே. இல்லமாகாது என்பதை குறிப்பாக உணர்த்திடவே அதனை 'அகம்' என்றும் சொல்கிறோம். இன்னும் தமிழர் விரோதிகளென கயவர்களால் முத்திரை குத்தப்பட்ட பார்ப்பனர்கள் தான் அத்தமிழ்ச் சொல்லை பயன்படுத்தி வருகின்றனர். "எங்கள் அகத்திலே" என்பதை "எங்காத்துல" என்று பழகு தமிழில் பேச்சு வழக்கிலே சொல்வார்கள்
தமிழ் மொழியிலும் வாழ்வின் இறுதிப்பயனை இன்பத்துக்கு அடுத்ததாக பேரினப் வீட்டை "வீடு பேறு" என இதனையே (சிற்றின்பத்தையே) ஈடாக்கி காட்டியிருக்கிறார்கள். அவ்வின்பமும் அகத்தின் தலைவியாய் அமைந்த பெண்ணின்றி இல்லை.
வரைவின் மகளிரிடம் மேய்ந்து வருவதற்கு பெயர் இன்பமில்லை, வெறி. ஏனென்றால் மலரினும் மெல்லிது காமம். விலங்கியற்கையில் மேயும் உயிர்களுக்கு இது விளங்காது தான். பிறவிக்குருடர்கள் நிறத்தின் அழகினை உன்னவும் உணரவும் இயலாமை போல.
பெண்ணினத்தை மதித்துப் போற்றுவதும் வெறும் பொருட்களென நடத்துவதும் அவ்வச்சமுதாயத்தின் அறிவு நிலையை பிரதிபலிக்கிறது. இராவணனை போற்றுபவர்கள் கூட்டமும், அராபியப் பண்பாட்டிலும் பெண்களை ஈஸிச்சேர் ரிக்ளெய்னர் போல ஒரு உயிரற்ற பொருளாக பார்க்கும் வழமை. இராவணன் பார்ப்பான் வீட்டிலே பிறந்திருந்தாலும் பெண்களை மதிக்காததால் இழிபிறவியாகிப் போயிருந்தான். அந்த ரத்தம், பெற்ற தாயையும் உடன் பிறந்தோரையும் கூட பொருளாகத் தான் பார்க்கும்.
எந்த தேசங்களில் வீடுகளில் பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ அங்கே செல்வமும் செழிப்பும் திகழ்வதும் எங்கெல்லாம் பெண்கள் மதிக்கப்படவில்லையோ சுதந்திரமிழந்து துன்பத்தில் இருக்கிறார்களோ அங்கே தரித்திரியம் தாண்டவமாடுவதையும் அனுபவத்தில் காணலாம்.