What's new

POETRY CONTEST

Status
Not open for further replies.

Wanderer

Well-known member
Joined
Jan 2, 2022
Messages
445
Points
133
Whoever Participating in Contest
Kindly Post All your Content Here


கவிதைப் போட்டி

அணைத்து C2f பயனர்களுக்கும் வணக்கம்!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு "பென் அண்ட் தி பாட்" (Pen and The Pad) என்ற தலைப்பில் முதல் கவிதைப் போட்டியை அறிவிப்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். அணைத்து பயனர்களும் இதில் பங்கேற்று தங்களது மதிப்புமிக்க பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தங்களது கவிதைகளை C2f மன்றத்தில்(Forum) பதிவிடலாம். இக்கவிதை போட்டியின் கருப்பொருள் "மைல்கற்கள் மற்றும் நினைவுகள்"(Milestones and memories). தங்களது கவிதை 20 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பயன்படுத்தப்படும் வார்த்தைகள், எதுகை மோனை சொற்கள் மற்றும் கவிதையின் கரு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு கவிதையின் தரம் மதிப்பிடப்படும். இப்போட்டிக்கான இணைப்பு (https://www.chat2friends.com/forum/index.php?threads/poetry-contest.1098/) ஒரு வாரத்திற்கு
(till 09/04/2022) மட்டுமே திறந்திருக்கும். இதில் வெற்றி பெரும் பயனர்களுக்கு VIP/Pro பேட்ஜ் வழங்கப்படும்.

நன்றி!!




POETRY CONTEST

On the Occasion of Tamil New Year!!! We are thrilled to announce the first C2F poetry contest entitled PEN & THE PAD The C2F users are asked to take part and present their valuable contribution. They can post their poems in the forum. The theme of the poetry contest is MILESTONES AND MEMORIES. The poem submitted should not exceed 20 lines. Grades will be given according to the tone, choice of words and rhyme scheme. The link(https://www.chat2friends.com/forum/index.php?threads/poetry-contest.1098/) will be open for a week till 09/04/2022. The winners will be awarded with a VIP/PRO badge.
 
Last edited:

IceCube

Well-known member
Joined
Apr 2, 2022
Messages
21
Points
53
Dear admin,
தலைப்பில் மைல்கற்கள் என்று எதை குறிப்பிட்டு உள்ளீர்கள்? வாழ்க்கையில் மைல்கற்களாக அமைந்த விஷயங்களையா? அல்லது சாலை பயணத்தின் போது சாலையோரம் நட்டு வைக்க பட்டிருக்கும் மைல்கற்களையா?
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
✒️🖋️The Pen and The Pad📜🗒️

🥰ஓ... மனமே....!!!
எண்ணும் எழுத்தும் கண்ணும் கருத்துமாய் மாற...🤔🤔
கடந்து வந்தான் புள்ளி கோட்டை நோக்கியே சுமந்து நின்றான் வாழ்வின் பாரத்தையே...🥰
படித்து வென்றான் பட்டமென்னும் ஞானத்தையே , பட்டுத் தெளிந்தான் வாழ்க்கையின் அரும்பாடத்தையே...🥰
வேலை புரிந்தான் விடாமுயற்சியுடன்
சோலை படைத்தான் மதிய கனாவினிலே...🥰
காதல் கொண்டான் சிறு மனதையே😒
மோதல் கொண்டான் அவன் மனதுடனே...🤣
கற்றது கல்லளவே கல்லா புலமையை தேடியே ஓடும் கூட்டத்திலே ஆயிரத்தில் ஒருவனானான்... 🥰
நினைக்கும் நினைவெல்லாம் நீங்காமல் நிலைத்திட, வாழ்வில் தூங்கா மைல்கல்லை படைத்திட வித்திட்ட அன்பு நெஞ்சங்களுக்கு சமர்ப்பணம்...❤😍
 
Last edited:

IceCube

Well-known member
Joined
Apr 2, 2022
Messages
21
Points
53
📝
PEN AND THE PAD'' POETRY CONTEST
📚


📌
*மைல்கற்கள் மற்றும் நினைவுகள்*
📎



✒
ஆம்.. அது நான்தான்!..
🙏


📈
செல்லும் பாதை எங்கும் கரடுமுரடாகினும்..தடையின்றி பாய்ந்தோடும் காட்டாறு போல..
வாழ்க்கை பயணத்தில் பல தடைகளையும் தாண்டி நேர்வழி நடந்தேன்..
🚶


👍
ஒவ்வொரு 'அடியும்' எனக்கு வெற்றியின் 'மைல்கல்லாக' அமைந்த நினைவுகள்
என்
நெஞ்சைவிட்டு அகலுமோ?
☺


💪
லட்சிய பாதைகளில் குறுக்கிட்ட அவநம்பிக்கைகள் என்னும்..
தடைக்கற்கள் அனைத்தையும் தகர்த்து.. 'நம்பிக்கை' என்னும்
படிக்கட்டுகளாக மாற்றி முன்னேறினேன்..
தடைக்கற்கள் அனைத்தும் வெற்றியின் 'மைல்கற்களாக' மாறிய..
நினைவுகள்தான் என் நெஞ்சைவிட்டு அகலுமோ?
🤗


👉
பல்வேறு பாதைகள்.. பல்வேறு பயணங்கள்..
வெற்றிக்கான தேடல்களையும் .. வாழ்க்கை பயணங்கள்
எனக்கு கற்றுத்தந்த பாடங்களையும் ..என்றும் நீங்காத நினைவுகளாக..
என் நெஞ்சில் நிலைநிறுத்தி.. இன்றும் ...
லட்சிய பாதையில் பயணித்து கொண்டிருக்கின்றேன்...
வெற்றிக்கான 'மைல்கற்களை' தேடி..


🙋
ஆம்.. அது நானே தான்!.
👊
👍
 

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
செங்கதிர் போலவே பூமியின் மேலே
சட்டென நானும் கால் பதித்தேனே
சிந்தையில் தோன்றும் செயல்கள் யாவும்
இச் - சந்தையில் செய்தே தடம் பதித்தேனே
கந்தலாய் எந்தன் எண்ணங்கள் எல்லாம்
நொந்து தான் போனால் வீழ்ந்திடுவேனா?
முந்தைய முயற்சி தோற்ற வகையில்
பிந்தைய செயலை நான் செய்திடுவேனே
வெற்றி என்னும் ஒற்றை சொல்லை
பற்றி பிடிக்க போராட்டம்
கற்ற யாவும் எனை பின்தொடர
சற்றே நானும் முன் சென்றேன்
விதி எனை துரத்தி தோற்றிட வைக்க
சதி வலை பின்னி பிடித்தே இழுக்கும்
கதி என வெற்றி அதை நான் கொள்வேன்
விளக்கிற்கு வரும் விட்டில் பூச்சியாய்
புழக்கத்தில் நானும் இருந்திட மாட்டேன்
ஞாலம் சுற்றிடும் சூரியன் போல
உயர சென்று என் தடம் பதிப்பேனே!
 

Green

Beta squad member
Beta Squad
Joined
Feb 5, 2022
Messages
35
Points
38
Hey w
செங்கதிர் போலவே பூமியின் மேலே
சட்டென நானும் கால் பதித்தேனே
சிந்தையில் தோன்றும் செயல்கள் யாவும்
இச் - சந்தையில் செய்தே தடம் பதித்தேனே
கந்தலாய் எந்தன் எண்ணங்கள் எல்லாம்
நொந்து தான் போனால் வீழ்ந்திடுவேனா?
முந்தைய முயற்சி தோற்ற வகையில்
பிந்தைய செயலை நான் செய்திடுவேனே
வெற்றி என்னும் ஒற்றை சொல்லை
பற்றி பிடிக்க போராட்டம்
கற்ற யாவும் எனை பின்தொடர
சற்றே நானும் முன் சென்றேன்
விதி எனை துரத்தி தோற்றிட வைக்க
சதி வலை பின்னி பிடித்தே இழுக்கும்
கதி என வெற்றி அதை நான் கொள்வேன்
விளக்கிற்கு வரும் விட்டில் பூச்சியாய்
புழக்கத்தில் நானும் இருந்திட மாட்டேன்
ஞாலம் சுற்றிடும் சூரியன் போல
உயர சென்று என் தடம் பதிப்பேனே!
Hey wc aa2zz ❤ nicc
 

Erwen

Member
Joined
Apr 5, 2022
Messages
1
Points
23
கடந்து போனாலும் கனமாக
இருக்கிறது மனது.. கலைந்து
போனாலும் கனவாக
இருக்கிறது நினைவு..!

நினைவுகள் நல்லதாக
இருந்தாலும் சரி கெட்டதாக
இருந்தாலும் சரி நம்ம கூட
தான் இருக்கும்..
மறக்க முடியாது.

நினைவுகள் நிஜம் இல்லை
என்று தெரிந்தாலும்.. மனம்
என்னவோ நினைவுகளை
தான் நேசிக்கிறது..!

தொலைத்த இடமும்
தெரிகின்றது.. தொலைந்த
பொருளும் தெரிகின்றது..
வலியும் உணரப்படுகிறது..
ஆனால் திருப்பி மீட்கத்தான்
முடியவில்லை. எல்லாமே
நினைவுகளாக.

பிடிப்பதற்கு காரணம் இருந்தும்
பிடிக்காமல் போகிறது சிலரை..
வெறுப்பதற்கு காரணம்
இருந்தும் வெறுக்க
முடியவில்லை சிலரை..!

நிஜங்கள் தரும் சந்தோஷத்தை
விட நினைவுகள் தரும்
சந்தோஷம் அதிகம்..
அதனால் தான் நிஜங்கள்
நிலைப்பதில்லை நினைவுகள்
என்றும் அழிவதில்லை.


காலங்கள் கடந்தும் காலாவதி
ஆகிவிடாத மருந்து..
அன்பானவர்களின் அழகான
நினைவுகள் மட்டுமே..!

முகவரி இன்றி முடிந்து போன
உறவுகளிடம் தான் முடங்கி
விடுகிறது நம் நினைவுகள்.

மறதி உன்னை மனிதன்
ஆக்கும் ஆனால் நினைவுகள்
உன்னை கலைஞன் ஆக்கும்.

மீண்டும் மீண்டும்
நினைக்கத் தோன்றும் கடந்த
காலத்தின் சில நினைவுகள்
தான் நம் வாழ்வின்
வசந்த காலம்.
 
M

Mathangi

Guest
"மைல்கற்கள் மற்றும் நினைவுகள்"

தாய் ஈன்ற கருவிலே,
சேய்யாய் பல தடைகள் தாண்டி,
பெண் என்ற இனத்தில்
விண்ணுலகை எட்டி பிடிக்க
மண்ணுலகை எதிர்க்க வந்த மங்கை,
கடந்த வந்த பாதை
கண்ணீரின் ரணமாய்
காலம் கடந்த போதிலும்
நினைவின் எல்லை வரை நீங்கிடாமல்
ஒவ்வொரு துயரமும், சோதனையையும்
எதிர்த்து சாதனையை முன் வைத்து
மானிட வாழ்வில் வெற்றி படியை தொட்டு தொடர
தோல்வி வந்த போதிலும் துவண்டு வீழாமல்
எட்டிய தோல்வி யாவும்
லட்சிய பாதைக்கு எட்டும் போராட்டமாய் எண்ணி,
வெற்றி பாதைக்கு கற்று தந்த அனுபவமாய்,
என் முதல் வாகை பூவாய் அமைந்த நம்பிக்கை மைல்கல்.
 

Jokerr

Well-known member
Joined
Jan 6, 2022
Messages
99
Points
63
தனியா இருந்தேன் நான் இங்கே
வழிதெரியாமல் திரிந்தேன் நானிங்கே
தென்றலாய் வந்தாய் நீ இங்கே
மனதின் சுமை இறக்க வழி தந்தாய் நீ இங்கே
உன் இசையால் கிறங்க வைத்தாய் நீ இங்கே
மனதில் படர வைத்தாய் உன் இசையை நீ இங்கே
வாழ்வைத் தொலைத்து நின்றேன் நான் இங்கே
கரம்பிடித்து வாழ்வின் துணை நிற்பேன் நான் என்றாய் நீ இங்கே
அணைந்த விளக்காய் நின்றேன் நான் இங்கே
சுடர் கொண்டுவந்தாய் துணையாக நீ இங்கே
வாழ்வின் மாற்றம் கண்டேன் உன்னால் நான் இங்கே
பட்டமரம் துளிர்த்தது உன்னால் தான் இங்கே
தென்றல் மறைந்தது இசையும் அகன்றது வெற்றிடம் ஆனது நெஞ்சம் பற்றிய கரமும் உதறிப் போனது துளிர்த்த மரமும் பட்டுப்போக தொடர்ந்தது இங்கே
கனவாய் போன நினைவுகளுடன்
நான் இங்கு
காத்திருக்கிறேன் ....Jokerr🤡
 

BlueDiamond

Member
Joined
Apr 9, 2022
Messages
3
Points
23
Natpu illamal irupathu saathiyam endral andru ulagam alivathum saathiyamey !

Kadhalin valigalai vida, natpin vali athigam endru thozhi unnidam unarthen!

Kaaya padatha manamum illai kanneer sinthatha kangalum illai, kaayangalai agatravum kanneerai thudaikavum thozhi enaku nee indri veru yarum illai!

Pookkaluku pesa theriyathu therinthirunthaal solli vidum unnai pol oru thozhi enaku kedaithirunthaal naan thinam thinam vaadamal irunthirupen endru!!!

Etha kavithaiya eduthukonga illa kadithama eduthukonga poova pushmam nu sollalaam puipam nu sollalaam 🤪🤪🤪
 

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
844
Points
133
எட்டுத்திக்கும் என் பேர் சொல்லி கொட்டு முரசே என்பேன்!
பட்டி தொட்டி யாவும் என்
பாட்டால் உறையும் என்பேன்!!

தோட்டம் யாவும் ஓர்நாள் எனக்காய்
பூக்கள் பூக்கும் என்பேன் !
தோகை மயிலும் என்னை கண்டால்
தோகை விரிக்கும் என்பேன் !!

கோட்டை கூட என் பேர் சொன்னால்
கூவி திறக்கும் என்பேன்!
தோல்விக்கெந்தன் பேரை கேட்டால்
தொடையும் நடுங்கும் என்பேன்!!

ஓர் நாள் எந்தன் எண்ணம்
யாவும் உள்ளபடியே பலிக்கும்!
தடைக்கல் யாவும் படிக்கல்லாகி
என் வாழ்வின் மைல்கல் பிறக்கும்!!!

நம்பிக்கையுடன் The Popeye🚬🚬
 
Last edited:
Status
Not open for further replies.
Top