OceanWaves
Active member
- Joined
- Nov 24, 2023
- Messages
- 35
- Points
- 38
அதோ அந்த பறவை போல வாழவேண்டும்; இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்.
இது ஒரு பழைய பாடலின் பொன்னான வரிகள். இந்த வரிகளை நினைக்கும் பொழுது எனக்கு தோன்றும் சில கருத்துக்களை பகிர்வதில் சிறிய ஆர்வம்.
உயரத்தில் பறக்கும் பறவைகளுக்கு தடை ஏதும் இல்லை, தானாக அது சோர்வடையும் வரை. மரத்திலே கூடு கட்டி தனது குடும்பத்திற்கு தேவையான தாங்கும் இடத்தை தானாக தேடிக்கொள்கின்றது. தனது குஞ்சுகளை ஒரு குறிப்பிட்ட காலம் சென்ற பின், அவைகள் தாங்களாகவே இரைகளை தேடிக்கொள்ளும் பக்குவத்தினை கற்றுக்கொடுக்கின்றது, வளர்த்து விடுகின்றது. இத்தனை வேலைப்பளுக்கள் இருப்பினும், எந்த தடைகளும் இன்றி உயரே பறப்பதை செவ்வனே செய்வதில் எந்த குறைகளும் வைப்பது இல்லை.
நமது வாழ்க்கையும் அதனை போல தான். கஷ்டங்கள் நஷ்டங்கள் இஷ்டங்கள் எத்தனை கற்கள் இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியோடு நமது வாழ்க்கை பயணத்தை தொடர வேண்டும் என்பதை பறவைகளின் வாழ்க்கை முறை சொல்லி தருகின்றது.
மானிடனே, இந்த நிலை இல்லா உலகில் கவலைகள் மட்டும் என்ன நிரந்தரமா, நிலைமையை மாற்று, மகிழ்வோடு வாழ்வை கடந்து செல்..
என்றும் உங்கள் அன்புடன்,
கடல் அலைகள்.....
இது ஒரு பழைய பாடலின் பொன்னான வரிகள். இந்த வரிகளை நினைக்கும் பொழுது எனக்கு தோன்றும் சில கருத்துக்களை பகிர்வதில் சிறிய ஆர்வம்.
உயரத்தில் பறக்கும் பறவைகளுக்கு தடை ஏதும் இல்லை, தானாக அது சோர்வடையும் வரை. மரத்திலே கூடு கட்டி தனது குடும்பத்திற்கு தேவையான தாங்கும் இடத்தை தானாக தேடிக்கொள்கின்றது. தனது குஞ்சுகளை ஒரு குறிப்பிட்ட காலம் சென்ற பின், அவைகள் தாங்களாகவே இரைகளை தேடிக்கொள்ளும் பக்குவத்தினை கற்றுக்கொடுக்கின்றது, வளர்த்து விடுகின்றது. இத்தனை வேலைப்பளுக்கள் இருப்பினும், எந்த தடைகளும் இன்றி உயரே பறப்பதை செவ்வனே செய்வதில் எந்த குறைகளும் வைப்பது இல்லை.
நமது வாழ்க்கையும் அதனை போல தான். கஷ்டங்கள் நஷ்டங்கள் இஷ்டங்கள் எத்தனை கற்கள் இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியோடு நமது வாழ்க்கை பயணத்தை தொடர வேண்டும் என்பதை பறவைகளின் வாழ்க்கை முறை சொல்லி தருகின்றது.
மானிடனே, இந்த நிலை இல்லா உலகில் கவலைகள் மட்டும் என்ன நிரந்தரமா, நிலைமையை மாற்று, மகிழ்வோடு வாழ்வை கடந்து செல்..
என்றும் உங்கள் அன்புடன்,
கடல் அலைகள்.....