- Joined
- Oct 8, 2022
- Messages
- 2,932
- Points
- 133
மழை ஆனந்தமெனில்,
மண்வாசனை பேரானந்தம்!!
மண்வாசனை பேரானந்தமெனில்,
மழையில் நனைவது சுகம்!!
மழையில் நனைவது சுகம் என்றால்,
தலை துவட்டி விடும் மனைவியிடம்
திட்டு வாங்குவது ஆனந்தக் கிறக்கம்!!
கடிந்த மனைவி அன்புடன் தரும்,
சூடான காபி இமைகளைத் தழுவும் மயக்கம்!!
அப்படியே, உறங்க முயற்சிக்கும் போது
“இந்த நேரத்தில் எப்படி தூங்குது பாரு,
சனியன்” என்ற மனைவியின் குரல்
ஒரு ஜென் நிலைக்கு தள்ளும்.