- Joined
- Apr 8, 2022
- Messages
- 845
- Points
- 133
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்றொரு கேள்வி என்னுள்ளே
எழுந்திட என் கண் உன்னையுமே
கண்டதாய் தானே நானுணர்ந்தேன்
அத்தனை காதல் உன்னிடத்தில்
கொண்டவனாகவே நானிருந்து
அகம் புறம் இரண்டிலும் உன் அழகை
அனு அனுவாக ரசித்திருந்தேன்
இப்படி எல்லாம் இருந்த என்னை
நீ எப்படி தானோ மறந்து விட்டாய்
சொல்படி நடக்கும் பொம்மையினை
நீ சகதியில் இன்றோ வீசி விட்டாய்
கைத்தடி போல உன் காலமெல்லாம்
கூட இருக்க நான் கனவு கொண்டு
கண்களை திறந்து பார்க்கையில்
என் கனவினை கலைத்து சென்றுவிட்டாய்
என்றொரு கேள்வி என்னுள்ளே
எழுந்திட என் கண் உன்னையுமே
கண்டதாய் தானே நானுணர்ந்தேன்
அத்தனை காதல் உன்னிடத்தில்
கொண்டவனாகவே நானிருந்து
அகம் புறம் இரண்டிலும் உன் அழகை
அனு அனுவாக ரசித்திருந்தேன்
இப்படி எல்லாம் இருந்த என்னை
நீ எப்படி தானோ மறந்து விட்டாய்
சொல்படி நடக்கும் பொம்மையினை
நீ சகதியில் இன்றோ வீசி விட்டாய்
கைத்தடி போல உன் காலமெல்லாம்
கூட இருக்க நான் கனவு கொண்டு
கண்களை திறந்து பார்க்கையில்
என் கனவினை கலைத்து சென்றுவிட்டாய்