What's new

எருக்கன் செடி

Imaikanodigal

Active member
Joined
Sep 11, 2023
Messages
19
Points
33
12 ஆண்டுகள் நீரில்லாமல் வாழும் எருக்கு தெய்வீக மூலிகை எனப் போற்றப்படும், எருக்கு வளமற்ற நிலங்கள், பராமரிக்கப்படாத வயல்கள், சாலையோரங்கள் எங்கும் வளரும் 12 ஆண்டுகள் மழையே இல்லாவிட்டாலும் கூட உயிர் வாழும் ஆற்றல் கொண்டது.

அகன்;ற எதிரடுக்கில் அமைந்த இலைகளைக் கொண்டு நேராக வளரும் பாலுள்ள குத்துச்செடி ஒழுங்கற்ற அரைக்கோள வடிவில் உள்ள இதன் காய்கள் வெடித்து காற்றில் பறக்கும்போது விதைகள் அனைத்து பரவி முளைத்து செடியாக இருக்கும்

இதன் சிறப்பு
. நெல்வயலுக்கு உரமாக பயன்படுகிறது இதனை வெட்டி தண்ணீர் தேங்கி இருக்கும் இடத்தில் போட்டால் அந்த இடத்தில் களைகள் வராது. சாறுஉறிஞ்சும் பூச்சியின் தாக்குதல் இருக்காது தாவர இலைச்சாறு தயாரித்து செடிகளுக்கு தெளித்தால் பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது போரான் சத்து இதில் இருப்பதால் தென்னைக்கு இவற்றை ஒடித்து பொடுவதால் ஒல்லிக்காய், சொறிக்காய்கள் தோன்றாது. தற்சமையம் மழை பெய்து ஆங்காங்கே தண்ணீர் வயலில் நின்றுகொண்டிருக்கிறது

நம்முடைய வயல் ஓரத்தில் உள்ள வரப்பில் நிறைய எருக்கு காணப்படும்;. அவற்றை நாம் வயில் வெட்டிபோட்டு உழவு செய்யலாம் இயற்கை எரு நமக்கு கிடைக்கும்

பலவிதமான நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.

விநாயகர் சதுர்த்தி அன்று மிக மிக முக்கியமாக கருதப்படும்

எருக்கம் பால் கட்டிகளையே கரைக்கும்.

முள் குத்தியஉடன் இதன் பிசின் பால் வைத்தால் அடுத்தநாள் முள் வெளியே வந்துவிடும்.

காதுவலி உள்ளவர்கள் எருக்கின் பழுத்த இலையை விளக்கில் வாட்டி லேசான சூட்டில் இரண்டு சொட்டு காதில் விட காதுவலி பறந்துபோகும்.

எருக்கு இருந்தால் பேய் வராது என்பார்கள்

இதனுடைய நாரில் கயிறு திரித்து கைகளில் கட்டிக்கொள்வார்கள்

வீடுகளிலும் வெள்ள எருக்கம் வேரை வைத்திருப்பார்கள்
.
எருக்கின் இலை, பூ, பட்டை, வேர் அனைத்திலும் மருத்தவக் குணங்கள் கொண்டவை

இதனால்தான் ஏழைக்கு வைத்தியம் எருக்கு என்று கூறுவார்கள்images (3).jpeg
 
Top