- Joined
- Jun 14, 2022
- Messages
- 1,899
- Points
- 133
தேன் கட்டிய கூட்டில் இங்கு
தேள் வந்து குடியேறினால்,
இரண்டும் கொத்திவிட்டால்
சுவை எதில் உண்டு? விஷம் எதில் உண்டு ?என தெரிந்திடுமா?..
தண்ணீரில் செடியை நட்டு,
நீ வளர்த்தால் பூக்கள் பூத்திடுமா?
மண்ணுக்கும் பங்கு உண்டு..
மனம் அதைதான் அறிந்திடுமா?
கண்ணாடி சிலை ஒன்று,
கண்ணடித்தால் சிற்பம் ஆகிடுமா?
கல்லடி வாங்கி விட்டதால்
கலங்கி அது உடைந்திடுமா?
அன்றாட வாழ்க்கையிலே
அல்லல் பல காத்திருக்கும்.
அத்தனையும் தீ வைத்தால்
அன்றோடு அழிந்திடுமா?
பிரிவுகள் சேர்ந்து வரும்.
பிரிந்த பின் அதை தேடும்..
மனம் ஒரு குரங்கென்றால்
மரத்திலியே அது வாழ்ந்திடுமா?
இன்பம் வந்தால் ஏற்றுக்கொள்வோம்..
துன்பம் வந்தால் ரசித்துக்கொள்வோம்.
இரண்டுமே வேறில்லை..
இரண்டும் இல்லை என்றால் ,
வாழ்வும் இல்லை..
தேள் வந்து குடியேறினால்,
இரண்டும் கொத்திவிட்டால்
சுவை எதில் உண்டு? விஷம் எதில் உண்டு ?என தெரிந்திடுமா?..
தண்ணீரில் செடியை நட்டு,
நீ வளர்த்தால் பூக்கள் பூத்திடுமா?
மண்ணுக்கும் பங்கு உண்டு..
மனம் அதைதான் அறிந்திடுமா?
கண்ணாடி சிலை ஒன்று,
கண்ணடித்தால் சிற்பம் ஆகிடுமா?
கல்லடி வாங்கி விட்டதால்
கலங்கி அது உடைந்திடுமா?
அன்றாட வாழ்க்கையிலே
அல்லல் பல காத்திருக்கும்.
அத்தனையும் தீ வைத்தால்
அன்றோடு அழிந்திடுமா?
பிரிவுகள் சேர்ந்து வரும்.
பிரிந்த பின் அதை தேடும்..
மனம் ஒரு குரங்கென்றால்
மரத்திலியே அது வாழ்ந்திடுமா?
இன்பம் வந்தால் ஏற்றுக்கொள்வோம்..
துன்பம் வந்தால் ரசித்துக்கொள்வோம்.
இரண்டுமே வேறில்லை..
இரண்டும் இல்லை என்றால் ,
வாழ்வும் இல்லை..
Last edited: