- Joined
- Jun 14, 2022
- Messages
- 1,902
- Points
- 133
அடைக்காக்கும் கோழிகளுக்கும்
அன்பான தாய்மை உண்டு..
அனாதையாக நிற்கும் பிள்ளைகளுக்கும்,
அனுபவம் தருகின்ற வலிகள் உண்டு..
எத்தனை ஏமாற்றம் இருந்தாலும்
ஏற்றுக் கொள்ளும் மனங்கள் உண்டு..
ஏர் பிடித்து வாழும் ஏழைக்கும்
ஏற்றம் வரும் என்ற எண்ணம் உண்டு..
வாடி போன வயல்கள் எல்லாம்
வானம் பார்த்த பூமியில் வாழ்வதுண்டு..
வாழ்வை வெறுத்த மனிதர்களும்
வாழ நினைத்து ரசிப்பதுண்டு..
ஒருநாள் வாழ்க்கை என்று தெரிந்துமே
ஈசல்கள் ஒன்றாய் வட்டம் அடிப்பதுண்டு..
ஓட்டை விழுந்த ஓடங்களும்
ஓவியமாய் ஓடையில் ஓடுவதுண்டு..
தவறுகள் செய்து வந்தாலும்
தலைமுறை காக்கும் பிள்ளைகள் உண்டு
தண்ணீரில் வாழும் தவளைக்கும்..
தாமரை இலை மேல் காதல் உண்டு..
தடைகள் சில பல வந்தாலும்
தண்ணீரை சுமக்கின்ற நத்தை உண்டு..
தன்னுரிமை என்று வாழ்ந்தாலும்
தாழம்பூவிற்கும் வாசமுண்டு...
எத்தனை முறை விழுந்தாலும்
எழுந்தால் எதிர்ப்புகள் தொலையுமென்று
ஏற்றுக்கொண்டு வாழ்ந்தால்
ஏக இறைவனின் அருளும் உண்டு...
அன்பான தாய்மை உண்டு..
அனாதையாக நிற்கும் பிள்ளைகளுக்கும்,
அனுபவம் தருகின்ற வலிகள் உண்டு..
எத்தனை ஏமாற்றம் இருந்தாலும்
ஏற்றுக் கொள்ளும் மனங்கள் உண்டு..
ஏர் பிடித்து வாழும் ஏழைக்கும்
ஏற்றம் வரும் என்ற எண்ணம் உண்டு..
வாடி போன வயல்கள் எல்லாம்
வானம் பார்த்த பூமியில் வாழ்வதுண்டு..
வாழ்வை வெறுத்த மனிதர்களும்
வாழ நினைத்து ரசிப்பதுண்டு..
ஒருநாள் வாழ்க்கை என்று தெரிந்துமே
ஈசல்கள் ஒன்றாய் வட்டம் அடிப்பதுண்டு..
ஓட்டை விழுந்த ஓடங்களும்
ஓவியமாய் ஓடையில் ஓடுவதுண்டு..
தவறுகள் செய்து வந்தாலும்
தலைமுறை காக்கும் பிள்ளைகள் உண்டு
தண்ணீரில் வாழும் தவளைக்கும்..
தாமரை இலை மேல் காதல் உண்டு..
தடைகள் சில பல வந்தாலும்
தண்ணீரை சுமக்கின்ற நத்தை உண்டு..
தன்னுரிமை என்று வாழ்ந்தாலும்
தாழம்பூவிற்கும் வாசமுண்டு...
எத்தனை முறை விழுந்தாலும்
எழுந்தால் எதிர்ப்புகள் தொலையுமென்று
ஏற்றுக்கொண்டு வாழ்ந்தால்
ஏக இறைவனின் அருளும் உண்டு...