- Joined
- Jun 14, 2022
- Messages
- 1,902
- Points
- 133
"மனசுக்குள்ளே ஒரு புயல் வந்து தாக்கியதே..
பேரழிவா? இல்லை பேரழகா?
இதயத்திலே ஒரு இசை வந்து ஒலித்ததே..
இன்னிசையா? இல்லை இவள் இயல் இசையா?
காதல் தந்த புத்தக பரிசில்
காகிதம் எல்லாம் நான் ஆவேனா..
காகிதத்தில் கிறுக்கிய காதல் எல்லாம்
கவிதையாய் இங்கு நீ ஆனாயோ..
நெஞ்சினிலே அனல் ஒன்று அடித்திட
தடுப்பாயோ? இல்லை அணைப்பாயோ?
தத்தளிக்கும் பிள்ளை இவனோ,
சிரிப்பாயோ? இல்லை சுமப்பாயோ?
இருந்தாலும் இல்லை இறந்தாலும்
இருக்கும் உன் நினைவுகள் போதுமே..
இப்பொழுதும் எப்பொழுதும்
இதுதான் என் ஜீவன் என வாழுமே!!!
இரக்கம் கொண்ட ஏழைக்காதலை
ஏற்பாயோ? இல்லை மறுப்பாயோ?
ஏழைக்கும் இதயம் ஒன்று இருக்கின்றதே..
வாழ்வாயோ அதில் வீழ்வாயோ..
வாழ்க்கை ஒருமுறை வாழத்தான்..
வாழ்த்துக்கள் சொல்லி ஏற்பாயோ..
வானவில் வருவதை பார்த்து விட்டேன்..
பெண்ணே..
என் வாழ்க்கைத்துணை என வருவாயோ..
பேரழிவா? இல்லை பேரழகா?
இதயத்திலே ஒரு இசை வந்து ஒலித்ததே..
இன்னிசையா? இல்லை இவள் இயல் இசையா?
காதல் தந்த புத்தக பரிசில்
காகிதம் எல்லாம் நான் ஆவேனா..
காகிதத்தில் கிறுக்கிய காதல் எல்லாம்
கவிதையாய் இங்கு நீ ஆனாயோ..
நெஞ்சினிலே அனல் ஒன்று அடித்திட
தடுப்பாயோ? இல்லை அணைப்பாயோ?
தத்தளிக்கும் பிள்ளை இவனோ,
சிரிப்பாயோ? இல்லை சுமப்பாயோ?
இருந்தாலும் இல்லை இறந்தாலும்
இருக்கும் உன் நினைவுகள் போதுமே..
இப்பொழுதும் எப்பொழுதும்
இதுதான் என் ஜீவன் என வாழுமே!!!
இரக்கம் கொண்ட ஏழைக்காதலை
ஏற்பாயோ? இல்லை மறுப்பாயோ?
ஏழைக்கும் இதயம் ஒன்று இருக்கின்றதே..
வாழ்வாயோ அதில் வீழ்வாயோ..
வாழ்க்கை ஒருமுறை வாழத்தான்..
வாழ்த்துக்கள் சொல்லி ஏற்பாயோ..
வானவில் வருவதை பார்த்து விட்டேன்..
பெண்ணே..
என் வாழ்க்கைத்துணை என வருவாயோ..