What's new

ஏ. பி. ஜே. அப்துல் கலாம்

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
உப்பு காத்து வாசம்,
உடம்பெல்லாம் வீசும்,
ஒருத்தர் மேல தானே,
ஊரே வச்ச பாசம்!

காலம் கடந்து நிக்கும்,
கலாம் பத்தி பேச!!
கொஞ்ச நாளா எனக்கு,
வந்ததே ஓர் ஆச,

வறுமையில வாடி நின்ன,
குடும்பத்துல தான் பிறந்து,
வீடு வீடா நாளிதழை ,
விநியோகம் பண்ணிக்கிட்டு,

சிற்றூரில் இருந்தாலும்,
பெரிதான லட்சியத்தை !
எட்டி புடிக்கத்தான் ,
எந்நாளும் கனவு கண்டு !

கனவை நிஜமாக்க ,
கஷ்டப்பட்டு காசு சேத்து,
இஷ்ட பட்ட படிப்பை தான் ,
படிக்கணும்னு ஆச பட்ட..

ஆசானின் உதவியாலே,
அடுத்த கட்டம் போயித்தான்,
மேல படிச்சு நீயும் ,
வேகமாக வளர்ந்தீயே!

இந்திய விண்வெளி ,
ஆராய்ச்சி கழகத்தில் ,
லட்சியத்தை நீ கடக்க,
வேலை ஒன்னு
தான் கிடைக்க,


பற்றி பிடிச்சுக்கிட்டு ,
பல படிகள் முன்னேறி ,
எட்டா உயரத்தில் ,
ஏறி தான் நின்னியே !!

அக்கினி தீர்த்தமெண்ணும் ,
ஒரு ஊரில் பிறந்த நீயே ,
அக்கினி ஏவுகணை தான் !
நமக்கும் தந்தீயே ..

பிரித்வி ஏவுகணை!!
பாய்ந்து செல்லும் போதினிலே ,
உன்னுடைய பேரை தானே ,
உறக்க சொல்லும் ஊரினிலே !!

எல்லா நாடுகளும் ,
ஏளனமா பேசையிலே ,
பொக்ரான் அணுகுண்டு !!
சோதனைய தான் நடத்தி ,

அக்கால கட்டத்தில்,
இந்தியா பேர கேட்டா ,
எல்லா நாட்டினரும் ,
அலரும்படி வச்சீயே..

கற்ற மொத்தத்தையும் ,
மற்றவரும் கற்றுக்கொள்ள ,
உற்ற முடிவெடுத்து ,
ஆசனாய் நீ ஆணியே !

எங்கோ ஒரு மூலையிலே ,

நீயும் பிறந்து வந்து ,
இங்கே முதல் குடிமகன்!!

என்றே நீ ஆன கதை ,

எல்லா இளைஞர்களும்,
படிச்சு தெரிஞ்சுக்கிட்டு
எப்படியும் முன்னேற ,
வேண்டும் என நீ நினைச்சு ,

உந்தன் வாழ்க்கை அத ,
புத்தகமா தான் எழுதி ,
அக்கினி சிறகுண்ணு!
எங்க கையில் தங்தீயே ..

கனவு காணுங்கள் ,
என்னும் ஒரு மந்திரத்தை ,
காணும் யாரிடமும் ,
சொல்லித்தான் நீ இருந்த ..

நீ கண்ட கனவெல்லாம் ,
மெய்யாக்க நாங்களுமே ,
எந்நாளும் கனவோடு,
நாட்டிற்காய் தான் உழைப்போம் !!

உன்னோட மாணவனாய்,
நான் இல்லை என்றாலும்,
போதித்த உன் கருத்தை ,
ஏற்க்கின்ற சீடன் என ,

உன் சொற்கள் தான் ஏற்று ,
எந்நாளும் இந்நாட்டை ,
முன்னேற்ற பாடுபட்டு ,
நன்றாக உழைப்பேனே ..

மண் விட்டு விண்ணோக்கி ,
நீ மறஞ்சு போனாலும்,
மக்கள் மனம் நோக்கி ,

வந்த தடம் மாறாது !

மாணவர்கள் மதி காக்க ,
இருந்திட்டாய் அறிவு ஆறாய்!!
வேள்வியென உனை தந்து ,
இருக்கின்றாய் வரலாறாய்!!!


( சொற்பிழை
பொருள் பிழை
என எப்பிழை
இருந்தாலும்
தப்பில்லை
என நினைத்து
இப்பிள்ளயை மன்னிக்க வேண்டுகிறேன் . ஏதேனும் பிழை அல்லது கருத்துக்கள் இருந்தால் தெரிய படுத்தவும். பிடித்திருந்தால் உங்கள் விருப்பங்களை பதிவு செய்யும் நன்றி.)
 
Last edited:
Top