- Joined
- Apr 8, 2022
- Messages
- 845
- Points
- 133
அறியாத வயசில் நான்
புரியாத விதமாக
பல பேரு எனை கவர
ஆச தான் கொண்டேனே
மூணாம் வகுப்புல
புதுசா சேந்த புள்ள
மேல ஒரு ஆச வர
சொல்ல கூட தெரியவில்லை
ஒன்னாக ஓடி ஆடி
கண்ணா மூச்சி விளையாடி
களைப்பாகி போனாக்க
கை சோறு ஊட்டி விட்டு
அம்மா அடிச்சாக்க
கண்ண தொடச்சி விட்டு
ஆறுதலா இருந்த அவ
என் காதலினு சொல்லிக்கிட்டு
ஒருதலையா காதலிச்ச
தருதல நான் தானே
அப்புறம் நான் எத்தனையோ
பொண்ணுங்கள பாத்துப்புட்டு
எம்மனசு காதலிக்க
ஆசப்பட்ட என் கதைய
இப்போதான் சொல்லனும்னு
ஏனோ தோணுதுங்க
பள்ளி கூட இறுதியில
என் கூட படிச்ச புள்ள
மேல ஒரு காதல் வர
சொல்லத் தான் தோணவில்லை
அப்புறமா கல்லூரி
பேருந்தில் என்னோட
கூட வரும் ஒருத்தி
போனா மனம் கடத்தி
கல்லூரி காலம் வரை
என்னோட காதல் அதை
சொல்லாம நான் இருந்தேன்
இதயம் முரளி போல
மலராய் விழி மலர
பார்த்தே நா குழற
இதுவே என்னுடைய
இறுதி காதலென
சொல்ல முடிவெடுத்தே
சொன்னேன் அவளிடமும்
சொன்ன காதலையும்
அவ ஏனோ ஏற்கவில்லை
இப்படியே எந்நாளும்
என் காலம் போனாலும்
ஒருதலையா காதலிச்சு
போக வில்லை பேதலிச்சு
காதல் என்று சொல்ல
பெருசா ஒன்னும் இல்ல
மனசுல ஆசை வந்தா
மறைப்பது குற்றமில்ல
சொல்லி அடுத்தவர
காய படுத்தாம
மனசில் காதலிச்சா
அது ஒன்னும் தப்பே இல்ல
பழைய கத எல்லாம்
நினைச்சு பாக்குறப்போ
நினைத்தால் அது இனிக்கும்
லேசா மனம் வலிக்கும்
உண்மை காதலது
இன்றே புரிகிறது
ஒருதலை காதல் கொள்ள
மனமும் இனிக்கிறது ..
தோழி @shy அவர்கள் என்னுடைய காதல் வாழ்க்கை பற்றி கேட்டதால் எழுதியது . ஏதும் பிழை இருந்தால் தெரிய படுத்தவும் .
முழுக்க முழுக்க ரசிப்பதற்கு மட்டுமே எழுதினேன இவை யாரும் உண்மை இல்லை)
புரியாத விதமாக
பல பேரு எனை கவர
ஆச தான் கொண்டேனே
மூணாம் வகுப்புல
புதுசா சேந்த புள்ள
மேல ஒரு ஆச வர
சொல்ல கூட தெரியவில்லை
ஒன்னாக ஓடி ஆடி
கண்ணா மூச்சி விளையாடி
களைப்பாகி போனாக்க
கை சோறு ஊட்டி விட்டு
அம்மா அடிச்சாக்க
கண்ண தொடச்சி விட்டு
ஆறுதலா இருந்த அவ
என் காதலினு சொல்லிக்கிட்டு
ஒருதலையா காதலிச்ச
தருதல நான் தானே
அப்புறம் நான் எத்தனையோ
பொண்ணுங்கள பாத்துப்புட்டு
எம்மனசு காதலிக்க
ஆசப்பட்ட என் கதைய
இப்போதான் சொல்லனும்னு
ஏனோ தோணுதுங்க
பள்ளி கூட இறுதியில
என் கூட படிச்ச புள்ள
மேல ஒரு காதல் வர
சொல்லத் தான் தோணவில்லை
அப்புறமா கல்லூரி
பேருந்தில் என்னோட
கூட வரும் ஒருத்தி
போனா மனம் கடத்தி
கல்லூரி காலம் வரை
என்னோட காதல் அதை
சொல்லாம நான் இருந்தேன்
இதயம் முரளி போல
மலராய் விழி மலர
பார்த்தே நா குழற
இதுவே என்னுடைய
இறுதி காதலென
சொல்ல முடிவெடுத்தே
சொன்னேன் அவளிடமும்
சொன்ன காதலையும்
அவ ஏனோ ஏற்கவில்லை
இப்படியே எந்நாளும்
என் காலம் போனாலும்
ஒருதலையா காதலிச்சு
போக வில்லை பேதலிச்சு
காதல் என்று சொல்ல
பெருசா ஒன்னும் இல்ல
மனசுல ஆசை வந்தா
மறைப்பது குற்றமில்ல
சொல்லி அடுத்தவர
காய படுத்தாம
மனசில் காதலிச்சா
அது ஒன்னும் தப்பே இல்ல
பழைய கத எல்லாம்
நினைச்சு பாக்குறப்போ
நினைத்தால் அது இனிக்கும்
லேசா மனம் வலிக்கும்
உண்மை காதலது
இன்றே புரிகிறது
ஒருதலை காதல் கொள்ள
மனமும் இனிக்கிறது ..
தோழி @shy அவர்கள் என்னுடைய காதல் வாழ்க்கை பற்றி கேட்டதால் எழுதியது . ஏதும் பிழை இருந்தால் தெரிய படுத்தவும் .
முழுக்க முழுக்க ரசிப்பதற்கு மட்டுமே எழுதினேன இவை யாரும் உண்மை இல்லை)
Last edited: