- Joined
- Jul 15, 2022
- Messages
- 6,327
- Points
- 20
ஒரு மாலை நேரம்
தூவும் மழை காலம்
மேகம் துடைத்த நீல் வானம்
கடலின் கரையில் ரசிக்க நின்றேன்...
செங்காந்தள் கதிரவன்
சீரான சிற்றலைகள்
மழைத்துளிகள் வாசல் தெளிக்கும்
கருத்த மணல்...
மின்னல் ஒளியின் கீற்று
அலைகளின் சீற்றம்
ஐவிரல்களாய் தோன்றி
ஈர்த்தாள் பேரெழிலாள்
ஆழியின் பிடியில் என்னை...
என்னில் கடல் கடலில் நான்
மூச்சினை அடைத்தாள்
முகத்திரை எரித்தாள்
புன்னகை புரிந்தாள்
புது உயிர் தந்தாள்...
திசை அறியேன்
போகுமிடம் அறியேன்
காலம் அறியேன்
கடலின் ஆழம் அறியேன்...
கலங்கரை விளக்கம் தேடவில்லை
மீண்டும் கரை சேர தோன்றவில்லை
ஈர்த்த கரம் தன்னை மீளவில்லை
மீள முயன்றேனா அது நினைவில்லை!
தூவும் மழை காலம்
மேகம் துடைத்த நீல் வானம்
கடலின் கரையில் ரசிக்க நின்றேன்...
செங்காந்தள் கதிரவன்
சீரான சிற்றலைகள்
மழைத்துளிகள் வாசல் தெளிக்கும்
கருத்த மணல்...
மின்னல் ஒளியின் கீற்று
அலைகளின் சீற்றம்
ஐவிரல்களாய் தோன்றி
ஈர்த்தாள் பேரெழிலாள்
ஆழியின் பிடியில் என்னை...
என்னில் கடல் கடலில் நான்
மூச்சினை அடைத்தாள்
முகத்திரை எரித்தாள்
புன்னகை புரிந்தாள்
புது உயிர் தந்தாள்...
திசை அறியேன்
போகுமிடம் அறியேன்
காலம் அறியேன்
கடலின் ஆழம் அறியேன்...
கலங்கரை விளக்கம் தேடவில்லை
மீண்டும் கரை சேர தோன்றவில்லை
ஈர்த்த கரம் தன்னை மீளவில்லை
மீள முயன்றேனா அது நினைவில்லை!
Last edited: