- Joined
- Jul 24, 2023
- Messages
- 2,755
- Points
- 133
அந்தி சாயும் நேரம்,
அலைப்பேசியில் அவசர குரல்.
அண்ணன் தந்த பரவசம்,
அழைத்தது "எங்கே"என்று கேட்டிடவே.
வீட்டில் உள்ள முற்றத்தில்,
வீதி நிலா காயும் நேரத்திலே,
விந்தைகள் பல அரங்கேறிடவே..
சிந்தையில் ஒரு மனம் சிதைந்ததுவே.
தாயின் தயக்க குரலில்
தாவணி கட்டிய சிட்டு ஒன்று,
தகப்பனின் குரல் கேட்டு,
தடை இன்றி கட்டிய புடவை இன்று.
தங்க மகள் சீதனமாம்,
தடாலடி ஏற்பாடாம்..
உறவினர்கள் சூழ்ந்திருக்க,
உகந்த நிலை தெரியாதாம்..
கோபுரத்தில் கிளிகள் இரண்டு!
கோவிலுக்கு சென்றதுமே..
வேண்டுதல் எதற்கு என்றே ,
வேதனையில் ஒரு கிளி நொடிந்ததுவே..
சிவனை அவள் நோக்க,
சிறுபிள்ளை போல் அவள் இருக்க,
சிவந்த கண்கள் வலி
சிரிப்பை வைத்து மறைத்ததென்ன?
கனவுகள் ஆயிரம் ஆயினும்
கலைந்ததுவே கணப்பொழுதில்,
கடமைகள் முடிந்துவிட..
கவலையில் கனவுகள் அழிந்ததென்ன?
# நான் எழுதவில்லை
அலைப்பேசியில் அவசர குரல்.
அண்ணன் தந்த பரவசம்,
அழைத்தது "எங்கே"என்று கேட்டிடவே.
வீட்டில் உள்ள முற்றத்தில்,
வீதி நிலா காயும் நேரத்திலே,
விந்தைகள் பல அரங்கேறிடவே..
சிந்தையில் ஒரு மனம் சிதைந்ததுவே.
தாயின் தயக்க குரலில்
தாவணி கட்டிய சிட்டு ஒன்று,
தகப்பனின் குரல் கேட்டு,
தடை இன்றி கட்டிய புடவை இன்று.
தங்க மகள் சீதனமாம்,
தடாலடி ஏற்பாடாம்..
உறவினர்கள் சூழ்ந்திருக்க,
உகந்த நிலை தெரியாதாம்..
கோபுரத்தில் கிளிகள் இரண்டு!
கோவிலுக்கு சென்றதுமே..
வேண்டுதல் எதற்கு என்றே ,
வேதனையில் ஒரு கிளி நொடிந்ததுவே..
சிவனை அவள் நோக்க,
சிறுபிள்ளை போல் அவள் இருக்க,
சிவந்த கண்கள் வலி
சிரிப்பை வைத்து மறைத்ததென்ன?
கனவுகள் ஆயிரம் ஆயினும்
கலைந்ததுவே கணப்பொழுதில்,
கடமைகள் முடிந்துவிட..
கவலையில் கனவுகள் அழிந்ததென்ன?
# நான் எழுதவில்லை