- Joined
- May 27, 2023
- Messages
- 3,746
- Points
- 133
Sorry I deleted that thread...
மாலையிடும் சொந்தம்
முன் கதை சுருக்கம்
கும்பகோணத்தில் உணவகம் நடத்தி வருபவர்களின் குடும்ப கடைசிப்பெண் சஞ்சனாவிற்கும் கோயம்புத்தூரில் ஜவுளி வியாபாரம் செய்யும் குடும்பத்தின் வாரிசான பெங்களூரில் நிறுவனம் நடத்தி வரும் மாப்பிள்ளைக்கும் திருமணம் நிச்சயமாகிறது. சஞ்சனாவின் அம்மா மராத்திய குடும்பத்தை சேர்ந்தவர். அக்கா திருமணமானவர். தாத்தா பாட்டி என கூட்டுக்குடும்பம்.
பெண்ணும் மாப்பிள்ளையும் தினமும் பேசிக் கொண்டிருக்கின்றனர்...திருமண நாள் நெருங்கி விட்டிருந்தது.
கும்பகோணத்தில் சஞ்சனாவின் வீடு இருந்த தெருவே கோலாகலம் பூண்டிருந்தது...ஓட்டல் காரங்க வீட்டு கல்யாணம் என்று அதுவே பேச்சாக இருந்தது..
சஞ்சனாவின் அம்மா வழி தாத்தாவும் வந்துவிட்டிருந்தார். பேத்தியின் மருதாணி நிகழ்வு அன்று.. வீட்டில் பலவகை உணவு பதார்த்தங்களின் மணம்.
உணவக பிரதான சமையல்காரரின் கைப்பக்குவத்தில் மைசூர் பா, முந்திரி கேக், பூசணிக்கா அல்வா இன்னும் பல...கல்யாண மிக்ஸர் என கார வகைகள் ஒரு புறம்...அப்பா வழி பாட்டியம்மா தான் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார் ...
மருதாணி இட்டுக் கொள்ள சஞ்சனா தயாராகி இருந்தாள்...
மணப்பெண்ணை விட மற்ற பெண்களுக்கு தான் ஆர்வம் அதிகமாக இருந்தது....
அக்கா, சித்தி , சஞ்சனாவின் தோழி, குழந்தைகளென எல்லாரும் அமர்ந்து விட்டனர்...
அம்மாவை வற்புறுத்தி பார்த்தும் மருதாணி வைத்துக் கொள்ள மறுத்துவிட்டார்..
அத்தையம்மாவிடம் கேட்க பயந்து விட்டுவிட்டனர்..
மருதாணி போடுவதற்கு வந்திருந்த பெண் கேட்டாள்...
'மாப்ள பேர்ல முதல் எழுத்து போட்டுக்கலாமா..'
உச்சரித்துப் பார்த்தாள் '..ம்ம்...'
ஆங்கிலத்தில் மட்டும் முதல் எழுத்து போட்டுக்கலாம்...ஆர் என உள்ளங்கையில் கலிகிராஃபி (எழுத்துக் கலை) எனும் கலை வடிவில் வரைந்தாள்...
முழங்கை வரையிலும் , கால்களிலும் அழகாக மருதாணியிடப்பட்டது...
'அம்மூ .....'
வந்து விட்டான் அத்தையின் ஒற்றைப் புதல்வன்....
சஞ்சனாவிற்கு அப்பாடா என்று நிம்மதி அம்மூ அழைப்பில்...அவனிடம்தான் பகிர்ந்து கொள்வாள் பெரும்பாலும்...
'அழகா இருக்க டா'
4 மணி நேரம் விடனும்...ஆளாளுக்கு கவனித்துக் கொண்டார்கள்... எலுமிச்சை சாரில் சீனி நனைத்து மருதாணியில் வைத்து விட்டான் ...
'நல்லா சிவக்கும் பாரு'
அம்மா வந்து எல்லாருக்கும் உணவு ஊட்டி விட்டார்கள்...அக்காவுக்கு அத்தான் ஊட்டிக் கொண்டிருந்தார்.
சொந்தங்கள் கூடியிருந்ததில் அத்தனை மகிழ்ச்சியும் ஆரவாரமும்...
அன்றிரவு அவன் அழைத்திருந்தான்...சிவந்திருந்த மருதாணியை சிலாகித்து முகத்தையும் சிவக்க வைத்தான்....
ஒரே நாள் இருந்தது ... அதிகாலையிலேயே அழகிய பந்தல் நட்டு, நிலைக் கதவில் மாவிலை தோரணம் கட்டி லங்கரிக்கப்பட்டிருந்தது..
மாலையில் மாப்பிள்ளை வீட்டினர் வந்துவிடுவர் என அருகில் இருந்த அவர்களின் ஒரு வீட்டை ஏற்பாடு செய்திருந்தனர்..கல்யாண மண்டபத்திலும் அறைகள் இருந்தன...
விடிந்தால் கல்யாணம். சஞ்சனா திருமதி ஆகி விடுவாள்...தோழியும் சித்தி பெண்ணும் உடனிருந்தனர். அவனிடம் சரியாக பேச முடியவில்லை...செய்தி பரிமாற்றங்கள் மட்டும் புலனத்தில்.
'சஞ்சு..'
'ம்ம்..'
'சாப்ட்டியா...'
'சாப்டேன்.. . நீங்க ?'
'நம்ம சமையற்காரர் அருமையா செஞ்சு குடுத்தார்... ஆச்சுமா...'
'தூங்கலாமா...'
'இப்பவே தூங்கனுமா..'
'இனி எப்பவுமே ஒன்னாதான இருக்க போறோம். நிறைய பேசலாம். அதிகம் மொபைல் பாக்காம தூங்கு...'
'நேரத்தோட தூங்கு ..அப்பதான் முகம் நல்லா இருக்கும்....'
தோழியின் அறிவுரை வேறு..
தூங்கி விட்டாள்...
விடியலை நோக்கிய கனவுகளுடன்....
தொடரும்...
வெண்ணிலா
மாலையிடும் சொந்தம்
முன் கதை சுருக்கம்
கும்பகோணத்தில் உணவகம் நடத்தி வருபவர்களின் குடும்ப கடைசிப்பெண் சஞ்சனாவிற்கும் கோயம்புத்தூரில் ஜவுளி வியாபாரம் செய்யும் குடும்பத்தின் வாரிசான பெங்களூரில் நிறுவனம் நடத்தி வரும் மாப்பிள்ளைக்கும் திருமணம் நிச்சயமாகிறது. சஞ்சனாவின் அம்மா மராத்திய குடும்பத்தை சேர்ந்தவர். அக்கா திருமணமானவர். தாத்தா பாட்டி என கூட்டுக்குடும்பம்.
பெண்ணும் மாப்பிள்ளையும் தினமும் பேசிக் கொண்டிருக்கின்றனர்...திருமண நாள் நெருங்கி விட்டிருந்தது.
மாலையிடும் சொந்தம்
அத்தியாயம் 5
அத்தியாயம் 5
கும்பகோணத்தில் சஞ்சனாவின் வீடு இருந்த தெருவே கோலாகலம் பூண்டிருந்தது...ஓட்டல் காரங்க வீட்டு கல்யாணம் என்று அதுவே பேச்சாக இருந்தது..
சஞ்சனாவின் அம்மா வழி தாத்தாவும் வந்துவிட்டிருந்தார். பேத்தியின் மருதாணி நிகழ்வு அன்று.. வீட்டில் பலவகை உணவு பதார்த்தங்களின் மணம்.
உணவக பிரதான சமையல்காரரின் கைப்பக்குவத்தில் மைசூர் பா, முந்திரி கேக், பூசணிக்கா அல்வா இன்னும் பல...கல்யாண மிக்ஸர் என கார வகைகள் ஒரு புறம்...அப்பா வழி பாட்டியம்மா தான் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார் ...
மருதாணி இட்டுக் கொள்ள சஞ்சனா தயாராகி இருந்தாள்...
மணப்பெண்ணை விட மற்ற பெண்களுக்கு தான் ஆர்வம் அதிகமாக இருந்தது....
அக்கா, சித்தி , சஞ்சனாவின் தோழி, குழந்தைகளென எல்லாரும் அமர்ந்து விட்டனர்...
அம்மாவை வற்புறுத்தி பார்த்தும் மருதாணி வைத்துக் கொள்ள மறுத்துவிட்டார்..
அத்தையம்மாவிடம் கேட்க பயந்து விட்டுவிட்டனர்..
மருதாணி போடுவதற்கு வந்திருந்த பெண் கேட்டாள்...
'மாப்ள பேர்ல முதல் எழுத்து போட்டுக்கலாமா..'
உச்சரித்துப் பார்த்தாள் '..ம்ம்...'
ஆங்கிலத்தில் மட்டும் முதல் எழுத்து போட்டுக்கலாம்...ஆர் என உள்ளங்கையில் கலிகிராஃபி (எழுத்துக் கலை) எனும் கலை வடிவில் வரைந்தாள்...
முழங்கை வரையிலும் , கால்களிலும் அழகாக மருதாணியிடப்பட்டது...
'அம்மூ .....'
வந்து விட்டான் அத்தையின் ஒற்றைப் புதல்வன்....
சஞ்சனாவிற்கு அப்பாடா என்று நிம்மதி அம்மூ அழைப்பில்...அவனிடம்தான் பகிர்ந்து கொள்வாள் பெரும்பாலும்...
'அழகா இருக்க டா'
4 மணி நேரம் விடனும்...ஆளாளுக்கு கவனித்துக் கொண்டார்கள்... எலுமிச்சை சாரில் சீனி நனைத்து மருதாணியில் வைத்து விட்டான் ...
'நல்லா சிவக்கும் பாரு'
அம்மா வந்து எல்லாருக்கும் உணவு ஊட்டி விட்டார்கள்...அக்காவுக்கு அத்தான் ஊட்டிக் கொண்டிருந்தார்.
சொந்தங்கள் கூடியிருந்ததில் அத்தனை மகிழ்ச்சியும் ஆரவாரமும்...
அன்றிரவு அவன் அழைத்திருந்தான்...சிவந்திருந்த மருதாணியை சிலாகித்து முகத்தையும் சிவக்க வைத்தான்....
ஒரே நாள் இருந்தது ... அதிகாலையிலேயே அழகிய பந்தல் நட்டு, நிலைக் கதவில் மாவிலை தோரணம் கட்டி லங்கரிக்கப்பட்டிருந்தது..
மாலையில் மாப்பிள்ளை வீட்டினர் வந்துவிடுவர் என அருகில் இருந்த அவர்களின் ஒரு வீட்டை ஏற்பாடு செய்திருந்தனர்..கல்யாண மண்டபத்திலும் அறைகள் இருந்தன...
விடிந்தால் கல்யாணம். சஞ்சனா திருமதி ஆகி விடுவாள்...தோழியும் சித்தி பெண்ணும் உடனிருந்தனர். அவனிடம் சரியாக பேச முடியவில்லை...செய்தி பரிமாற்றங்கள் மட்டும் புலனத்தில்.
'சஞ்சு..'
'ம்ம்..'
'சாப்ட்டியா...'
'சாப்டேன்.. . நீங்க ?'
'நம்ம சமையற்காரர் அருமையா செஞ்சு குடுத்தார்... ஆச்சுமா...'
'தூங்கலாமா...'
'இப்பவே தூங்கனுமா..'
'இனி எப்பவுமே ஒன்னாதான இருக்க போறோம். நிறைய பேசலாம். அதிகம் மொபைல் பாக்காம தூங்கு...'
'நேரத்தோட தூங்கு ..அப்பதான் முகம் நல்லா இருக்கும்....'
தோழியின் அறிவுரை வேறு..
தூங்கி விட்டாள்...
விடியலை நோக்கிய கனவுகளுடன்....
தொடரும்...
வெண்ணிலா