- Joined
- Jun 14, 2022
- Messages
- 1,902
- Points
- 133
"கலாபக் காதலனோ..
கன்னி மனதை கவர்ந்தவனோ..
களவாடும் பொழுதிலே
கண்கள் தேடுமே..
காட்சியாய் வருவானோ?
உறவாக வந்தவனோ?
உள்ளத்திலே நின்றவனோ?
உறக்கங்கள் தவிக்குதே..
உதடுகள் காயுதே..
உயிர் என இருப்பானோ?
சிலை என கடப்பானோ?
சிலுவையில் என்னை அடைப்பானோ?
சிற்பம் ஒன்று நிற்குதே..
சிற்றின்பம் கலையுதே..
சிற்பி அவன் சிறந்தவனோ?
சிலம்பமாய் சிறப்பானோ?
சிலந்தி வலையில் என்னை பிணைப்பானோ?
அய்யய்யோ மனம் ஏங்குதே..
அழகாய் பூக்குதே..
அடுத்த நொடி அணைப்பானோ?..
என் கண்ணில் காதலோ?
என்னவென்று சொல்வதோ?
ஏங்கி நின்று தேடுதே..
ஏதோ ஒன்று தொலைந்ததே..
ஏன் என்று அறிவானோ?
..
கன்னி மனதை கவர்ந்தவனோ..
களவாடும் பொழுதிலே
கண்கள் தேடுமே..
காட்சியாய் வருவானோ?
உறவாக வந்தவனோ?
உள்ளத்திலே நின்றவனோ?
உறக்கங்கள் தவிக்குதே..
உதடுகள் காயுதே..
உயிர் என இருப்பானோ?
சிலை என கடப்பானோ?
சிலுவையில் என்னை அடைப்பானோ?
சிற்பம் ஒன்று நிற்குதே..
சிற்றின்பம் கலையுதே..
சிற்பி அவன் சிறந்தவனோ?
சிலம்பமாய் சிறப்பானோ?
சிலந்தி வலையில் என்னை பிணைப்பானோ?
அய்யய்யோ மனம் ஏங்குதே..
அழகாய் பூக்குதே..
அடுத்த நொடி அணைப்பானோ?..
என் கண்ணில் காதலோ?
என்னவென்று சொல்வதோ?
ஏங்கி நின்று தேடுதே..
ஏதோ ஒன்று தொலைந்ததே..
ஏன் என்று அறிவானோ?
..