What's new

கவிதைக்கு உயிர் வந்தது

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
அதே வானம்...
அசையும் மேகம்...
அலைகள் ஓடும்...
அவைகள் யாவும்...
அடுக்கி வைக்க
என் கவிதைக்கு உயிர் வந்ததே..


தூர நிலவும்..
தூவும் மேகமும்..
தூய காற்றும்..
துளிர் விட்ட மழையும்..
துளசி செடியும்...
துவக்க வேண்டும் என
என் கவிதைக்கு உயிர் வந்ததே..


அருவி வீழ்ச்சியும்,
அருகில் வரவும்..
அத்தனை அழகும்
அள்ளிக் கொடுத்த...
அன்னை பூமியும்..
அளவிலான அற்புதம் பாட
என் கவிதைக்கு உயிர் வந்ததே...


இருக்கும் மனமும்..
இரக்க குணமும்..
இசையும் இணையும்..
இன்ப ராகமும்..
இவை அனைத்தும் பாட
என் கவிதைக்கு உயிர் வந்ததே...

நிலமும் நீரும்..
நிலவின் அழகும்..
நிழல்களின் மரமும்..
நினைத்து ரசித்தும்..
நிமிடம் முழுதும்...
நிம்மதி தேடும்...
நிலை என நிகழ்ந்தும்..
நினைவில் நின்றும்...
நிஜத்தில் வாழும்..
நீயும் நானும்...
நீண்ட தூரம்..
நீந்தி செல்ல...
என் கவிதைக்கு உயிர் வந்ததே...


istockphoto-1083618866-612x612.jpg
 
Top