What's new

குட்டி கதை

AnbudanJeev

Well-known member
Joined
Apr 10, 2022
Messages
259
Points
103
இது ஒரு குட்டி கதை தான்,

ஒரு ஊருல ஒரு பருந்து இருந்தது, ரொம்ப சந்தோசமா சுத்தி பறந்து வந்தது, ஒரு நாள் அதுக்கு சாப்பாடு எதுவும் கிடைக்கவில்லை, அதனால் இன்னும் கொஞ்சம் கீழே போய் பாக்கலாம் என்று கீழே வந்தது, அப்போ அதற்கு ஒரு குட்டி குருவி கூடு தெரிந்தது, சந்தோசமா கிட்ட போய் பார்த்தது, உள்ளே பாவமா ஒரு குட்டி குருவி பசியில் அழுது கொண்டு இருந்ததால், பருந்துக்கு பாவமா தெரிந்தது, அது உடனே பறந்து சென்று குருவிக்கும் சேர்த்து சாப்பாடு தேடுச்சாம், ஒரு சிறிய ரொட்டி கிடைச்சது, அத குருவிக்கு கொண்டு வந்து கொடுக்க அங்க போச்சு, பருந்து அங்க வருவது பார்த்து அம்மா குருவி பயந்து பறந்து பக்கம் இருக்கும் மரத்துக்கு போயிட்டு, பருந்து வந்து ரொட்டியை துண்டு துண்டாக அந்த குட்டி குருவிக்கு கொடுத்து விட்டு அங்கிருந்து போயிட்டு.

கொஞ்ச காலம் போச்சு, அந்த பருந்துக்கு வயதாகி விட்டது, ரொம்ப தூரமா பறக்க முடியாமல் ஒரு மரத்தின் மீது உக்காந்து இருந்துச்சு, தாகம் எடுத்துச்சாம், ஆனால் நகர முடியல அங்க இருந்த, அங்க பருந்து பாத்துட்டு இருந்த ஒரு குரங்கு ஒரு சின்ன தேங்காய் குடுவையில் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தது, பருந்து அந்த தண்ணீரை தாகம் தீர குடித்தது.

எந்த பலனும் எதிர்பாராமல் செய்யும் ஒரு சின்ன உதவி கூட, ஒரு நாள் உங்களுக்கும் உதவும்,. 😊 😊 😊
 
Top