- Joined
- Jun 14, 2022
- Messages
- 1,902
- Points
- 133
சிறையில் அடைந்ததுமே..
சிந்தனைகள் கேள்விகள் கேட்டதென்ன?..
சில பல காரணங்கள் எல்லாம்..
சிறைவாசம் தந்தென்ன?..
புத்திக்கெட்டு போனதுமே..
புத்தகம் பல எழுதி பயனென்ன?..
நடுவில் ஒரு பக்கம் மட்டும்..
நடுநிலைமை காட்டியதென்ன?..
தவறினை ஒப்புக்கொள்ள,
தடம் இங்கு மாறியதென்ன?..
தன்னிச்சை முடிவுகள் கூட
தவிடு பொடியாய் ஆகியதென்ன?..
துணைவியின் குரல் கேட்க,
தூண்கள் தாண்டி வாடியதென்ன?..
மகள் அவள் மலர்ந்து விட்டால்,
மணம் முடித்து வைக்க மனம் ஏங்கியதென்ன?.
கைவிலங்கு போட்ட பின்னர்,
கைக்குழந்தை நியாபகமென்ன?
கைகட்டி நின்றுக்கொண்டு,
கைகளை தூக்கி பயனென்ன?
சின்னஞ்சிறு கனவு எல்லாம்,
சினம் கொண்டு அறுத்தென்ன?
சிறையில் அடைந்துக்கொண்டு,
சிகரம் தொட நினைத்தென்ன?
நீதி அவனுக்கு நிலைத்தாலும்,
நிகழ்பார்வை மாறியதென்ன?..
வேறின்றி நிற்கும் மரத்தின்,
வேதம் வேதனை ஆனதென்ன?..
சிந்தனைகள் கேள்விகள் கேட்டதென்ன?..
சில பல காரணங்கள் எல்லாம்..
சிறைவாசம் தந்தென்ன?..
புத்திக்கெட்டு போனதுமே..
புத்தகம் பல எழுதி பயனென்ன?..
நடுவில் ஒரு பக்கம் மட்டும்..
நடுநிலைமை காட்டியதென்ன?..
தவறினை ஒப்புக்கொள்ள,
தடம் இங்கு மாறியதென்ன?..
தன்னிச்சை முடிவுகள் கூட
தவிடு பொடியாய் ஆகியதென்ன?..
துணைவியின் குரல் கேட்க,
தூண்கள் தாண்டி வாடியதென்ன?..
மகள் அவள் மலர்ந்து விட்டால்,
மணம் முடித்து வைக்க மனம் ஏங்கியதென்ன?.
கைவிலங்கு போட்ட பின்னர்,
கைக்குழந்தை நியாபகமென்ன?
கைகட்டி நின்றுக்கொண்டு,
கைகளை தூக்கி பயனென்ன?
சின்னஞ்சிறு கனவு எல்லாம்,
சினம் கொண்டு அறுத்தென்ன?
சிறையில் அடைந்துக்கொண்டு,
சிகரம் தொட நினைத்தென்ன?
நீதி அவனுக்கு நிலைத்தாலும்,
நிகழ்பார்வை மாறியதென்ன?..
வேறின்றி நிற்கும் மரத்தின்,
வேதம் வேதனை ஆனதென்ன?..
Last edited: