வருஷா வருஷம் ஒருத்தன் அய்யப்பன் கோயிலுக்கு மாலை போடுறான்,
இன்னொருத்தன் திருப்பதி உண்டியல்ல கொண்டு போய் காச கொட்டுறான்,
இன்னொருத்தன் வேளாங்கண்ணிக்கு நடந்து போறான்,
இன்னொருத்தன் ஃப்ளைட் பிடிச்சு மெக்கா போறான்.
ஏன்டா இவ்வளவு காச செலவு பண்ணி, கடன் வாங்கி அங்க எல்லாம் போறீங்கனு கேட்டா, அப்போதான் கடவுள் காப்பாத்துவார்னு சொல்றான்.
மழை பெய்து வெள்ளம் வருது, வீட்டுக்குள்ளார தண்ணி வருது... கரண்ட் கட் ஆகுது, கவர்மண்ட் காப்பாத்தனும்னு சொல்றான். கவர்மண்ட் காசு கொடுக்கனும்னு சொல்றான். உதவிக்கு அக்கம் பக்கம் உள்ள மனுசங்கதான் வரானுங்க.
திரும்பவும் நார்மல் ஆகி தொழில் பண்றான், வேலைக்குப் போறான் சம்பாதிக்கிறான் - மறுபடியும் சபரிமலை, பழனி, திருப்பதி, வேளாங்கண்ணி, மெக்கா.... செலவு பண்றான்... ரிப்பீட்டு.
திரும்பவும் மழை வெள்ளம்... கரண்ட் போச்சு, கவர்மண்ட் கவனிக்கலை, காசு தரனும். உதவிக்கு அக்கம் பக்கம் உள்ளவன்தான் வரனும்.... ரிப்பீட்டு.….
கடைசி வரை இந்த கடவுள் என்ன பண்ணார்னு சொல்லவே மாட்றான்.