- Joined
- May 27, 2023
- Messages
- 3,746
- Points
- 133
அன்பூட்டி அரவணைப்பவள்
தாயாய்..
பண்பொடு பாசம் காட்டுபவள்
தமக்கை தங்கையாய்..
துவண்டிடாமல்
நம்பிக்கையூட்டுபவள்
தோழியாய்...
காதலூட்டி..
நேசம் கொடுப்பவள்...
துணைவியாய்...
உரிமையாய்
அக்கறை காட்டுபவள்
தனயளாய்....
விண்ணிலும் மண்ணிலும்... பெண்ணெனும் பெயரினை நிலைநிறுத்துபவள் சரித்திரத்தில்..
விளையாட்டிலும் கல்வியிலும்
திறமொடு புரிந்திடுபவள்
பல சாகசங்களை....
வானாக எல்லையின்றி பரந்து விரிந்து...
சூரியனின் அனலாய் சுட்டெரித்து..
நிலவாக ஒளிர்ந்து குளிர்ந்து..
நட்சத்திரங்களாய் மின்னி...
நிலமாக பொறுமை காத்து...
நதியாய் விரிந்து ஓடி...
சமுத்திரமாய் சங்கமிப்பவள்....
கவிதைகளால் இயற்றமிழாகி..
கானங்களால் இசைத் தமிழாகிறாள்...
அழகொடு அறிவுச் சுடர்விடும் ..
ஆளுமையில் அசர வைக்கும்...
படைப்பின் அற்புதம் அவள்....
அவயத்தை அவமதிக்காமல்
அகத்தில் அமைந்த அருமைகளை ஆராதிப்போம்....
அழகை விளம்பரமாக்கி வியாபாரமாக்காமல்
வியந்து பாராட்டுவோம்...
மது மாதுவென...
போதையுடன் ஒப்பிட்டு போகப்பொருளாக்காமல் ....
போற்றுவோம் பெண்மையை...
பொன்னாசை பெண்ணாசையென பேராசைகளுக்குள் முடக்காமல்...
இசையென மீட்டுவோம் இனிமையாய்...
சிரம் தாழ்ந்து கரம் குவிந்து வணங்கப்படும் சக்தியின் வடிவத்தை சிறப்பிப்போம்...
தாயாய்..
பண்பொடு பாசம் காட்டுபவள்
தமக்கை தங்கையாய்..
துவண்டிடாமல்
நம்பிக்கையூட்டுபவள்
தோழியாய்...
காதலூட்டி..
நேசம் கொடுப்பவள்...
துணைவியாய்...
உரிமையாய்
அக்கறை காட்டுபவள்
தனயளாய்....
விண்ணிலும் மண்ணிலும்... பெண்ணெனும் பெயரினை நிலைநிறுத்துபவள் சரித்திரத்தில்..
விளையாட்டிலும் கல்வியிலும்
திறமொடு புரிந்திடுபவள்
பல சாகசங்களை....
வானாக எல்லையின்றி பரந்து விரிந்து...
சூரியனின் அனலாய் சுட்டெரித்து..
நிலவாக ஒளிர்ந்து குளிர்ந்து..
நட்சத்திரங்களாய் மின்னி...
நிலமாக பொறுமை காத்து...
நதியாய் விரிந்து ஓடி...
சமுத்திரமாய் சங்கமிப்பவள்....
கவிதைகளால் இயற்றமிழாகி..
கானங்களால் இசைத் தமிழாகிறாள்...
அழகொடு அறிவுச் சுடர்விடும் ..
ஆளுமையில் அசர வைக்கும்...
படைப்பின் அற்புதம் அவள்....
அவயத்தை அவமதிக்காமல்
அகத்தில் அமைந்த அருமைகளை ஆராதிப்போம்....
அழகை விளம்பரமாக்கி வியாபாரமாக்காமல்
வியந்து பாராட்டுவோம்...
மது மாதுவென...
போதையுடன் ஒப்பிட்டு போகப்பொருளாக்காமல் ....
போற்றுவோம் பெண்மையை...
பொன்னாசை பெண்ணாசையென பேராசைகளுக்குள் முடக்காமல்...
இசையென மீட்டுவோம் இனிமையாய்...
சிரம் தாழ்ந்து கரம் குவிந்து வணங்கப்படும் சக்தியின் வடிவத்தை சிறப்பிப்போம்...