What's new

தலைவன்

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
மாட்சிமை தாங்கிடும் மனமது உடையான்

சொல்லதை கேட்டிடும் படையது உடையான்

அம்பென சீரிடும் சொற்களை கொண்டே

தெம்புடன் யாரையும் சீர் படுத்திடுவான்

முற்பகல் செய்வினை பிற்பகல் தாக்கும்

என்பதை உணர்ந்தே செயல் புறிந்திடுவான்

தப்பும் சரியும் தெரிந்த அவனோ

தப்பாய் என்றுமே வாழாதிருப்பான்

நட்புடன் எவரையும் நெஞ்சத்தில் கொள்வான்

வஞ்சகம் கொள்பவர் கண்டதும் கொல்வான்

எத்துனை துயர் வரின் கலங்கிடா நெஞ்சம்

கொண்டவன் அவனிடம் கவலையும் கெஞ்சும்

இப்படி ஒருவனை தலைவன் என்றே
சொல்வது தமிழ் மொழி கொண்ட மரபு

அப்படி நாட்டிலே பலரும் இருந்தார்
அவர்தம் தலைமையை ஏற்பது சிறப்பு!!!
 
Top