- Joined
- Apr 8, 2022
- Messages
- 845
- Points
- 133
மாட்சிமை தாங்கிடும் மனமது உடையான்
சொல்லதை கேட்டிடும் படையது உடையான்
அம்பென சீரிடும் சொற்களை கொண்டே
தெம்புடன் யாரையும் சீர் படுத்திடுவான்
முற்பகல் செய்வினை பிற்பகல் தாக்கும்
என்பதை உணர்ந்தே செயல் புறிந்திடுவான்
தப்பும் சரியும் தெரிந்த அவனோ
தப்பாய் என்றுமே வாழாதிருப்பான்
நட்புடன் எவரையும் நெஞ்சத்தில் கொள்வான்
வஞ்சகம் கொள்பவர் கண்டதும் கொல்வான்
எத்துனை துயர் வரின் கலங்கிடா நெஞ்சம்
கொண்டவன் அவனிடம் கவலையும் கெஞ்சும்
இப்படி ஒருவனை தலைவன் என்றே
சொல்வது தமிழ் மொழி கொண்ட மரபு
அப்படி நாட்டிலே பலரும் இருந்தார்
அவர்தம் தலைமையை ஏற்பது சிறப்பு!!!
சொல்லதை கேட்டிடும் படையது உடையான்
அம்பென சீரிடும் சொற்களை கொண்டே
தெம்புடன் யாரையும் சீர் படுத்திடுவான்
முற்பகல் செய்வினை பிற்பகல் தாக்கும்
என்பதை உணர்ந்தே செயல் புறிந்திடுவான்
தப்பும் சரியும் தெரிந்த அவனோ
தப்பாய் என்றுமே வாழாதிருப்பான்
நட்புடன் எவரையும் நெஞ்சத்தில் கொள்வான்
வஞ்சகம் கொள்பவர் கண்டதும் கொல்வான்
எத்துனை துயர் வரின் கலங்கிடா நெஞ்சம்
கொண்டவன் அவனிடம் கவலையும் கெஞ்சும்
இப்படி ஒருவனை தலைவன் என்றே
சொல்வது தமிழ் மொழி கொண்ட மரபு
அப்படி நாட்டிலே பலரும் இருந்தார்
அவர்தம் தலைமையை ஏற்பது சிறப்பு!!!