கோவில் நுழைகையில் நீட்டப்படும் தட்டில்
புண்ணியத்தின் கணக்கெழுதி சில நாணயம்.
அர்ச்சர்கற்கு தட்சணையாம் ஆரத்தி தட்டில்
விண்ணப்பம் செலுத்தியாக வெகு நாணயம்.
உண்டியலில் உடன்படிக்கையாம்
கடவுளுடன்
பக்தியின் பெயரெழுதி பல நாணயம்.
கொடுப்பவன் யார்?
கொண்டவன் யார்?
அடியவன் யார்?
ஆண்டான் யார்?
அஞ்ஞானமா? அகந்தையா?
உண்டியல்கள் சுமைதாங்கியா?
கோவில்கள் பாவிகளின் பாசறையா?
கடவுள் என்ன வியாபாரியா?
கல்விக்கென்று ஒரு தாள் நீட்டுங்களேன்
கலைமகள் தான் கடைக்கண் திறக்கட்டுமே.
மருத்துவ உதவி முந்தி செய்திருங்களேன்
மகேசனும் மந்தகாசமாய் மகிழ்ந்திருக்கட்டுமே.
இரத்ததானம் ஈந்திடுங்களேன்
இலட்சுமியும் கடாட்சம் காணட்டுமே.
பசித்தவனுக்குப் பாசத்துடன் படையலிடுங்களேன்
பரந்தாமனும் பேரொளியுடன் பிரகாசிக்கட்டுமே.
ஏழை குழந்தைகளின் ஏக்கங்கள் துடைத்திடுங்களேன்
அநாதியும் ஆனந்தித்து அமரட்டுமே.
இயற்கையை மீட்டு எடுத்திடுங்களேன்
இறைவனும் எங்கும் மிளிரட்டுமே.
மனம் தான்(மனிதன்) ஈவதில்
சாதியம் கடந்து
எதிலி கடந்து
உற்றம் கடந்து
உள் கடந்து உள் கடந்து உள் கடந்து கடவுளும் சிரிக்கட்டுமே❤
புண்ணியத்தின் கணக்கெழுதி சில நாணயம்.
அர்ச்சர்கற்கு தட்சணையாம் ஆரத்தி தட்டில்
விண்ணப்பம் செலுத்தியாக வெகு நாணயம்.
உண்டியலில் உடன்படிக்கையாம்
கடவுளுடன்
பக்தியின் பெயரெழுதி பல நாணயம்.
கொடுப்பவன் யார்?
கொண்டவன் யார்?
அடியவன் யார்?
ஆண்டான் யார்?
அஞ்ஞானமா? அகந்தையா?
உண்டியல்கள் சுமைதாங்கியா?
கோவில்கள் பாவிகளின் பாசறையா?
கடவுள் என்ன வியாபாரியா?
கல்விக்கென்று ஒரு தாள் நீட்டுங்களேன்
கலைமகள் தான் கடைக்கண் திறக்கட்டுமே.
மருத்துவ உதவி முந்தி செய்திருங்களேன்
மகேசனும் மந்தகாசமாய் மகிழ்ந்திருக்கட்டுமே.
இரத்ததானம் ஈந்திடுங்களேன்
இலட்சுமியும் கடாட்சம் காணட்டுமே.
பசித்தவனுக்குப் பாசத்துடன் படையலிடுங்களேன்
பரந்தாமனும் பேரொளியுடன் பிரகாசிக்கட்டுமே.
ஏழை குழந்தைகளின் ஏக்கங்கள் துடைத்திடுங்களேன்
அநாதியும் ஆனந்தித்து அமரட்டுமே.
இயற்கையை மீட்டு எடுத்திடுங்களேன்
இறைவனும் எங்கும் மிளிரட்டுமே.
மனம் தான்(மனிதன்) ஈவதில்
சாதியம் கடந்து
எதிலி கடந்து
உற்றம் கடந்து
உள் கடந்து உள் கடந்து உள் கடந்து கடவுளும் சிரிக்கட்டுமே❤
Attachments
Last edited: