- Joined
- Jul 15, 2022
- Messages
- 6,327
- Points
- 20
அலுவலக பரபரப்பிலும் இன்று காலை நான் காண நேர்ந்த ஒரு அருமையான நிகழ்ச்சி...
பொதுவாக, ஒரு ஆண்மகனை குறிக்கும் பொழுது, அவரது வீரம், வேகம் போன்ற குணங்கள் மட்டுமே பெரும்பாலும் போற்றப்படும். காலப்போக்கில், அவை மட்டுமே ஆண்களின் இயல்பு என்ற எண்ணம் நமக்குள்ளும் புகுந்துவிட்டது. நான்கு வயது சிறுவன் அழுதாலும், "ஆம்பள புள்ள அழ கூடாது டா" என்று கூறி அவன் அழுகையை அடைத்த பெற்றோர்களை நான் கண்டுள்ளேன். ஆண்களுக்கும் அழுகை, வெட்கம் வருவது இயல்பு தானே என்று தோன்றியுள்ளது எனக்குள்.
அதே சமயம், சினிமாக்களில் ஹீரோக்கள் வெட்க படும் காட்சிகளில், மண்ணில் கோலம் போட்டும், நகங்களை கடிப்பது போல மிகைப்படுத்தி சித்தரித்த காட்சிகளில் நான் முகம் சுளிக்கவும் செய்துள்ளேன். இயல்பாக வராத ஒன்றை, திணிப்பது போல காட்டும் அந்த காட்சிகள், ஆண்களுக்கு வெட்கம் வராது என்பதை வழிமொழிவது போல அமைகிறது.
ஆனால், நான் இன்று கண்ட விஜய் டிவி பாகியலட்சுமி சீரியலில், மிகவும் யதார்த்தமாக வெட்கத்தை வெளிப்படுத்தி இருப்பார், நடிகர் ரஞ்சித் அவர்கள். 45 வயது ஆகியும் திருமணம் ஆகாத ஒரு நபர், பெண் பார்க்கும் படலம் ஒன்றில் வெட்கதோடு அனைவரையும் எதிர்கொள்ளும் காட்சியிலும், பெண்ணுடன் தனியாக உரையாடும் போது, மெல்ல மெல்ல இயல்பாக அந்த வெட்கம் கரைவதையும் அற்புதமாக வெளிப்படுத்தி உள்ளார்... மற்ற கதாபாத்திரங்களும் அவரின் வெட்கத்தை ரசிப்பது அழகாக காட்சி அமைக்க பட்டு இருந்தது. ரஞ்சித் அவர்களின் கொங்கு தமிழ் கூடுதல் சிறப்பு!
ஆணின் உள்ளும் பெண்மை இருக்கின்றது என்பதை படமாக்கிய இந்த நிகழ்ச்சியை, நேரம் அனுமதித்தால் நீங்களும் பார்த்து மகிழுங்கள்...
பொதுவாக, ஒரு ஆண்மகனை குறிக்கும் பொழுது, அவரது வீரம், வேகம் போன்ற குணங்கள் மட்டுமே பெரும்பாலும் போற்றப்படும். காலப்போக்கில், அவை மட்டுமே ஆண்களின் இயல்பு என்ற எண்ணம் நமக்குள்ளும் புகுந்துவிட்டது. நான்கு வயது சிறுவன் அழுதாலும், "ஆம்பள புள்ள அழ கூடாது டா" என்று கூறி அவன் அழுகையை அடைத்த பெற்றோர்களை நான் கண்டுள்ளேன். ஆண்களுக்கும் அழுகை, வெட்கம் வருவது இயல்பு தானே என்று தோன்றியுள்ளது எனக்குள்.
அதே சமயம், சினிமாக்களில் ஹீரோக்கள் வெட்க படும் காட்சிகளில், மண்ணில் கோலம் போட்டும், நகங்களை கடிப்பது போல மிகைப்படுத்தி சித்தரித்த காட்சிகளில் நான் முகம் சுளிக்கவும் செய்துள்ளேன். இயல்பாக வராத ஒன்றை, திணிப்பது போல காட்டும் அந்த காட்சிகள், ஆண்களுக்கு வெட்கம் வராது என்பதை வழிமொழிவது போல அமைகிறது.
ஆனால், நான் இன்று கண்ட விஜய் டிவி பாகியலட்சுமி சீரியலில், மிகவும் யதார்த்தமாக வெட்கத்தை வெளிப்படுத்தி இருப்பார், நடிகர் ரஞ்சித் அவர்கள். 45 வயது ஆகியும் திருமணம் ஆகாத ஒரு நபர், பெண் பார்க்கும் படலம் ஒன்றில் வெட்கதோடு அனைவரையும் எதிர்கொள்ளும் காட்சியிலும், பெண்ணுடன் தனியாக உரையாடும் போது, மெல்ல மெல்ல இயல்பாக அந்த வெட்கம் கரைவதையும் அற்புதமாக வெளிப்படுத்தி உள்ளார்... மற்ற கதாபாத்திரங்களும் அவரின் வெட்கத்தை ரசிப்பது அழகாக காட்சி அமைக்க பட்டு இருந்தது. ரஞ்சித் அவர்களின் கொங்கு தமிழ் கூடுதல் சிறப்பு!
ஆணின் உள்ளும் பெண்மை இருக்கின்றது என்பதை படமாக்கிய இந்த நிகழ்ச்சியை, நேரம் அனுமதித்தால் நீங்களும் பார்த்து மகிழுங்கள்...
Last edited: