- Joined
- Apr 8, 2022
- Messages
- 845
- Points
- 133
பொறுமைக்கு இங்கே உவமையாய்
குலம் காக்கும் பண்பை கடமையாய்
எந்நாளும் ஏற்கும் பதுமையும்
சில நேரம் செய்வாள் புதுமையே
எத்தனை சுமை என்றாலும்
சத்தியம் காத்து உயிர் தாங்கும்
புவி போல நமை தாங்கி
காக்கும் சுமை தாங்கி
பூ உலகில் தோன்றும் பூகம்பம் போல
இடர் என்றால் பொறுமைதனை இழந்து
தீங்கிலைப்போர் தீண்டிட
பிரளமாய் உரு மாறும் மா சக்தி
உயிரை தன்னுள் சுமந்து
உலகை அதற்கும் கொடுத்து
உயிர் காக்க உயிர் வலி தாங்கும்
அன்பின் அடையாளமும் அவள்தான்
கெடுதல் செய்வோர் கண்டால்
விடுதல் இன்றி அவரை
கடிந்தே குற்றம் தடுக்கும்
மங்கை ஒரு சிங்கம்
கைதனில் வாளோடு நின்று
கண்ணிரண்டை கூர் வாளாய் தீட்டி
பார்வையாலே பகைவர் உயிரெடுக்க
பத்தினிதான் இங்கு வந்தாலோ
எண்ணும் எழுத்தும் கண் என சொல்லும்
என் தமிழ் பெண்ணை இப்படி சொல்லும்
பொன்னும் அவளே பொருளும் அவளே
சீண்டி பார்த்தல் சீறும் புயலே..
hஉண
குலம் காக்கும் பண்பை கடமையாய்
எந்நாளும் ஏற்கும் பதுமையும்
சில நேரம் செய்வாள் புதுமையே
எத்தனை சுமை என்றாலும்
சத்தியம் காத்து உயிர் தாங்கும்
புவி போல நமை தாங்கி
காக்கும் சுமை தாங்கி
பூ உலகில் தோன்றும் பூகம்பம் போல
இடர் என்றால் பொறுமைதனை இழந்து
தீங்கிலைப்போர் தீண்டிட
பிரளமாய் உரு மாறும் மா சக்தி
உயிரை தன்னுள் சுமந்து
உலகை அதற்கும் கொடுத்து
உயிர் காக்க உயிர் வலி தாங்கும்
அன்பின் அடையாளமும் அவள்தான்
கெடுதல் செய்வோர் கண்டால்
விடுதல் இன்றி அவரை
கடிந்தே குற்றம் தடுக்கும்
மங்கை ஒரு சிங்கம்
கைதனில் வாளோடு நின்று
கண்ணிரண்டை கூர் வாளாய் தீட்டி
பார்வையாலே பகைவர் உயிரெடுக்க
பத்தினிதான் இங்கு வந்தாலோ
எண்ணும் எழுத்தும் கண் என சொல்லும்
என் தமிழ் பெண்ணை இப்படி சொல்லும்
பொன்னும் அவளே பொருளும் அவளே
சீண்டி பார்த்தல் சீறும் புயலே..
hஉண