காலம்
கணிக்க முடிந்த கணக்கல்ல
கடக்க முடியா வழக்கு
ஆண்டுகள் பல ஆகியிருந்தாலும்
புது வருடம் வந்தால்
கொண்டாடி தீர்த்து கூத்தாடி மகிழ்ந்து
இத்தனை கேளிக்கையில்
என்றேனும் சிந்தித்தோமா
எத்தனை நொடிகளை கொன்று
பிறக்குது புத்தாண்டு என்று
ஒன்றின் வீழ்ச்சியில் இன்னொன்று பிறக்குமாம்
மனித்த்தை கொன்றா பிறக்குது புத்தாண்டு?
எத்தனை இன்னல் சுற்றியும் நடக்க
எளிதென கடந்து நகர்கிறோம் நாமும்
சென்னையும் நெல்லையும்
வெள்ளத்தில் மிதக்க
என் இடம் மேடென
மனமுமே நினைக்க
இப்படி எண்ணமும் தோன்றிடும்
நம்மிடம்
இருந்ததாய் சொல்லிடும் மனிதமும் எங்கே?
எந்திரம் போல ஆன நம் வாழ்வில்
மனிதம் என்னும் மந்திர சொல்லை
மனத்திலே இருத்துவோம் மனிதம் வாழ
பிறக்கட்டும் புத்தாண்டு நாமுமே ஆள..
Report to moderator
கணிக்க முடிந்த கணக்கல்ல
கடக்க முடியா வழக்கு
ஆண்டுகள் பல ஆகியிருந்தாலும்
புது வருடம் வந்தால்
கொண்டாடி தீர்த்து கூத்தாடி மகிழ்ந்து
இத்தனை கேளிக்கையில்
என்றேனும் சிந்தித்தோமா
எத்தனை நொடிகளை கொன்று
பிறக்குது புத்தாண்டு என்று
ஒன்றின் வீழ்ச்சியில் இன்னொன்று பிறக்குமாம்
மனித்த்தை கொன்றா பிறக்குது புத்தாண்டு?
எத்தனை இன்னல் சுற்றியும் நடக்க
எளிதென கடந்து நகர்கிறோம் நாமும்
சென்னையும் நெல்லையும்
வெள்ளத்தில் மிதக்க
என் இடம் மேடென
மனமுமே நினைக்க
இப்படி எண்ணமும் தோன்றிடும்
நம்மிடம்
இருந்ததாய் சொல்லிடும் மனிதமும் எங்கே?
எந்திரம் போல ஆன நம் வாழ்வில்
மனிதம் என்னும் மந்திர சொல்லை
மனத்திலே இருத்துவோம் மனிதம் வாழ
பிறக்கட்டும் புத்தாண்டு நாமுமே ஆள..
Report to moderator