சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தேன், முதல் மாத சம்பளத்தை என் கணக்கில் பார்த்த போது..
வங்கியில பணி புரிந்த தோழி யின் உதவியுடன் , அத்தனையையும் புது நோட்டுக்களாக வாங்கி கொண்டு வந்து அம்மாவிடம் கொடுத்தேன்..
அந்த நாள் இன்றைக்கும் மறக்க முடியாது.. எனது சம்பளத்தில் நான் முதலில் வாங்கும் பொருள், அம்மாவிற்காக தான் இருக்க வேண்டும் என்று சிங்காரதோப் சென்றேன்..
அழகிய cotton புடவை..
மயில் வடிவ embroidery designs..
பட்டு நிற border.. சிரித்தாலே pink நிறமாகும் அம்மாவின் முகத்திற்கு , இது அவ்வளவு அழகாக இருக்கும் என்று எனக்கு தெரியும்.. அதனை
வாங்கி விட்டு வீட்டுக்கு வந்தேன், அம்மாவிற்கு அத்தனை சந்தோஷம்..
காரணம், என்றோ ஒரு நாள் "அந்த புடவை அழகா இருக்குல" என்று அம்மா சொன்னதை மனதில் வைத்து அந்த புடவையை வாங்கி வந்தேன்.. அம்மாவிற்கு அவ்வளவு சந்தோஷம்..
(அழகாக இருக்கு என்று அம்மா சொன்ன அந்த நிமிடமே இதை வாங்க வேண்டும் என்று முடிவு செய்தேன், அப்போது நான் படித்துக் கொண்டு இருந்தேன்)
ஆனால் அதனை கட்டிப் பார்க்கும் நிலையில் அம்மா அப்போது இல்லை.. உடம்பு சரியாக ஆனதும் கட்டிக் கொள்கிறேன் என்றார்கள்..
அந்த கணம் தெரியாது, அதை அம்மா என்றைக்கும் கட்டப் போவது இல்லை என்று..
அம்மா அப்பாவின் 25 ஆம் கல்யாண நாள் நெருங்கியது.. நானும் அக்காவும், அன்றைக்கு அம்மாவிற்கு அந்த புடவையை கட்டி விடலாம் என்று plan செய்தோம்..
அன்றைக்கும் தெரியாது, அது நடக்காது என்று..
ஒரு நாள் காலை வேளையில், அம்மாவிற்கு அழகாக புடவையை கட்டி விட்டோம்.. ஆனால் அதில் அழகை பார்க்க முடியவில்லை, காரணம் அம்மா அந்த தருணம் உயிருடன் இல்லை..
என் தோழிகளுக்கு
தெரியும், அது நான் ஆசை ஆசையாக வாங்கிய புடவை என்று.. அந்த புடவையில் அம்மாவை காணும் போது, அனைவர் கண்களிலும் கண்ணீர்..
எட்டு வருடங்கள் ஆன பின்பும், எதுவும் மாறவில்லை.. உங்கள் நினைவுகள் ஒவ்வொன்றும் நெஞ்சோடு கலந்து விட்டன..
வங்கியில பணி புரிந்த தோழி யின் உதவியுடன் , அத்தனையையும் புது நோட்டுக்களாக வாங்கி கொண்டு வந்து அம்மாவிடம் கொடுத்தேன்..
அந்த நாள் இன்றைக்கும் மறக்க முடியாது.. எனது சம்பளத்தில் நான் முதலில் வாங்கும் பொருள், அம்மாவிற்காக தான் இருக்க வேண்டும் என்று சிங்காரதோப் சென்றேன்..
அழகிய cotton புடவை..
மயில் வடிவ embroidery designs..
பட்டு நிற border.. சிரித்தாலே pink நிறமாகும் அம்மாவின் முகத்திற்கு , இது அவ்வளவு அழகாக இருக்கும் என்று எனக்கு தெரியும்.. அதனை
வாங்கி விட்டு வீட்டுக்கு வந்தேன், அம்மாவிற்கு அத்தனை சந்தோஷம்..
காரணம், என்றோ ஒரு நாள் "அந்த புடவை அழகா இருக்குல" என்று அம்மா சொன்னதை மனதில் வைத்து அந்த புடவையை வாங்கி வந்தேன்.. அம்மாவிற்கு அவ்வளவு சந்தோஷம்..
(அழகாக இருக்கு என்று அம்மா சொன்ன அந்த நிமிடமே இதை வாங்க வேண்டும் என்று முடிவு செய்தேன், அப்போது நான் படித்துக் கொண்டு இருந்தேன்)
ஆனால் அதனை கட்டிப் பார்க்கும் நிலையில் அம்மா அப்போது இல்லை.. உடம்பு சரியாக ஆனதும் கட்டிக் கொள்கிறேன் என்றார்கள்..
அந்த கணம் தெரியாது, அதை அம்மா என்றைக்கும் கட்டப் போவது இல்லை என்று..
அம்மா அப்பாவின் 25 ஆம் கல்யாண நாள் நெருங்கியது.. நானும் அக்காவும், அன்றைக்கு அம்மாவிற்கு அந்த புடவையை கட்டி விடலாம் என்று plan செய்தோம்..
அன்றைக்கும் தெரியாது, அது நடக்காது என்று..
ஒரு நாள் காலை வேளையில், அம்மாவிற்கு அழகாக புடவையை கட்டி விட்டோம்.. ஆனால் அதில் அழகை பார்க்க முடியவில்லை, காரணம் அம்மா அந்த தருணம் உயிருடன் இல்லை..
என் தோழிகளுக்கு
தெரியும், அது நான் ஆசை ஆசையாக வாங்கிய புடவை என்று.. அந்த புடவையில் அம்மாவை காணும் போது, அனைவர் கண்களிலும் கண்ணீர்..
எட்டு வருடங்கள் ஆன பின்பும், எதுவும் மாறவில்லை.. உங்கள் நினைவுகள் ஒவ்வொன்றும் நெஞ்சோடு கலந்து விட்டன..