M
Mathangi
Guest
சற்றே கணம்,
சலனத்தில் மனம்,
மௌனத்தில் தத்தளிக்கிறது,
யார் அவனோ ?
பெயர் என்னவோ?
பேதையின் மனம் களவாடி சென்றானே !!
பேரழிவு ஒன்றை எனக்குள் தந்தானே !!
யார் அவனோ ?
மறுமுறை காண்பேனா?
மனம் என்னும் பேழைக்குள் பூட்டி வாழ்வேனா?
மந்திரமாய் அவன் பெயர் கூற்வேனா?
யார் அவனோ ?
நித்திரையில் வருவானோ?
நீங்காமல் நீட்டிப்பானோ?
நிரந்தரமாய் வாழ்வானோ?
யார் அவனோ?
மின்னலாய் தெரிவானோ?
மீட்டெடுத்து செல்வானோ?
மிகுதியாய் காதல் கொள்வானோ?
யார் அவனோ?
என்னவன் என்பவன் யார் அவனோ?
சலனத்தில் மனம்,
மௌனத்தில் தத்தளிக்கிறது,
யார் அவனோ ?
பெயர் என்னவோ?
பேதையின் மனம் களவாடி சென்றானே !!
பேரழிவு ஒன்றை எனக்குள் தந்தானே !!
யார் அவனோ ?
மறுமுறை காண்பேனா?
மனம் என்னும் பேழைக்குள் பூட்டி வாழ்வேனா?
மந்திரமாய் அவன் பெயர் கூற்வேனா?
யார் அவனோ ?
நித்திரையில் வருவானோ?
நீங்காமல் நீட்டிப்பானோ?
நிரந்தரமாய் வாழ்வானோ?
யார் அவனோ?
மின்னலாய் தெரிவானோ?
மீட்டெடுத்து செல்வானோ?
மிகுதியாய் காதல் கொள்வானோ?
யார் அவனோ?
என்னவன் என்பவன் யார் அவனோ?